Friday, September 1, 2006

இருக்கிறது

ஐந்து நொடிக்காக
ஐந்து மணி காத்திருக்கையில்
புரியாமலிருந்த உணர்வு
இன்று
ஐந்து நிமிடம்
அரை மணியாக
மாற அலுப்பாயானது
ஊடலாய் இருந்தவை
இரைச்சலாய் தோன்றியது
அன்று அசைப்போட
இரையாய்
பேசி பேசி சேர்த்து வைத்த
நிமிடங்கள்
இன்று கரைந்து போயின
மிச்சமாய் இருப்பது
சில கவலைகளும்
கொஞ்சம் சலிப்புகளும்தானா
யோசித்து சாத்தியிருந்த
கதவை திறக்கையில்
வெறுமையாயிருந்தால்
படபடப்பாகிறது
பார்த்த பின்தான்
இளைப்பாறுகிறது மனசு

No comments: