Thursday, September 7, 2006

மரம்

காய்க்கும் பருவத்தில்
பூக்கள் நிறைய
கொட்டுவதால் காய்ப்பு
குறைந்த மரத்தின்
கீழே
அது அழகான காட்சியென
படமெடுக்கும் சிலரும்
கொட்டிய பூக்களை
அள்ளுவது யாரென
சிலரும்
மரத்தை எட்டி
உதைத்து நியாயம்
கேட்டு சிலரும்
கொட்டியதற்கு காரணம்
அவனென இவனும்
இவனென அவனும்
இதற்க்கு கைதட்டும்
சிலரும்
வேருக்கு உரம் தேவை
யாருக்கிங்கு அக்கறை
மரத்தை மொட்டையாக்கி
பட்டு போக செய்யாமல்
நகர மாட்டான்கள் போலிருக்கு
அடுத்து வரும்
பருவத்தில் பசிக்கையில்
தெரியும் இவன்களுக்கு

No comments: