Saturday, September 23, 2006

வாத்துக்காரன் கதை

நாங்கள் கூட்டாய் வாழ்ந்தோம்
வாத்தொன்று மைதாஸை
போல் எங்களிடமும் இருந்தது
ஓற்றை ஓற்றையாய்
தங்க முட்டை
நிதமும் உண்டு
தீனியும் நிறைய
செலவும் ஆனது

எவன் தீனி கொடுப்பது
எவனுக்கு தங்க முட்டையென
சச்சரவும் வந்தது
வாத்தின் இருப்பை நிராகரிக்க
சிலர் முடிவு செய்தனர்
வாத்தின் தீனியை நிராகரிக்க
சிலர் முடிவு செய்தனர்
முட்டையை மட்டும்
எவனும் நிராகரிக்கவில்லை
அது மட்டும்
அடிப்படை உரிமையாம்

வாத்தென்னெவோ எதையும்
கவனிக்காமல் முட்டை கொடுத்தது
தீனிக்கேற்றது போல் சிறிதும்
பெரிதுமாய் முட்டை தினமுண்டு

அறிவு தனக்கு அதிகம்
வளர்ந்தாய் அதிகம்
சொல்லிக் கொண்டிருந்தவன்
அறுத்து விட முடிவெடுத்தான்
மொத்தமாய் எடுத்து
ஒற்றை நாளில் பங்கு
பிரிக்க ஏற்பாடும் செய்கிறான்

மைதாஸூக்கு பெயர் பேராசைக்காரன்
இவனுக்கு பெயர் அறிவுசீவியாம்

// வளர்ந்து வரும் தாய்பூமியை தொடர்ந்து குறை கூறி, இதன் குறைகளை நிறைகளாக்க மாற்ற என்ன செய்ய வேண்டுமென எண்ணாமல், நாட்டை உடைக்க சொல்லி பேசி அறிவுஜீவியாக மாற நினைபோரை நினைத்து எழுதியது//

No comments: