Thursday, September 21, 2006

வழி

அழகாய் அடுக்கி வைத்த
வார்த்தைகளில் கோலமிட்டு
நிஜங்களை நிராகரிக்கும்
மாயவித்தை முன்னகர்த்தி
ஏறி மிதிக்கப்பட்டாலும்
வாங்கி வந்த
வரமென பார்த்து
சுயம் மறக்கும்
போதாத வாழ்க்கைதான்
வாழ்வின் தேடலென
கொடுக்கும் எதுவும்
தேவையில்லை இங்கு
ஒற்றை வார்த்தையில்
உலகலசும் தத்துவமுண்டு
வலியாய் வர்ணணையற்று
தனித்து இருக்கும்
ஏன் என்ற நெம்புகோல்
கொண்டு சுயம்
புரட்ட வழியுண்டு

No comments: