Monday, September 4, 2006

வரிகளால் மட்டும் கட்டப்படுவதில்லை

கவிதை வரிகளால்
மட்டும் கட்டப்படுவதில்லை
கடிகார முட்களால்
நேற்றைக்கும் நாளைக்கும்
நகர்த்தப்படும்
கவிதையின் பக்கங்கள்
இதமாய் இளகியதாய்
ரசிப்பதாய் ரசிக்கப்படுவதாய்
இருப்பதோடு
வலிகளாய் வருத்தங்களாய்
எதிர்பார்ப்புகளாய் ஏமாற்றங்களாய்
கோபமாய் மாற்றம்
கொள்வதும் உண்டு
பக்கங்களெங்கும் பரவும்
முற்றுப்புள்ளி இல்லாத
இந்த கவிதை அவளால்
மட்டுமே எனக்கு
சாத்தியமானது

No comments: