Friday, September 1, 2006

அழகாய்தான் இருக்கிறாள்

எரியும் கண்களோடு
தூக்கம் தவறிய
ஓரிரவில்
ரௌத்திரம் பழகிக்
கொண்டிருந்த அவளும்
மௌனமாய் ஒற்றை
தலைவலியில் நானும்
சுட சுட
பேசுகையில் அவள்
அழகாய்தான் இருக்கிறாள்
தலை முடியை மட்டும்
இன்னும் தூக்கிக்
கட்டலாம்.

No comments: