Tuesday, April 24, 2007

மணிசங்கர் ஐயர் உரை- இ.எக்ஸ்பிரஸில் இருந்து

மணி சங்கர் ஐயர் பற்றி பெரிய கருத்தெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை.
இன்று இந்தியன் எக்ஸ்பிரஸில் அவர் இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் நிகழ்ந்த கூட்டத்தில் ஆற்றிய உரையை படித்தேன். அவரது உரையியின் உள்ளடக்கத்தில் முற்றிலும் ஒப்புதல் இல்லாவிட்டாலும் அவரது கருத்துகள் சில கவனத்தில் கொள்ளக் கூடியவையே.

உரையின் முழுவதினை காண இங்கு செல்லுங்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், மனித வள வளர்ச்சியும் தனிதனியே இயங்குவதை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மனித வள மேம்பாட்டிற்கு என்ன செய்ய வேண்டுமென அவர் குறிப்பிடவில்லை.

இன்னமும் 700 மில்லியன் இந்திய மக்களை ்பொருளாதார சீர்திருத்தங்கள் தொடமால் பொருளாதார பின்னடைவில் இருப்பாதாக என அவர் கூறியிருக்கின்றார். 50 மில்லியன் மக்களே இந்த புதிய பொருளாதார கொள்கையால் பலனடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். என் ஐயம் என்னவெனில் இப்போது இருக்கும் 700 மில்லியன் 750 மில்லியனாக இருந்திருந்து எல்லோரும் பொருளாதார ்பின்னடைவில் இருப்பதைதான் அவர் விரும்புகிறாரா என்ன? எந்த ஒரு திட்டமும் ஒரு புள்ளியிலிருந்து தொடங்கியே வட்ட வடிவில் விரியும். இன்று வட்டத்திற்குள் 50 மில்லியனாக இருப்பவர்கள் எல்லாம் பிறக்கும் போதே வெள்ளி ஸ்பூனோடனு பிறந்தவர்கள் எனற வகையிலேயே மணிசங்கர் பேசுவதாக தெரிகின்றது. இந்த 50 மில்லியனில் நடுத்தர, கீழ்தட்டு வர்க்கத்தில் இருந்தவர்களும் நிறைய உண்டு என்பது அவருக்கு தெரியாதா என்ன? வரும் ஆண்டுகளில் சீர்படுத்தபட்ட ்பொருளாதார திட்டங்களை தொடர்ந்து பேணுவதன் மூலம் 50 மில்லியனை 100 மில்லியனாகவும் மாற்றலாம்.

சிங்குர், நந்திகிராமில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் வந்த பிரச்சனை புத்ததேவ் பட்டார்சார்யாவின் நிர்வாக கோளாறே தவிர திட்டத்தின் குறை அல்ல. மணி சங்கர் தமிழ்நாட்டில் சீராக நிறுவப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை மறந்து விடுகின்றார். நிர்வாக கோளாறு திட்டத்தின் குறையாக முன் வைக்கப்படுகின்றது. ஊழலும், முரட்டுதனமான நிர்வாகமும் கடவுள் வழிபாடு, ஐமின் வழிபாட்டில் ஊறி போன இந்திய கலாச்சாரத்தின் எச்சமே. மக்கள் ஆட்சி , மக்கள் உரிமை என்ற கருத்தியல்களை கொண்ட கலாச்சார மாற்றமே இதற்கு மாற்று. இடைவிடாது நந்திகிராம் முன் நிறுத்தி எதிர் மறை பிராச்சாரம் கட்டவிழ்த்து தமிழகத்தில் சிறப்பான முறையில் நிறுவப்படும் சிறப்பு பொருளாதார மண்டல திட்டங்களை ்பின் நகர்த்துவது ஒரு வகை பிரச்சார தந்திரமே.

கோடிக் கணக்கில் திட்டங்களை போட்டு ்வறுமை அகற்ற ்நினைப்பதை விட திட்டங்கள் வழியே செல்வத்தை ்பெருக்க நினைப்பதே முக்கியமானதாகும். மான்யங்களும், உதவிகளும் படிக்கட்டுகளாக அமைந்து கீழ்தட்டு மக்களை உயர்த்த வேண்டுமே தவிர இரக்க வழி பிச்சையாக கருதப்படும் மேல்தட்டு எண்ணங்கள் தகர்க்க பட வேண்டும். ஏழை இருக்கின்றான், வறுமை இருக்கின்றது என மூலையில் உட்கார்ந்து புலம்பி ஆவது என்ன? எப்படி செல்வத்தை அவ்விடத்திற்கு கொண்டு செல்வது , அதறகான வழிகள் என்ன? என யோசிக்க தெரிய வேண்டும்.

7000 கோடி செலவில் ஒலிம்பிக் இந்தியாவில் நடப்பதை அமைச்சர் தவிர்த்து இருக்கின்றார். இது பாரட்ட பட வேண்டியதே. இந்த பணத்தை வைத்து ஒலிம்பிக் திருவிழா நடத்தி கிழிப்பதை விட இதை கொண்டு உருப்படியாக ஏதனும் செய்யலாம் என்பதை அவர் சொல்லியிருக்கின்றார். தேசிய பற்றும், பெருமையும் மனித வள குறீயிட்டில் இந்தியா மேல் வளர்வதில் உள்ளதே தவிர 7000 கோடி பணத்தில் ஒலிம்பிக் நடத்துவதில் இல்லை.

பணம் சேர்க்க நினைப்பதும், தொழில் முனைவதும், தொழிலில் வளர்வதும் குற்றமே என்ற மனப்பாங்கேதான் இது போன்ற பேச்சுகளில் தென்படுகின்றது. தொழில்களுக்கான முறையான விதிகளை உருவாக்குவது, அதை ஒழுங்காக பேணுவது, திறந்த , எளிய சட்ட அமைப்புகள் போன்றவற்றை உருவாக்கி நடைமுறை படுத்தும் போது இது போன்ற மனப்பான்மை குறையும்.

No comments: