Friday, April 20, 2007

ஊர்

ரயிலோசை சடசடக்க
எழ வேண்டியிருக்கும்
புழுக்கம் நிறைந்த இரவின்
மிச்சம் கண்ணிலும் என்னிலும்
கட்டில் ஒட்டும் மேசை
காலில் தட்டாமல் எழ முடிவதில்லை

மெதுவாய் நகர்ந்து திண்ணைக்கு வர
ஆசைக்கு வைத்த வேப்பமர காற்று
ஆள் தழுவ
பக்கத்தில் துணைக்கு
பழைய புத்தமொன்றும் காப்பி தண்ணியும்
மதிய சமையலுக்கு
காய்தேடி வீராசாமி கடைக்கு நடை
எத்தனை வருடம் ஆனாலும்
இன்னும் பிடித்திருக்கிறது
எதையோ சுமந்து இறக்கி வைக்கும் நினைப்புண்டு

ஊருக்கு வரும் தினங்களுக்கான
ஊஞ்சல் உள்ளுக்குள் ஆடிக் கொண்டே இருக்கின்றது

No comments: