Friday, April 20, 2007

இந்திய அணியில் அதிரடி மாற்றம்

உலக கோப்பையில் ரன் மற்றும் விக்கெட் எதுவும் எடுக்காத காரணத்தினால் இர்பான் பதான் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் காரணமாக இந்திய அணி இனி வரும் போட்டிகளில் அபாரமாக விளையாட வாய்புள்ளதாக இந்திய கிரிக்கெட் போர்ட் எதிர்பார்க்கின்றது. ;-)

விளம்பரங்களில் விக்கெட்டுகளையும், ரன்களையும் அடித்து குவித்து
அணிக்கு தூணாய் நின்று மானம் காத்த சிங்கங்களான சேவாக், தோனி, சாகிர் கான் போன்றவர்கள் தங்களது வீரத்தை காட்ட பங்களாதேஷ் செல்கிறார்கள்.

அணியில் அரசியல் குழப்பம் இருப்பதால் உதவி கேப்டன் அறிவிக்கபடவில்லை. அரசியலும் ஊழலும் இல்லாமல் கிரிக்கெட் இருந்தால் பாரத கலாசார கேடாக போய் விடும் அபாயத்திலிருந்து அணி காப்பாற்ற பட்டதை கண்டால் மகிழ்வாக உள்ளது.


சுமாராக நெடுநாளாக விளையாண்டு கொண்டு ஏனென தெரியாமல் அணிக்குள் அவ்வப்போது நுழையும் தினேஷ் மாங்கியாவும், அதிரடி ஆட்டக்காரர் என தன்னை எண்ணிக் கொண்டிருக்கும் கவுதம் காம்பிரும் மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சுழல் பந்து, வேகப்பந்து, சுவிங் ஆகும் பந்து தவிர மற்ற பந்துகளை அடித்து துவைக்க போவதாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் உறுதியுடன் இறுப்பது மன ஊக்கத்தை அளிக்கின்றது.

No comments: