Tuesday, April 24, 2007

தகவலறியும் சட்டமும் அரசு அதிகாரிகளும்

தகவலறியும் சட்டத்தினால் சாமான்யர்களுக்கு பயனிருக்குமா என்ற கேள்வி வருகின்றது. தகவலறியும் சட்டம் பயன்படுத்த அமைப்பு ரீதியான முறையே சரியாக இருக்கும். அமைப்பும் வலுவானதாக இருக்க வேண்டும். தனி மனிதனாக அரசு அதிகாரிகளோடு மோதும் போது அதற்கான பிரச்சனைகள் உண்டு.

யூனியன், தொழிளாளர் நலம் எல்லாம் பேசும் போது வாய் கிழியும் அரசு அதிகாரிகள் கை நிறைய காசு வாங்குவதும், அதிகார கொம்பின் உச்சாணியிலிருந்து மிரட்டுவதும் அன்றாடம் பார்க்க கூடியதே. மிரட்டுதல் எளிது. எல்லோருக்கும் பலவீனம் உண்டு. கண்டுபிடிப்பது குதிரை கொம்பு கிடையாது. மத்திய தர வர்க்கத்திற்கு வேலை, குடும்பம் இரண்டுந்தான் பொதுவாக முக்கியமானதாக இருக்கும். தகவலறியும் உரிமையை தனிமனிதன் பயன்படுத்தும் போது இந்த இரண்டை குறித்த அச்சத்தை சுலபமாக அரசு அதிகாரிகள் அவரிடத்து கொண்டு வர இயலும். பாதுகாப்பு கேட்டு தனிமனிதன் ஒரு இழவும் செய்ய இயலாது. காவல் துறை நண்பன் கதையெல்லாம் எழுத்தளவில்தான்.

ரேஷன் கார்ட் விநியோகத்தில் நடக்கும் அலுவலக முறைகேடுகளை குறித்து தகவல் அறியும் சட்டம் வழி அனுகிய ஒருவரின் கதையை தகவல் அறியும் சட்டம் குறித்த மத்திய அரசின் வலைப்பதிவில் படித்தேன். சப்பை கட்டான காரணங்களும் இழுத்தடிப்புந்தான் அங்கு பதிலாக இருந்தது. கிராம புற அதிகாரிகள் அதிக தொடர்பில்லாமல் இருப்பவர்கள். அங்கேயே இந்த கதையென்றால், நகர் புறங்களை நினைத்து பார்த்தால் பயமாக இருக்கின்றது.

No comments: