Tuesday, May 29, 2012

பகுத்தறிவு

பகுத்தறிவு என்பது புறவயமான  தர்க்கத்தினை மட்டுமே அடிப்படையாக கொண்ட ஒரு அணுகுமுறை என்று ஒரு வழக்கு உண்டு . இந்த வரையறை பகுத்தறிவின் வெளிபாடினை குறுக்குவதாய் நினைகின்றேன். பகுத்தறிவு என்பது புறவய சுழலில் விழிப்புணர்வினை தேடும் ஒரு பயணம். புறவய சுழலில் விழிப்புணர்வு என்பது ஒரு மனிதன் தனது உரிமையையும் , உணர்வையும் புரிந்து கொண்டு தனது சக மனிதனது  உரிமையையும் ,உணர்வினையும் மதிக்க கற்று கொள்ளல் என்று நினைகின்றேன்.

 இந்த பயணத்தின் பொது தருக்கம் கருவியாக உதவுகின்றது. தருக்கம் ஒரு கருவியே. தருக்கம் விளக்க முடியா இடங்கள் உண்டு. பகுத்தறிவு அந்த இடைவெளிகளிக்கான  தருக்கங்கள் இன்னும் உருவாக்க படவில்லை, ஆனால் அவ்வகை தருக்கங்கள்  சாத்திய படும் என  அந்த தருக்கங்களை அமைக்கும் முறையை பகுத்தறிவு தேடுகின்றது. அறிவின் முடிவின்மை எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்கு அந்த முடிவின்மையை தேடும் தருக்கங்கள் அமைக்க செல்லும் பயணங்களும் உண்மை.  நிருபனவாத  அறிவியலும் ,தொழில்நுட்பமும் அந்த தருக்க அடிப்படை கருவிகளே. இந்த கருவிகள் தொடர் மேம்பாட்டின், சுய உடைப்பின் மீதே அடுத்த தளத்துக்கு செல்கின்றது. தருக்கம் தீர்ந்து போவதால் பகுத்தறிவு தீர்ந்து போவதில்லை, புதிய தருக்கங்களை உருவாக்குவதில்தான் பகுத்தறிவின்  வளர்ச்சி  உள்ளது.
நம்பிக்கை அடிப்படையிலான மதம் தங்களது கருத்துகளை சக மனிதனது உரிமையையும் , உணர்வினையும் ஒடுக்க பயன்படுத்தும் தருணங்களிலே மோதல் வருகின்றது. ஒரு உயர்ந்த குடிமை சமுகமே பகுத்தறிவின்  வழியாய்  இருக்க முடியும். அந்த வழிகள்   புனிதமானவை அல்ல. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. உடைக்க உடையாதவை அல்ல. அதன் பயன்பாட்டாளர்கள் நுண்ணறிவு கொண்ட ஞானிகள் அல்ல. அது இருக்க பட வேண்டிய இடம் ஆலயங்கள் அல்ல.
பகுத்தறிவு அனைவருக்கும் பொது. எனவே அது ஆவணபடுத்துதல்,அளவீடு செய்தல், அனைவர்க்கும் பொதுவான கல்வி அமைப்பினை பரவலாக்குதல் போன்ற செயல்முறைகளை தனது நெடிய பயணத்தில் துணையாய் கொள்கின்றது. இதில் செயல் முறைகளில் குறைபாடுகள் உண்டு , ஓர வஞ்சனை உண்டு ,   ஏன்  என்றால் பகுத்தறிவு சகல மானுடரின் பங்கையும் கோருகின்றது. அனைவரும் ஒரே செயல் திறம், சிந்தனை கொண்டிருபதில்லை. தனி மனித குறைபாடு பகுத்தறிவின் குறைபாடாய் தெரியலாம், ஆனால் இந்த குறைபாடுகளை ஒத்து கொள்ளவவும் பகுத்தறிவு அமைப்பு மறுப்பதில்லை

No comments: