Monday, January 22, 2007

கிராமபுற உள்கட்டமைப்பு மேம்பாடு

கிராமங்களில் உள்கட்டமைப்பை பெருக்குவதற்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை முதல்வர் கருணாநிதி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.தமிழ்நாட்டில் உள்ள 12,618 கிராம பஞ்சாயத்துகளும் வரும் ஐந்து ஆண்டுகளில் மேம்பாடு அடைய இந்த திட்டத்தின் கீழ் 2500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் 2500 கிராம பஞ்சாயத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு பஞ்சாயத்து அமைப்புக்கும் 20 லட்சம் ரூபாய் வழங்கப்படுகின்றது.

இந்த 20 லட்சத்தில் முதல் 15 லட்சம் சாலை வசதிகள், குடிநீர் வசதி, சாக்கடை வசதிகள், சுடுகாடு, நூலகம் போன்ற வசதிகளுக்கு பயனபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து லட்சம் பிற திட்டமிடா செலவுகளுக்கு பயன்படுத்தப்படும். உள்கட்டமைப்பை கிராமங்களில் மேம்படுத்துவதன் மூலம் நகரங்களுக்கு வரும் மக்களை குறைக்கலாமென்றும் முதல்வர் கருணாநிதி அவர்கள் கூறியுள்ளார்கள்.உள்கட்டமைப்பு உயர்த்துதல் மக்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தும்.

சிறந்த பஞ்சாயத்து விருது ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 15 பஞ்சாயத்துக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது.

நிறைய நல்ல திட்டங்கள் அரசின் உத்தரவிலிருந்து மக்கள் பயன்பாட்டிற்கு செல்வதற்குள் காணாமல் போய்விடுகின்றது. அதை தடுக்க இது போன்ற திட்டங்களில் பணம் செலவிடுதற்கான கணக்கு வழக்குகளை பொதுமக்கள் பார்வைக்கு எளிதில் படுமாறு வைக்கலாம்.

நன்றி; தி ஹிண்டு

No comments: