Tuesday, January 30, 2007

பட்டாம்பூச்சி விளைவுகள்


Chaos Theory
Originally uploaded by jurvetson.
எங்கோ ஏதோ நடக்குது எனக்கென்ன என்ற உயரிய கொள்கை(!) நம்மில் பெரும்பாலோருக்கு உண்டு. எனக்கென்ன சித்தாந்தம் எல்லா நேரமும் வேலை செய்யாது என்பதற்கு அறிவியல் பூர்வமான விளக்கமாய் பட்டாம்பூச்சி விளைவுகளை கூறுவார்கள். காற்றில் நகரும் ஒரு பட்டாம் பூச்சியின் இறகு துடிப்பு எனும் சிறு நிகழ்வு பெரும் சூறாவளியை உண்டாக்கும் பெருநிகழ்வின் முதற்படியாகவும் இருக்கலாம். பனி மலைகளில் சிறு பனி உருண்டு விழும்போது பெரிதாவது போல் சிறு நிகழ்வுகள் பல தொடர்ந்து நிகழ்ந்து பெருநிகழ்வாக மாறுகின்றன.

எதிர்காலம் என்பது நிகழ்கால நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. எந்த ஒரு சிறு செயலும் சமூகத்தில் ஏற்படுத்தும் அதிர்வுகள் சில நேரம் வெளிப்படையாகவும் , சில நேரம் மறைமுகமாகவும் பரவுகின்றன. அந்த பரவுதலின் தாக்கம் அடுத்த அடுத்த நிகழ்வுகளின் துவக்கத்தில் சேர பரவுதலின் விட்டம் அதிகரிக்கின்றது.

மில்லியன் விந்தனுக்களில் ஒன்று சினைமுட்டையுடன் சேர கரு உருவாகின்றது. இந்த சேருதல் என்னும் சிறு நிகழ்வு ஒரு உயிரை உருவாக்குகின்றது. அந்த உயிரின் உருவாக்கம் சமூகத்தில் தொடர்ச்சியான நிகழ்வுகளை உருவாக்குகின்றது. சில விந்தனுக்கள் முட்டையுடன் சேரும் சிறு நிகழ்வு ஏற்படாமல் போனால் உலகில் பல மாற்றங்கள் உருவாகியிருக்கும். போர், நாட்டின் வளர்ச்சி, அமைதி, அறிவியல் வளர்ச்சி, வன்முறை வெறியாட்டம்,ஜாதிக் கட்சி போன்ற பல நிகழ்வகளும் ஒரு சிறு நிகழ்விலிருந்தே தோன்றுகின்றன.

கேயாஸ் கருத்தாக்கம் எனப்படுவது கணிக்கமுடியாத,தொடர்ச்சியான, குறிப்பிட்ட இடைவெளி இல்லாத மாறிக்கொண்டே இருக்க கூடிய சூழல்களை அவதானித்து அவற்றை கணித வடிவப்படுத்தும் முயற்சியாகும். இந்த கருத்தாக்கத்தில் பட்டாம் பூச்சி நிகழ்வு குறிப்பிடதக்க ஒன்றாகும்.

1 comment:

கப்பி | Kappi said...

நல்ல பதிவு நிர்மல்!

என்னால் இந்த கேயாஸ் கருத்தாக்கத்தை கணித வடிவம், கட்டுரைகளை விட சில திரைப்படங்களைக் கொண்டுதான் புரிந்துகொள்ள முடிகிறது :))