Tuesday, January 2, 2007

மேய்ச்சல் 7


Bamboo Grove, originally uploaded by d'n'c.

மூங்கில் உற்பத்தியில் இந்தியா உலகில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. ஆண்டொன்றுக்கு 135 மில்லியன மெட்ரிக் டன் உற்பத்தி செய்கிறோம். தேசிய மூங்கில் கழகம் மூங்கிலால் செய்யப்பட்ட துப்பாக்கி துளைக்காத உடைகளை செய்வதில் ஈடுபட்டுள்ளது. இப்போது புழக்கத்தில் உள்ள உடைகளின் விலை ரூபாய 1.5 லட்சம் விலை ஆகிறது. இது போன்ற மூங்கில் ஆடைகளின் விலை ரூபாய 50000 மட்டுமே. இந்த உடை 5 கிலோ எடை உள்ளது. இந்த உடை இப்போது ஏகே 47 மற்றும இன்சா துப்பாக்கிகளுக்கு எதிராக பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. இது போன்ற உள்நாட்டு அறிவியல் தொழில்நுட்ப உருவாக்கங்கள் நம்பிக்கையை வளர்க்கின்றன. தேசிய மூங்கில் கழகம் தொடர்ந்து மூங்கிலின் புதிய பயன்பாடுகளை குறித்த ஆய்வுகளை செய்து வருகின்றது.


கந்தசாமி அவர்களின் சாயாவனத்தில் கதையின் நாயகமான வனத்துடன் சிதம்பரம் போராடுகையில் வனத்தின் ஆயுதத்துள் மூங்கிலும் உண்டு.




வனவாசிகளின் உரிமைகளை நிலைநாட்டும் முக்கிய சட்டங்களில் ஒன்று கடந்த வருட இறுதியில நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு மனதாய் நிறைவேற்றப்பட்டுள்ளது. வன உரிமை சட்டம் 2006 எனப்படும் இந்த வரைவு சென்ற வருடத்திய சட்டமான வன உரிமை சட்டம் 2005-ல் குறிப்பிடதக்க மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. வனங்களில் வாழும் பூர்வகுடிகளின் வன உரிமையை நிலைநாட்டுவதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்ற வருட சட்டத்தில் அக்டோபர் 1980க்கு முன்பு மூன்று தலை முறைகளாக வனங்களில் வாழ்ந்தவர்களுக்கு நில உரிமை என்றிருந்த சட்டம் இநத முறை டிசம்பர் 2005க்கு முன்பு மூன்று தலைமுறைகள் என்று மாற்றப்பட்டுள்ளது. நில உட்ச வரம்பு அதிக பட்சம் 2.5 ஹெக்டேருக்கே உரிமம் என்றிருந்ததும் 4 ஹெக்டேராக உயர்த்தப் பட்டுள்ளது.

சுற்றுபுற சூழல் குழுக்களும், வனவிலங்கு பாதுகாவலர்களும் இந்த சட்டத்தினால் காடுகளுக்கு பாதிப்பு வரும் என ஐயம் தெரிவித்துள்ளனர். காடுகளில் அதிகரிக்கும் மக்கள் தொகை காடுகளின் மரங்களையும், மிருகளையும் பாதிக்கும் என்பது அவர்களது கருத்து.

இரு தரப்பினரை பார்க்கும் போது யார் சொல்வதும் தவறாய் இராது. அதற்கென ஒரணியும் எடுக்க இயலாது.

சரியாக இருக்கலாம்
தவறாக இருக்கலாமென
இருநிலை பொழுதில்
சிக்கி சீரழிகையில்
மூன்றாம் நிலை
குருடனாய் பார்க்கிறது

1 comment:

கப்பி | Kappi said...

//சரியாக இருக்கலாம்
தவறாக இருக்கலாமென
இருநிலை பொழுதில்
சிக்கி சீரழிகையில்
மூன்றாம் நிலை
குருடனாய் பார்க்கிறது//

:)