Monday, January 8, 2007

சாலைகள்

உள் கட்டமைப்பு உயர்த்துதலின் ஒரு பகுதியாக தமிழக அரசு 303 கோடி ரூபாய் கிராம்புற சாலை மேம்பாட்டிற்காக அறிவித்துள்ளது. மண் சாலைகள் தார் சாலைகளாக மாறும் சாத்தியம் இதனால் வர உள்ளது. வலைதளங்களை தேடி பார்த்தும் இந்த 303 கோடி ரூபாய் எந்தெந்த கிராமங்களில் எப்படி செலவிட பட போகிறது என்பதற்கான விவரங்களை கண்டு பிடிக்க இயலவில்லை. மற்றொரு முக்கிய செய்தியும் பார்க்க நேர்ந்தது. மொத்தமாக இந்த சாலைப்பணிகளுக்கான குத்தகைகளை விடாமல் தனிதனியாக ஒவ்வொரு பணிக்கும் குத்தகை விட அரசு ஏற்பாடு செய்ய போவதாக செய்தி வந்திருந்தது. தகவல் தொழில் நுட்பம் முன்னேறி வரும் இப்பொழுதில் தமிழக அரசு இந்த குத்தகைகளின் விவரங்களையும் அவற்றின் மதிப்பையும் , இக்குத்தகைதாரர்களின் செயல்பாட்டையும் பொது மக்கள் பார்வைக்கு கொண்டு வந்து வலைதளத்தில் பதிப்பித்தால் நன்றாக இருக்கும்.

சாலைகளின் தேய்மானத்தையும், மழை நீர் அரிப்பினால் ஏற்படும் பாதிப்பையும் குறைத்து, அதிக ஆயுள் உள்ள சாலைகள் அமைத்தல் முக்கியம். கிராமத்தில் போடப்படும் சாலைகள் கனமான மழையில் காணாமல் போய்விடும். அப்படி ஆனால் வழக்கம் போல் ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கோ, சாதிக்கோ, மதத்திற்கோ வாழ்க, ஒழிக போட்டுக் கொண்டு ஒரு ஓரமாய் ஒதுக்கி வாகனம் செலுத்துவதில் நாம் கில்லாடி ஆகி விட்டோம்.

No comments: