Thursday, June 14, 2012

உருவ வழிபாடு எப்படி உண்டாகி இருக்கலாம்?

வழிபாடு என்பது என்ன? அது ஒரு கோரிக்கை. கீழிருந்து மேல் செல்வது. அது வெறும் கோரிக்கையாக மட்டும் இருக்க முடியுமா? அதில் ஒரு மரியாதை , அங்கீகாரம் இருக்கின்றது. அந்த அங்கீகாரம் தான் என்ற உணர்வினை கீழாகவும், தன்னை விட உயர்ந்த ஒன்றிடம் அகங்காரம் அற்று நிற்பதிலும் உள்ளது.

ஆதியில் மனிதனின் மிக பெரிய தேடலாக  உணவும் , இன பெருக்கமும் , குடும்ப உணர்வும் இருந்திருக்க முடியும். அதை பரிணாம சூழலில் விலங்குகளிடமும் காண்கிறோம். ஆனால் மனிதனுக்கு குடும்பம் தொடர்ச்சியானது, அது மனித விருதிக்கு  மட்டும் அல்ல. உணவு பசிக்காணது மட்டும் அல்ல. அதை விட மேலானது. இந்த சூழலில் உணவையும், குடும்பதையும் ஒட்டி ஒருவான லௌகீகமே , நுகர்வே மனிதனுக்கு வழிபாட்டை உண்டாக்க சாத்தியம்  அதிகம். பயம் என்பதை விட நுகர்வின் தேடல் மிக முக்கிய பங்கு கொண்டிருக்கும். தேடல் என்பது உள்ளம் , உடல் இரண்டின் உச்சம் வரைக்கும் மட்டுமே செல்ல முடியும் , அதை மீறிய தேடல் வரும் பொழுது கை பற்றல் தேவை படுகின்றது. அந்த கை பற்றல் தான் என்ற மனித சாத்தியதுக்கு மீறியதாக இருக்கிறது. அது கடவுளானது. மொழியும், சிந்தனையும் உருவாகி வளரும் காலத்தில் தொடர்பு மொழியாக குறியீடுகள் இருந்தன. அந்த குறியீடுகளே உருவ வழிபாடாகின.

வம்சம் விருதி செய்யும் பெண் தாய் தெய்வமானாள்.  அது ஒரு குறியீடு. வம்சம் விருத்தி அன்றைய வாழ்வில் மிக முக்கியம். வெள்ளாண்மையிலும்,வேட்டையிலும் ஆட்கள் தேவை. அது குடி தழைக்க அவசியம். ஜெயமோகன்  முன்பு எழுதிய ஒரு இயற்கை விவசாயம் பற்றிய கட்டுரையில் ஒரு மூத்த விவசாயி மண்ணின் மனத்தை( ஸ்பைரில்லம்)   வைத்து அது விதைக்கு தயாரவதை சொல்லி இருந்தார். ஆதியில் இது போன்ற உணவு உண்டாகும் நுட்பம் தெரிந்த மூத்தோர் ஒரு குடியின் பெரும் வரமாக இருந்திருப்பா். அவர்களது அந்த அறிவு இயற்கையின் நுட்பங்களை குறியீடாகியது. அதன் தொடர்ச்சியாக குல மூப்பரும் குறியீடானர். இதனுடே பரிணாம ரீதியில் மனிதனுக்கு அதிகாரம் நோக்கிய பார்வை உண்டு. கூட்டத்தின் தலைவனாதல் ஒரு ஆதி வேட்கையே. இந்த தேடலும், நோய் ,விபத்து போன்ற நிழவுகள் உருவாக்கும் கையறு நிலையும் பயத்தை குறியீடாக்க முயன்றிருக்கும் என நினைக்கிறேன்.      
 
மொழி வளம் பெரும் காலத்து , சிந்தனை வளரும் காலத்து குறியீடுகள் குல வழி ஆயிருக்கலாம். குஷ்புக்கு கோவில் கட்டியதும் ஆதி மன நிலையில் ஒன்றாக இருந்திருக்களோமோ என ஐயம் வருகின்றது.   அதிகாரம் மற்றும் ஆன்மீக தேடல் வலிமை கொண்ட பொழுது இந்த குறியீடுகள் கடினமாயின, விரிவாயின , ஆலயங்களுக்குள் சென்றன என நினைகிறேன். ஆன்மீக தேடல் குறைந்து அதிகார தேடல் மிகுந்தது, புதிய தலைமுறைகளில் பெரும் பாலோர்  குறியீடுகளை கவனித்தல் குறைந்தது, அவர்கள் குறியீடுகளை தொழ மட்டும் செய்தனர். புதிய பொருளியல் சமூகங்கள் வந்தன, அவை தங்கள் தேவைக்கு ஏற்ப குறியீடுகளை மாற்றின. தற்போது ஆயுத பூஜைக்கு டேப்லட் வைத்து வழி படுவது  அதில் ஒன்றுதான்.    
 
தான் , எனது என்ற உணர்வு  மனித  பரிணாமத்தில் உண்டாகும் , உண்டாகிய விளைவுகள் அதிகம்.  கூட்டு  சிந்தனை செய்யும் ஜெயமோகனின் பனி மனிதன் கதையில் வரும்   யதிக்கள் வழிபாடு செய்வதில்லை. அவர்கள் இயற்கையை மீறுவதில்லை. அவர்களே இயற்கையின் ஒரு உறுப்பென தங்களை உணர்கிறார்கள். அந்த இடத்தில அவர்களுக்கு குறியீடுகள் தேவை இல்லாமல் ஆகிறது.   

No comments: