Monday, June 25, 2012

நிறுவனம் vs அநிறுவனம்

நிறுவனம் vs  அநிறுவனம் எனும் தரப்பினை ஒட்டி எழும் மோதலாய் பார்க்கலாம்.

நிறுவனமற்ற அமைப்பு எனபதை அநிறுவனம் என சொல்லலாம். அநிறுவன அமைப்பானது பன்மயமானது, பன்மைய விரிவுகள் ஒட்டியும் , ஒட்டாமலும் இயங்கும் தன்மை உடையது. மனித லௌகீகத்தின் மேல்
உண்டாகி வளர்ந்து வந்தது. நிறுவப்பட்டது அல்ல.தனி மனித , குடும்ப மற்றும் சமூக உள் உணர்வால் உண்டாகி இருந்தது. பொருட்கூறுகளின் அடுக்குகளோடு தொடர்புடையது. மாறும் மானுட அறகோட்பாட்டின் மேல் நிற்பது.


இந்த அநிறுவன அமைப்பினை மாற்ற  இரு நிறுவன அமைப்புகள் இயங்க முன் வருகின்றன. ஒன்று அநிறுவன அமைப்பு இயங்கிய அதே சூழலில் உருவானது, தொன்மையானது . அநிறுவன அமைபோடு நெடுங்காலம் உரையாடல் கொண்டிருந்தது. கருத்து பரிமாற்றம் செய்து கொண்டிருந்தது. கொண்டும் , கொடுத்தும் இயங்கியது. ஆனால் இந்த நிறுவனத்தின் கோட்பாடுகள் அநிறுவன உறுப்பினர் கல்வி, மருத்துவம், சமூக ஒருங்கிணைப்பு போன்றவை மீது வளர்ச்சி பார்வை கொண்டிருக்க வில்லை, வளர்ச்சி பார்வை கொள்ளும் திறனும் அதற்கு அறவே இல்லை. ஒரு ஒட்டுண்ணி வடிவம் மட்டுமே கொண்டிருந்தது.அதன் கோட்பாடு சம நிலை சமுதாயம் எனபதை எழுத்து வடிவில் கூட அங்கீகரிக்க மறுக்கின்றது.

 இரண்டாம் நிறுவனமும் தொன்மையானது , வார்க்கபட்ட நிறுவன வடிவம் உண்டு.  அதற்கு   இலக்கு உண்டு, அளவீடு உண்டு, நிர்ணயிக்க பட்ட செயல்பாடு உண்டு, உறுப்பினர் பெருக்குதல் அதனுடைய
நிறுவன கோட்பாட்டினில் ஒன்று. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.
 இரண்டாம்  நிறுவனம் கல்வி , மருத்துவம் முதலிய சமூக அடிப்படை தேவைகளோடு  அநிறுவன உறுபினர்களை அணுகுகின்றது. அவர்கள் உறுபினராகும் காலத்து இந்த பயன்பாடு பொருள்கள் குறைத்த பொருள் செலவில் கிடைக்கும் எனும் வழி முறை சொல்ல படுகின்றது. இந்த நிறுவனம் அதன் கோட்பாட்டினில் சமநிலை சமுதாயம் என்பதை எழுத்து வடிவில் அங்கீகரிக்கின்றது, நடைமுறை என்பது வேறு விஷயம்.


நுகர்வோருக்கு மூன்று  வழி முறை உண்டு. தங்களது அநிறுவன கோட்பாட்டில் நின்று நிலைப்பது. நிறுவனம் ஒன்றினை சார்ந்த ஒரு நிலைப்பாடு கொண்டு தனது அநிறுவன கோட்பாட்டினை வாழ்வாக கொள்வது. நிறுவன வடிவுக்கு முற்றிலும் மாற்றி கொள்வது.நுகர்வாளருக்கு
அதற்கான சுதந்திரம் இருந்தால் சரி.

இதில் இரண்டாவது நிறுவன அமைப்பு தனது பிரசார வடிவில் ஒன்றாய் அது தொகுத்த அறிவு வடிவதினை பொதுவில் வைக்கின்றது. அநிறுவன உறுபினர் அதனை பயன்படுதி தனது உள் பிரச்சனைகளை முன் வைக்கும் பொழுது முதலாவது நிறுவனம் தடுமாறி போகின்றது. அதன் மங்கிய திறன்
கல்வியை சமூக செயல்பாடென இல்லாமல் தனி மனித செயல்பாடாய்
பார்ப்பது. ஆவனங்கள் தொகுப்பது, பெரும் கல்வி சாலைகள் அமைப்பது போன்றவை அதன் உள்ளே செயல்பாடாய் இருந்தது இல்லை. வரலாறு அநிறுவன உறுபினர்களோடு மேம்பட்ட உரையாடல் காண வழி செய்த கதவுகளை முதல் நிறுவனம் சேர்ந்தவர்கள் பல நேரங்களில் மூடி இருக்கின்றார்கள். அந்த தொலைந்த வாய்ப்புகள் குறித்தும் அறிவும் ,தெளிவும் இல்லை. முன்னோக்கு பார்வை குறைவான முதல் நிறுவனம்
கால வெளியை திருப்பி எங்கோ பின் கொண்டு சென்று அநிறுவன உறுப்பினர்களை ஒரு சொர்க்க பூமி இருந்தது என நம்ப சொல்கின்றது.
முன்னோக்கி செல்லவே எல்லோருக்கும் விருப்பம்.


 



   
            

No comments: