Wednesday, December 6, 2006

மேய்ச்சல் 3

உடம்பில் சூடு ஏறினால் கண்ணை கட்டிக் கொள்கிறது. அப்புறம் எண்ணைய் தேய்த்து குளித்து வெந்தய பொடி சாப்பிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப நான்கு நாளாகிறது. சொந்த விஷயங்களை பற்றி கவலைப்படுவதில் உலக விஷயங்கள் ஒளிந்து கொள்கிறன.





Not so much thin...
Originally uploaded by m.o.m.o..







உலகத்தின் சூடும் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே வருகிறது. இதை குறைக்க, கட்டுப்படுத்த விஞ்ஞான துறையும் முயன்று வருகின்றது. பூமிக்கு எண்ணைய் குளியலா, வெந்தய பொடியோ உதவாது. வேறு ஏதாவதுதான் வர வேண்டும்






மாற்று எரிபொருள் துறையில் முக்கிய கண்டு பிடிப்புகள் கடந்த வாரத்தில் பதிபிக்க பட்டு இருக்கிறது. ஆரம்ப கால சோலார் செல் தொழில் நுட்பம் சிலிகானை அடிப்படையாக கொண்டது.

இதில் முக்கிய மாற்த்தை கொணர்ந்தது மைக்கேல் கிரட்சல் எனும் சுவிசர்லாந்து நாட்டின் அறிவியலார் ஆவார். இவரது 1991ம் வருடத்திய Ti02(டைடானியம் டை ஆக்ஸைடு) அடிப்படையாக கொண்ட புதிய வகை செல்கள் கண்டுபிடிப்பு சோலார் செல்கள் தயாரிப்பை எளிமைப்படுத்தின. கிரட்சல் செல்கள் என்று இவர் பெயராலேய அந்த வகை சோலார் செல்கள் வழங்கப்படுகின்றன.

அண்மையில் மைக்கேல் கிரட்சலின் அணி சூரிய ஒளி கொண்டு நீரை ஹைட்ரஜனாகவும், ஆக்ஸிஜனாகவும் பிரிக்கும் தொழில் நுட்பத்தில் 42 சதவீத குவாண்டம் திறனுள்ள கருவியை கண்டறிந்துள்ளனர். போட்டோ ஆக்ஸிடைஷேசன் தொழில் நுட்பம் இது வரை 37 சதவீத குவாண்டம் திறனுடைய அளவிலியே இருந்தது. குவாண்டம் திறன் என்னும் அளவீடு ஒளியின் போட்டான்கள், எலக்ட்ரானாக மாறுவதை குறிக்கிறது. ஹைட்ரஜன் எரிபொருள் மிக சுத்தமானது. அதனால் சுற்று புற சூழல் கேடுகள் விளையாது.

மேலும் தகவல்களுக்கு

இந்திய பெருங்கடல் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுப்புற சூழலின் வெப்பம் அதிகரிக்கும் ஆய்வை யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா சான்டியாகோவை சேர்ந்த ராமநாதன் மற்றும் ஜெப்ரி வின்சென்ட் என்பவர்கள் நடத்தி பதிப்பித்துள்ளனர். இவர்களின் முடிவு படி சுற்று புற சூழல் கேடுகளே மழை அளவை நம் நாட்டில் குறைக்கிறன என்றும், சுற்று புற சூழலில் கார்பன் டை ஆக்ஸைட் போன்றவற்றின் அதிகரிப்பே இரவு நேரங்களில் வெப்பநிலையை குறையவிடாமல் பயிரை பாதிக்கின்றன. உணவு தன்னிறைவு அவசியமாதலால் இது பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் வர வேண்டும். , 4000ம் ஆண்டு என பழம் பெருமை என வெட்டிப் பேச்சு பேசுவதிலும், சிலைகளை வைப்பது இடிப்பது என காலம தள்ளுதலையையும் விட இது போன்ற ஆக்கப்பூர்வமான விழிப்புணர்வு நோக்கி செல்லுதல் முக்கியமானதாக எனக்கு படுகிறது.

மேலும் தகவல்களுக்கு

மற்றுமொரு சுவராஸ்யமான செய்தி என்னவெனில் செல்போனிலும், லேப்டாப்பிலும் பொருந்தக்கூடிய புரோஜக்டர் தொழில்நுட்பம் கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹோலாகிராபி அடிப்படையாக கொண்ட இந்த வகை புரோஜக்டர்கள் LCOS வகை பேனல்களால் ஆனது. முதன் முதலில் ஹாலாகிராபி தொழில் நுட்பம் சாதாரண நுகர்வோருக்கும் பயன்படும் வகையில் இந்த தொழில் நுட்பம் அமைந்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு



புகைப்படத்திற்கு நன்றி m.o.m.o

No comments: