Thursday, November 30, 2006

மகள்

முத்தே நவமணியே என்
மூச்சிருக்கும் கண்மணியே
சின்ன சின்ன பாதமதை
சிங்காரமாய் மேல் தூக்கி
வெள்ளிக் கொலுசுதனை
விரல் பிடித்து அளவெடுத்து
வாய் நிறைய நீ சிரிக்க
மனம் நிறைந்து போகுதடா

மெல்ல எழுந்து நீயும்
பட்டு பாதந்தான் தேய
வீடெங்கும் ஒடியாடி
விதவிதமாய் குறும்பு செய்ய
வரப்போகும் திருநாளை
விழி வைத்து காத்திருப்பேன்

No comments: