Saturday, December 16, 2006

வலி

ஐயோ, அப்பா, அம்மா, கடவுளே என்ற நான்கு சப்தங்களும் வலியோடு பிண்ணி பினைந்திருக்கின்றன. என்ன வலி வந்தாலும் மூளைக்கு செல்லும் வேதியல் சிக்னல்கள் இந்த வார்த்தைகளை வடிவமாக்குகின்றன. ஒரு சில நபர்களுக்கு இந்த பிரச்சனையே கிடையாது. அவர்களுக்கு வலி உணர்வே இல்லை. ஆகாயத்திலிருந்து யாரும் வந்து இதை வரமாய் தந்து போகவில்லை. ஒரு வகை மரபியல் மாற்றங்களால்தான் வலியின்மையை உருவாக்குகிறது

பாகிஸ்தானின் வடபகுதியில் இது போன்ற மரபியல் மாற்றங்கள் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். விஞ்ஞானிகள் இந்த குறிப்பிட்ட மரபியல் மாற்றத்தை உருவாக்கும் ஜீனை அடையாளம் கண்டுள்ளனர். வலி கொல்லும் மாத்திரை பற்றிய அறிவியல் துறையில் இந்த கண்டுபிடிப்பு முக்கியமானதாக கருதப்படுகின்றது. இந்த மரபியல் மாற்றத்தை மரபியல் குறைபாடாக அறிவியலார் கூறுகிறார்கள், ஏனேனில் இந்த மரபியல் மாற்றம் ஏற்படும் போது அது பெரும்பாலோரின் மூளையின் வளர்ச்சியை பாதிக்கின்றது. மிக குறைவான நபர்களே இந்த மரபியல் மாற்றத்தோடு இயல்பான மூளை வளர்ச்சியோடு உள்ளனர். இந்த மரபியல் மாற்றம் உள்ளவர்களுக்கு தட்ப வெப்பங்களை அறியும் உணர்வும், அழுத்தங்களை உணரும் உணர்வும் மற்றும் கூர்மையான பொருள்களை மழுங்கிய பொருள்களோடு வேறுபடுத்தும் உணர்வும் இருக்கின்றது. ஆனால் வலி இருப்பதில்லை.

வலி வரும்போது நரம்பின் செல்களில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஜீன் வலிக்கான மின்சார சிக்னல்களை எடுத்துச் செல்லும் புரதத்தை உருவாக்குகிறது. இந்த மரபியல் மாற்றங்களுக்கு ஆளானவர்கள் உடம்பில் நரம்பு செல்கள் வலியின் மின்சார சிக்னல்களை கடத்தும் புரதத்தை உருவாக்குவதில்லை. இந்த மரபியல் குறைபாடு CIPA (Congenital insensitivity to pain with anhidrosis) என்று அழைக்கப்படுகின்றது.

வலிக்கு காரணமான ஜீனை போல் சொரணைக்கும், அடிமை தனத்திற்கும் ஏதாவது ஜீன்தான் காரணமாய் இருக்கும். அதை கண்டறிந்து சொரணையை அதிகரித்து, அடிமை தனத்தை குறைக்கும் மரபியல் மருந்துகள் வருங்கால் சமூக விழிப்புணர்வு நாட்டில் வர வாயப்புண்டு.

No comments: