Sunday, December 24, 2006

மேய்ச்சல் 6

மக்களாட்சி அருமையான கருத்தாக்கம். இந்த தத்துவத்தில் கூட்டாய் வாழும் சமுதாயம் தனது தேவைகள், பாதுகாப்பு,நிதி அளவு போன்றவற்றை தானே விவாதித்து, வரையறுத்து, செயல்படுத்தும் திறனை கொண்டிருக்கிறது.

இவ்வாறான உயரிய கருத்தாக்கத்தை கிருத்து பிறப்பதற்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவாக்கிய பெருமை கிரேக்க நாகரித்தவருக்கே உரியது. அக்காலத்தில் கிரேக்க தேசம் ஒற்றை நாடாய் அமைந்திருக்கவில்லை, பிளேட்டாவின் வார்த்தைகளில் சொன்னால் குட்டையை சுற்றியிருக்கும் சிறு தவளைகள் போல்தான் இருந்தது. மத்திய தரைகடலையையும், கருங்கடலையையும் சுற்றி சுமார் 1500 தனி தனி அரசாய் அமைந்திருந்தன.

எல்லா அரசுகளும் மக்களாட்சியாய் இல்லாமல் சில அரசுகள் இப்போதுள்ள இந்தியாவின் சில மாகாணங்கள் போல் வாரிசுரிமை சார்ந்த அரசுகளாகவும், சில அரசுகள் வசதியான குடும்பங்களின் கையிலும் இருந்தது. இவற்றின் மத்தியில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய மக்களாட்சிகளில் ஒன்றாய் ஏதேன்ஸ் மாநகரம் விளங்கியது. அங்கிருந்த மக்களாட்சியின் தீர்மானங்களில் முழு நகரமும் பங்கேடுத்தது. மக்கள் பிரதிநிதிகள் வாக்களிக்காமல் தீர்மானங்களுக்கான வாக்களிப்பு வர்க்க பேதமின்றி மக்களிடமிருந்தே வந்த பூரண மக்களாட்சி நிலவியது. கிரேக்கத்தில் அக்காலத்தை ஒட்டி அடிமைகளும், பெண்களும் ஒட்டுரிமை இல்லாதவர்களாய் இருந்தனர். மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பு நிர்வாக காரணங்களுக்காக பின்னர் வந்து ஒட்டிக் கொண்டது. மக்கள் பிரதிநிதிகள் தங்கள் மனசாட்சியை பட்டம் விட கற்றுக் கொள்கையில் பிரதிநிதிக்கு மன்னனான நினைப்பும், மக்களுக்கு பிச்சை பாத்திரமும் வழங்கப்பட்டது.

மகாராஷ்ட்ராவின் விதர்பாவில் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் ஆளுமை திறனை(?) பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்ளும் பருத்தி விவசாயின் பிரச்சனையை தீர்க்க இயல்வதை பார்த்தால் மெய் சிலிர்த்து போகிறது. செத்து போனவன் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுகிறார்கள். உயிரோடு இருப்பனுக்கு கிடைப்பது அனுதாபமும், மேடை பேச்சுகளுந்தான். இப்படி செய்தால் தற்கொலை குறையுமென்று நம்புகிறார்களா என்ன?




எல்லா பழியையும் தூக்கி மரபியல் மாற்றம் செய்யப்பட்ட பிடி காட்டன்(Bt cotton) மேல் போட்டு விட்டால் பாசன வசதி குறைவும், மின்சார தட்டுப்பாடும், பருத்தி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக கோளாறும், நிதி உதவி அளித்தலில் நடக்கும் குறைபாடுகளும் யாருக்கு தெரிய போகிறது? ஒற்றை பரிணாம பார்வையில் எப்படி பிரச்னை தீரும்? சூ மந்திரகாளி வித்தை காட்டி மக்கள் கவனத்தை திருப்புவதில் மக்கள் பிரதிநிதிகளின் திறமையை பாராட்டியே தீர வேண்டும்.

நமது இந்திய மக்கள் பிரதிநிதித்துவ அமைப்பு செய்யும் நல்ல விஷயம் ஒன்றும் உண்டு. கங்கை, பிரம்மபுத்திரா போன்ற நதிகளின் மூலங்களில் உலக தட்ப வெப்ப உயர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிந்து அவற்றை களையும் பனியில் சீன தேசத்துடன் நம் தேசமும் கரம் கோர்த்து இறங்கி உள்ளது. உலக வெப்ப உயர்வின் காரணமாய் புலிகளின் சரணலாயமாய் இருந்த சுந்தர்பன் காடுகளின் இரு தீவுகளை ஏற்கனவே இழந்து விட்டோம். கடல் மட்டம் புவியின் வெப்ப உயர்வால் அதிகரித்து நிலப்பரப்பை விழுங்கி வருகின்றது.

இக்தகைய சூழலில் சுத்திகரிக்கபட கூடிய மாற்று எரிபொருள் அவசியம். அமெரிக்காவின் சான்டியகோ பல்கலைகழகத்தை சேர்ந்த கென்னத் நீல்சன் தலைமையிலான குழு பாக்டீரியாவின் உதவியானல் மின் உற்பத்தி செய்யும் துறையில் ஆய்வு மேற் கொண்டு வெற்றியும் பெற்றுள்ளனர். எம்-ஆர்1 எனும் இந்த பாக்டீரியா பால், தேன் மற்றும் மீன் முதற் கொண்டு 75 வகை கார்பன் பொருள்களை மின் உற்பத்திக்கு மூலப் பொருளாக பயன்படுத்தும் திறனுள்ளது. இந்த பாக்டீரியா உலோகங்களின் அரிப்பையும் தடுக்க வல்லது.

கென்னத் நீல்சன் இந்த பாக்டீரியாவின் மின் உற்பத்திக்கு காரணமான ஜீன்களை கண்டறிந்து அதை மேம்படுத்தி புதிய வகை எம்-ஆர் 1 பாக்டீரியாவை உருவாக்கியுள்ளார். இந்த ஆய்வின் வெற்றி மாற்று எரிபொருள் துறையில் ஒரு மைல் கல்லாகும்.


No comments: