Wednesday, December 27, 2006

ஈரம்

பாசி படர்ந்து ஈரம் கட்டும்
மொட்டை மாடியின் வாசனையுடன்
அவளும் நானும் ஈரமுமிருந்த
மழை ஒய்ந்த ஒருநாளில்
முன்னை போல் நீயில்லையென்றாள்
மாடியின் சிதறிய எச்சங்களாய்
மனதில் நினைவிருக்க
மாறி போனது நம்முறவென்றாள்

எச்சங்கள் மேல் தங்கும்
ஈரந்தான் உள்ளிறங்கும்
ஈரமடி நம் உறவு
என்றென்றும் உள் உண்டு

காய்ந்தாலும் காய்வதென்றும் மேல்பரப்பில்
இதமான குளிரோடு
உன்னன்பின் ஸ்பரிசங்கள்
என்னுள்ளே என்றுமுண்டு

No comments: