Monday, November 13, 2006

செய்திகள் இரண்டு

நாம் எதில் மிக திறமையானவர்களாக இருக்கிறோமோ அதை முழுக்க தொழில் ரீதியாக பயன்படுத்தும் வாய்ப்பை அவுட்சோர்சிங் இந்தியர்களுக்கு கொடுத்திருக்கிறது. இன்றைக்கு ஐபின்-சிஎன்என் நியுஸை மேய்கையில் பெங்களுரில் இருக்கும் ப்ரிக் வொர்க் எனும் கம்பெனி அமெரிக்க செனட்டருக்கு பேச்சு எழுதி கொடுத்திருக்கிறது.

சந்தைமயமாக்கப்படுதல் எல்லா வகை திறமை வாயிலாக பணம் ஈட்ட வழி செய்கிறது. அமெரிக்காவின் ஆரிகான் மாகாண செனட்டர் ப்ராங் மார்ஸ் என்பவருக்கு இவ்வுரை எழுதி வழங்கப்பட்டுள்ளது. இவர் புஷ் கட்சியை சேர்ந்தவர். நான் பேச நினைப்பெதெல்லாம் நீ எழுத வேண்டும் என்று காலாட்டிக் கொண்டு பாடிக் கொண்டு இருந்தால் கை மேல் பேச வேண்டியது உட்காரும் காலம் வந்து விட்டது.

பெங்களூரில் இருந்து இயங்கும் உஜ்ஜிவன் என்னும் மைக்ரோ நிதி நிறுவனம் பற்றியும் செய்தி இருந்தது. முகமது யுனுஸின் சிந்தாந்தங்களை பின்பற்றி பெங்களூரில் இயங்குகிறார்கள். இரண்டாயிரத்து ஓன்றாம் ஆண்டின் கணக்கு படி பெங்களூரின் மக்கள் தொகையில் 35 சதவீதம்
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள். இப்போது இன்னமும் இது அதிகரித்து இருக்கலாம். இதனை நிறுவியவர்களில் நியுக்ளியஸ் மென்பொருள் நிறுவன தலைவரும் உண்டு. இவர்கள் சேவை அடித்தட்டு மக்களுக்கு எவ்வாறு போய் சேருகிறதென பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

No comments: