Friday, October 13, 2006

மகள்

வெல்லக்கட்டி
என் வெண்ணிலாக்குட்டி
பட்டு கன்னம் தேய
பாயினிலே புரண்டு
மொட்டு வாயை கூட்டி
மெல்ல பேசும் பேச்சில்
சித்திரங்கள் ஆக்கி
சிந்தையிலே வைத்தேன்
**********************
பாதி இரவில் விழித்து
பாலும் கொஞ்சம் குடித்து
ஓரக்கண்ணால் பார்த்து
ஓங்கி அவள் அழுது
தூக்கமவள் வாஙக
அவள் உதட்டில்
வழியும் சிரிப்பில்
பக்கம் நிரப்பும் எழுத்தும்
பயனிலாமல் போகும்

No comments: