Friday, October 6, 2006

அம்மா

பக்கத்து வீட்டு
பேச்சின் சுவராஸ்யத்தில்
பாதம் ஏறி செல்லும் பாம்பை
கவனிக்காமல் இருக்கலாம்
அசரமால் உழைத்ததில்
ஏதாவது ஒரு ஏகாதசி
விரதம் விட்டுப் போகலாம்
விடிகாலை சமையலில்
சோற்றின் உப்பும் மறக்கலாம்
அவ்வப்போது சொல்லும்
கணக்கு பாடத்தில்
ஒரிரண்டு தெரியாமலிருக்கலாம்
எதுவிருந்தாலும்
கண்கள் மூடி உறங்கும் போதும்
பிள்ளைகள் இருவரை விடுவதில்லை
தூக்கத்தின் வார்த்தைகளும்
அம்மாவுக்கு எங்கள் பெயர்தான்

1 comment:

Unknown said...

arumaiyaana kavithai, sinna sinna visayangalai azhagaai korthu ezhudhiyirukireergal.