Sunday, October 8, 2006

மறக்காமல் இருப்பவை

சனநாயகத்தின் இரண்டு தூண்கள்
ஊரின் நாட்டாமைகளும்
ஓட்டு போட்ட சனங்களுந்தான்

மறக்காமல் நாட்டாமைகள் செய்வது
ஊர்காசில் விருந்து வைத்து
உபயதாரரில் தன் பெயர் போடுவது

மறக்காமல் சனங்கள் செய்வது
முதல் பந்திக்கு முந்தி
மூழ்கும் அளவுக்கு முகஸ்துதி வழங்குவது

எல்லோரும் மறக்காமல்
இழுத்து போட்டு கடமை செய்ய
என்ன குறை சனநாயகத்துக்கு

No comments: