Wednesday, October 11, 2006

நிஜம்

குருட்டுபயல்கள் யானையை
பார்ப்பது போல் பார்த்து விட்டு
பார்க்க கூடாததை பார்த்ததாக
பதட்டமும் ஆகிறார்கள்

எப்போதும் சவுக்கு வைத்திருப்பவனுக்கு
வசதிக்கு வார்த்தை வராதவரை
விசிறு விசிறுவதில் ஏது குறை
அரசியலமைப்பை அப்பாலெறிந்து விட்டு
அண்ணாச்சிகளுக்கு பட்டம்
கட்ட வேண்டியதுதான் போலிருக்கு
நீதிமானாய் நியாயவாதியாய்

புகைமூட்டி நிஜம் மறைத்து
கண் திறந்து நிஜம் தேட
வழி காட்டுகிறார்கள்
புகை கலைகையில்
புகையை நிஜமாகவும்
நிஜத்தை புகையாகாவும்
மாற்றிக் கொள்கிறார்கள்

பாண்டம் செய்பவன் கை
பானையாகிறது நிஜம்
கண்கட்டி தலைசுற்றி
நிற்கும் வரை
அவர்கள் விடுவதாயில்லை
மயக்க நிலை மனிதருக்கு
வித்தை விற்றல் சுலபம்

No comments: