Wednesday, October 4, 2006

கோபம்

காலை விடியலில் கோவில் கண்டு
விரல் நுழையா உண்டியல் தேடி
செய்ததற்கு கையூட்டளித்து
செய்யபோவதற்கு முன்பணம் கட்டி
சிறப்பு கட்டண சேவையில்
சிந்தை மகிழ்ந்து அய்யனின் நாமம்
போற்றி போற்றி என
பொங்கி வழிய வாசல் வருகையில்
முழம் பூ வழிக் கடையை விட
முக்கால் ரூபாய் கூட வைத்து
கூவி விற்கும் ஐந்து வயது
பெண்ணிடம் கோபம் வருகிறது

No comments: