Monday, October 2, 2006

அழைப்பு

கருவறைக்குள் ஒளிந்திருக்கும் தாண்டவகோனே
கதவுடைச்சி வந்திடடா தாண்டவகோனே
அச்சமாக இருக்காடா தாண்டவகோனே
அரவணைக்க நாங்கருக்கோம் தாண்டவகோனே

தீட்டோடு நான் நிற்க தாண்டவகோனே
தினம் பூசை கேட்குதாடா தாண்டவகோனே
பாலும் சோறும் மறந்திடுடா தாண்டவகோனே
மேளத்தோடு நாயனங்கள் தூக்கி எறி தாண்டவகோனே
வானிருக்கு மண்ணிருக்கு தாண்டவகோனே
நடுவில் கொஞ்சம் நாமிருப்போம் தாண்டவகோனே
கள்ளோடு கவுச்சி உண்டு தாண்டவகோனே
மோதும் பறை இசைகள் கேளு தாண்டவகோனே

பக்தனாக நானிருக்க தாண்டவகோனே
உன் வேசம் நீயும் கலைச்சிடனும் தாண்டவகோனே
குறீயிட்டில் அடங்காதே தாண்டவகோனே
வெறும் பேச்சில் மயங்காதே தாண்டவகோனே
வெளி நீயும் வந்திடடா தாண்டவகோனே
வீடுபேறு காட்டிடுவேன் தாண்டவகோனே
பகுத்தறிவு தேடிடலாம் தாண்டவகோனே
பயம் மறந்து வந்திடடா தாண்டவகோனே

No comments: