Tuesday, August 29, 2006

ஆகாசம்

பாட்டன் பூட்டன் காலத்துல
வரப்பு தெரியா வயலில
ஆனைக்கட்டி போரடிச்சி
ஆகாசம் வரைக்கும் அடுக்கினோம்
நெல்லுக்கட்டு
பொறந்தது
பாட்டனுக்கு பத்து பூட்டனுக்கு ஐஞ்சு
பங்காளிங்க ஆச்சு
நூறு பேரு
விதைச்சதும் மிச்சமில்ல
விளைஞ்சதும் பத்தல
ஈரத்துண்டே ஆனது நிச்சயம்
அரைப்படி நெல்லுச்சோத்துக்கும்
ஐயாமாரை பார்த்திருக்க
இன்னைக்கும் இருக்குதிந்த
ஆகாசம்

No comments: