Tuesday, March 27, 2007

சில்லறை வணிகம்-DSCL முதலீடு

சில்லறை வணிகத்தில் நுழையும் பெருமுதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தை பெருக்க இடைதரகு அமைப்புகளை களைதல் முக்கியம். டாடா, ஐடிசி, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் மொத்த குத்தகை விவசாய முறைக்கு விவசாயத்தை நகர்த்த ஆரம்பித்துள்ளன. இதனால் விவசாயிக்கும், நுகர்வோர்க்கும் நாற்பது சதவீதம் வரை கூடுதல் பலன் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பெருமுதலீட்டாளர்கள் மொத்த குத்தகை விவசாயத்திற்கு நகரும் போது அதற்கான துவக்க செலவீடும், உழைப்பும் மிக கடினமான ஒன்றாகும். நுகர்வோரின் தேவையையும், அதற்கேற்ற பொருள்களின் கையிருப்பையையும் காப்பதற்கு பெரிய அளவிலான விவசாய தொடர்புகளும் வரத்துவாரியும் உருவாக்குவது எல்லாருக்கும் சுலபமல்ல.

ஸ்ரீராம் கன்சாலிடெட்டட் நிறுவனம் இப்போது இது போன்ற பின்புல கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் பெருவணிகருக்கும், விவசாயிக்கும் இடையே தொழில் புரிய திட்டமிட்டுள்ளனர். பல நிலை இடைதரகர் அகன்று ஒரு இடைதரகருக்கு வந்து ்நிற்பது போன்றதே. சோதனை முறையில் இவர்கள் பிக் பஜார் (pantaloon retail) மற்றும் ஸ்பென்சர் ரிடெய்லுடன்(RPG Group) ஒருங்கிணைந்து செயலாற்றுகிறார்கள். இந்த ஒப்பந்தில் ஸ்ரீராம் நிறுவனம் விவசாய மொத்த குத்தகையையும், போக்குவரத்து, தானிய சேமிப்பு முதலியவற்றை பார்த்துக்கொள்ளும். விற்பனையை இதர பிற வணிகர் பார்த்துக் கொள்வார். எனக்கு இந்த அமைப்புகள் காலப்போக்கில் நேரடி வணிகத்தில் இறங்கும் என்றே தோன்றுகின்றது. டாடா, ஜடிசி, ரிலையன்ஸ் நேரடி கொள்முதலுடன், பின்புல கட்டமைப்பையும் பார்த்துக் கொள்வதால் அவர்களுக்கு விலையை இன்னும் குறைத்து தர இயலலாம்.

ஸ்ரீராம் நிறுவனத்தார் ஹரியாலி கிசான் பசார் அமைப்பை வடக்கே விவசாய மாநிலங்களில் நிறுவி உள்ளனர். விவசாயத்திற்கு தேவையான தொழில் முறை ஆலோசனைகள், உரம், பெட்ரோல், ்டீசல், கடன், கொள்முதல் என எல்லா வகை தேவைகளையும் இந்த ஹரியாலி அமைப்பு மேற்கொள்கின்றது. விவசாயம் தொழில்முறை அமைப்பாக மாற்றப்படுதலின் அறிகுறிகள் தெரிகின்றன. இந்த ஹரியாலி அமைப்பில் கால்நடை மருத்துவர்களையும் உள் கொண்ர்வதற்கான முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றது.

No comments: