Thursday, March 15, 2007

பணமும் தொழிலும்

பணம் என்பது அங்கிகரிக்கப்பட்ட சமூக சூழ்நிலையில் அது குடும்பத்தின் ஆணி வேராகிறது. குடும்பத்தின் வளர்ச்சி பணத்தினை அடிப்படையாக கொண்டே அளவிட படுகின்றது. சில இடங்களில் குடும்பத்தை நிராகரிப்பவர் கூட பணத்தை நிராகரிப்பதில்லை. பண்டமாற்று முறையில் நடைபெற்ற பொருளாதாரம் பணத்திற்கு நகர்ந்த நாள் தொட்டு ஆண்டி முதல் அரசன் வரை இயக்கம் பணத்தின் வாயிலாகவே.

பல குடும்பங்களின் வளர்ச்சி ஒரு சமூகத்தின் வளர்ச்சியாக அறியப்படுகின்றது. தத்துவ ரீதியாக ஆயிரகணக்கான சித்தாந்தங்கள் இருந்தாலும் நடைமுறை வாழ்க்கைக்கு பணத்தினை யாரும் நிராகரிக்கப் போவதில்லை. பொருளீட்டும் வழிகளில் ஒன்று சுயமாய் தொழில் தொடங்குதல், இன்னோன்று அங்கனம் தொழில் தொடங்குவோருக்கு பணி புரிந்து பொருள் ஈட்டுதல். செய்யும் தொழிலின் வருவாய்க்கேற்ப்ப தொழிலின் கூலி பொதுவாய் அமைகின்றது. எல்லா தொழிலுக்கும் ஒரே கூலி சாத்தியமில்லை, அது நடைமுறைக்கு ஓவ்வாது.

கூட்டு சமூதாயத்தில் வரிப்பணம் வசூலிக்கப்பட்டு அது சமூதாயத்தின் வளர்ச்சிக்கு செலவிடப்படுகின்றது. அதை நிர்வகிக்க அரசு நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படுகின்றது. உலக அறிவு, தொழிலறிவு வளர்க்க எண்ணி அரசால் இலவச கல்வி நமது நாட்டில் எல்லோருக்கும் வழங்கப்படுகின்றது.
கல்வி வேலையை உருவாக்கவும், வேலை புரியவும் தகுதியை தருகின்றது.
கல்விதான் தகுதியா? கல்வி இல்லாமல் ஆனவர்கள் இல்லையா போன்ற கேளவிகள் இந்த இடத்தில் எழுவதை தவிர்க்க இயலாது. இது போன்ற தனித்து விளங்குபவர்களின் மொத்த விழுக்காடு பொது சமூதாயத்தில் மிக குறைவே. அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று புலம்பும் முன் அடிப்படை தகுதியான கல்விக்காக அரசு செய்யும் முயற்சிகளை எண்ணி பார்க்க வேண்டும்.

தனி மனிதன் தகுதியை வளர்த்துக் கொள்ள உதவிய சமூகம் தகுதிக்குறிய வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தது. இரு வழிகளில் சமூகம் வேலைவாய்ப்பை உருவாக்கலாம். கூட்டுசமூதாயம் தானே பொதுப்பணம் முதலீடு செய்து வேலைக்கான அமைப்பை உருவாக்குதல் ஒன்று. இந்த முறையில் பொதுப்பணம் பற்றிய அறிவு எல்லோருக்கும் வருதல் வேண்டும். பேருந்துக்கு தீ வைத்து, பக்கத்து ்வீட்டு சுவற்றில் உச்சா போய் விட்டு, தெரு ்விளக்கில் கல் வீசி கலாட்டா பண்ணும் மனித வளர்ச்சி உள்ள நிலையில் இது போன்ற பொதுப்பணம் கொண்டு வேலைவாய்ப்பை உருவாக்குதல் எத்தனை சுத்தமாக இயங்க இயலும்.

வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மற்றொரு முறை தொழில் தொடங்குவதற்கான ஆயத்தங்களை சமூகம் உருவாக்கி சமூக உறுப்பினர்களை முதலீடு செய்ய வைத்தல். பக்கத்து வீட்டு ்சுவற்றில் உச்சா போகும் அறிவுள்ளவன் கூட சொந்த வீட்டை துடைத்துதான் வைப்பான். குடும்பம் , சொத்து போன்ற அமைப்புகளை இயல்பாக ஏற்றுக் கொண்ட மனித அமைப்பில் தான் முதலீடு செய்து ்செய்து துவங்கும் தொழிலில் தனிக் கவனம் செலுத்தப்படும். முதலீடு ்விரையம் செய்யப்படாது. தனி மனித முதலீடு சமூகத்திற்கு ஊறு விளைவிக்காமல் இருக்க கூட்டுச சமூகம் விதிமுறைகளை உருவாக்கி கொள்ளுதல் வேண்டும். முதலிட்டுக்கான உள் கட்டமைப்புகளை உருவாக்குதலும், முதலீட்டுக்கான விதிமுறைகளை மட்டுறுத்தலும் கூட்டு சமூகத்தின் நிர்வாக அமைப்பின் கடமையாக இருத்தல் வேண்டும்.

சமூக அமைப்பில் அதிகாரத்தினை உச்சிக்கு கொண்டு செல்லாமல் பரவலாக்கபடுதல் முக்கியம். தற்போது நடைபெறும் நந்திகிராம பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். மேற்கு வங்க மாநில அரசு சிறப்பு பொருளாதார திட்டத்தினை பற்றிய அறிவினையும், அதனால் வரும் பலன்களையும் மட்டும் அறிவிக்கும் அமைப்பாக இருந்து, தனியார் அமைப்பு நேரடியாக கிராமத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி கிராம அமைப்புடன் ஒப்பந்தம் செய்வதாக இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது என்று நினைக்கின்றேன். மாவட்டத்திற்கோ, அல்லது ஊராட்சி அமைப்பிற்கோ தங்கள் பகுதியில் நிர்மாணிக்கப்படும் தொழில் அமைப்பினை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டால் திணிப்பு தவிர்க்கப்படும். அமெரிக்காவில் இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையை காணலாம். இந்தியாவின் மாவட்டத்தினை ஒத்த கவுண்டி எனப்படும் அமைப்பே உள்ளூர் தொழில் அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றது. பல்வேறு சலுகைகளும், ஊக்கங்களும் தொழில் தொடங்குவோறு வழங்குவதாய் கூறி தொழில் முனைவோருக்கு கவுண்டி அழைப்பு விடுப்பதை கண்டிருக்கின்றேன். மக்கள் பிரதிநிதித்துவம் உள்ள அமைப்பு கவுண்டி அளவில் உண்டு.

வேலைவாய்ப்பு உருவாக்கம் சமூகத்திற்கு முக்கியமானதாகும். அதில் உருவாகும் தேக்க நிலை சமூக அமைதியை குலைக்க கூடிய தன்மை உடையது. தொழில்மயமாக்கப்படல் கெடுதலான பக்க ்விளைவுகளை கொண்டிருந்தாலும் சமூக இயங்குதன்மைக்கு அது முக்கியமானதாகும்.
கடுமையாக தொழில் உருவாக்கத்தை எதிர்ப்பவர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு என்ன செய்வது என்று சொல்வது இல்லை. அப்பன் செய்த தொழில் செய்தே வாழ்ந்தால் போதாதா எனறு கேட்டால் எனக்கு போதாது என்றே தோன்றுகின்றது.

No comments: