Monday, March 5, 2007

தீட்டு

உதிரத்தின் வாயிலாக தீட்டு
மாதவிலக்கிலும, மனிதன் பிறப்பிலும்
மையம் கொண்டாடுது இந்த தீட்டு
அதிகார போதையில் ஆழ்ந்திருக்க
அடிப்பட்டவனுக்கு கொடுத்தது தீட்டு

அவனுக்கு இவன் தீட்டு
இவனுக்கு எவனோ தீட்டு
ஆக எங்கும் உண்டு இந்த தீட்டு
ஆகாசம் தாண்டி புது வேஷம்
போடுமடா தீட்டு

புணர்வின் ஆசைக்கும்
உடலின் சூட்டுக்கும் ஏதடா தீட்டு
இச்சையின் வியர்வையில்
கரைஞ்சே போகும் அந்த தீட்டு

கல்லா பெட்டியிலே
நல்லா தூங்கும்
அந்த காசுக்கும் ஏதடா தீட்டு
காசின் சுகத்தினிலே
கற்புர புகைதானே தீட்டு

கழுத்தினிலே கத்தி வர
பயத்தினிலே காணலடா தீட்டு
பயம் வந்தா நனைந்துபோகும்
பரிகாச பூச்சுதாண்டா தீட்டு

2 comments:

thiru said...

நல்ல கவிதை நிர்மல்

கோவி.கண்ணன் said...

அருமையான கவிதை !
நல்லா சொல்லி இருக்கிங்க !