Monday, February 26, 2007

மகள்

ஏதேதோ பேசுகிறாள்
இலக்கணங்கள் அமைக்கின்றாள்
முத்து முத்தாய் சிரிக்கின்றாள்
புத்தகங்கள் படிக்கையிலே
புதுப்பூவாய் மலர்கின்றாள்
எட்டி எட்டி பிடிக்கின்றாள்
எழுத்துகளை ரசிக்கின்றாள்
முட்டி ஓடும் யானைக்குட்டி
தட்டி வாயில் வைக்கின்றாள்
அலுவலகம் செல்கையிலே
ஆசை கொண்டு தாவுகிறாள்
மாலை வந்து சேர்கையிலே
மடியினிலே ஏறுகின்றாள்
பட்டுப்பாப்பா தன்னோடு
பறந்து போகுது நேரந்தான்

1 comment:

சேதுக்கரசி said...

வாசிக்கவே இனிமையாக இருக்கிறது :-)