Saturday, July 1, 2006

நண்பன்

இருட்டாய் இருக்கையில்
நிழலாய் தெரிகிறான்
சுருக்கென வலிக்கும்
நெஞ்சுக்குள் அவனாடு
சில கேள்விகளும் இருந்தன.
ஏனடா நீ இறந்து போனாய்

---
மறந்து போனதாய்
நினைக்கையில்
நள்ளிரவின் திரைசிலை
அசைவுகளில்
அவன் பேச்சு கேட்கிறது.
ஏதோ சொல்கிறான்.
ஏன் செய்தேன்
என சொல்கிறானோ

----

No comments: