Saturday, July 29, 2006

சுகம்

தூங்கா இரவுகள்
அழுகையின் சப்தமோடு
அயர்வாய் உடம்பு
ஆனாலும்
சுகமாய்தான்
இருக்கு
என் மகளோடு



அண்மையில் பிறந்த என் மகளை நினைத்து எழுதியது. அவள் பிறந்த நாள் தொட்டு பகலில் அலுவலகம் செல்வதால் அவளோடு நேரம் செலவு செய்ய இயலவில்லை. இரவு நேரங்களில் கண் விழித்து என்னால் ஆன உதவிகளை என் மனைவிக்கும்,மகளுக்கும் செய்கிறேன். அப்போது தோன்றியது இது. இவ்வளவு விளக்கம் வேண்டாம் என நினைத்தேன். ஆனால் தேவைப்படுகிறது.

No comments: