Thursday, November 29, 2012

சந்தை

ஒரு பொருள் அது புற வடிவம் கொண்டிருந்தாலும், அக வடிவமான சிந்தனை வடிவம் கொண்டிருந்தாலும் தான்  உற்பத்தி செய்ய பட்ட இடத்தில் இருந்து நகர்ந்து அதன் பயனர்களை சேரும் இடம் என்ன? உற்பத்தியாளரும் , பயனரும் சந்திக்கும் இடத்தினை சந்தை என்று சொல்லலாமா? அக பொருள் , புற பொருள் இரண்டையும்  பயனர், உற்பத்தியாளரிடம் இருந்து துண்டிக்க பட்டு உற்பத்தி பொருளை அனுபவிக்க (அக ரீதியாகவோ ,புற ரீதியாகவோ)   முடியும். டால்ஸ்டோய்சின் இலக்கியத்தினை வாசித்து பயன் அடையும் பொழுது  டால்ஸ்டாய்சின் பெண்களை குறித்த கருத்துகளை  சேர்ந்து சுமக்க வேண்டியதில்லை. டால்ஸ்டோய்சினை சந்தித்தோ, அறிந்தோ இருக்க வேண்டியதில்லை. அதே போல இன்று மின்சாரம் பயன் படுத்தும் பொழுது எடிசனின் எல்லா பிழைகளையும் சுமக்க வேண்டியதில்லை. 

இங்கு மூன்று புள்ளிகள்  உண்டு .

1. பொருளின் உற்பத்தி ( அகம் ,புறம் )
2. பயனர் (நுகர்வோர்?),
3. உற்பத்தி பொருளும், பயனரும் சந்திக்கும் இடம் ( சந்தை?)

உற்பத்தி பொருளும் , பயனரும் சந்திக்கும் இடத்தில் , இந்த உற்பத்தி பொருள் கையாளபடுவது முழுக்க முழுக்க பயனரை சார்ந்து உள்ளது. பயனர் தனது அக திறனால் உற்பத்தி பொருளினை கச்சா பொருளாக்கி அதனை மேம்படுத்தலாம் (நாராயண குரு, காந்தி ) , அல்லது உற்பத்தி பொருளின் மேல் அதிகார விளிம்புகளை (வைதீக பேரொளிகள், பல கம்யூனிச சர்வாதிகாரிகள்)  சுமத்தி அதை ஆயுதமாக்கலாம், அல்லது உற்பத்தி பொருளினை பயன் செய்ய தெரியாமல் போகலாம் , அல்லது வேறு வித முடிவுகளும் நேரலாம்.

இதை புற வடிவு பொருளுக்கும் சொல்லலாம் , அக வடிவ பொருளுக்கும் சொல்லலாம். கதிரியக்கம் கொண்டு உருவாக்க பட்ட எக்ஸ் ரே , கதிரியக்கம் கொண்டு உருவாக்க பட்ட ஆயுதங்கள் என இரு வேறு பொருள்கள், ஒரே கச்சா பொருளில் இருந்து சாத்தியம்.

அக பொருளின் சந்தை வடிவம் பலவாக இருக்க வாய்ப்பு உண்டு. சொல்ல தக்க சில வடிவங்கள். 

1. தனிப்பட்ட குரு -சிஷ்ய வாய்ப்பு  (மத்துரு தயிர்)
2. கல்வி நிலையங்கள் 
3. ஆய்வு மையங்கள் 

இன்னும் பல வடிவங்களும் இருக்கலாம்   

இந்த விதத்தில் பார்க்கும் பொழுது உற்பத்தியாளர், பயனர் என்பது நிலையான இடங்கள் அல்ல. சந்தையில் பங்கு பெரும் பொழுது வகிக்கும் பாத்திரமே. இன்றுஉற்பத்தியாளர் நேற்றோ , நாளையோ ஒரு பயனர் என்ற அளவில் சந்தையை சந்தித்தே ஆக வேண்டும். இன்றைய பயனர் நாளையோ ,நேற்றோ உற்பத்தியாளர் வடிவம் கொள்ளவும் வாய்ப்பு உண்டு.  
  
உற்பத்தி பொருள்கள் பல ஒன்று சேர்ந்து புதிய உற்பத்தி பொருள் வடிவம் கொள்ளலாம். இதை புற வடிவில் ,அக வடிவில் இரு நிலைகளிலும் காணலாம்.  பயனர் உற்பத்தியாளராய் மாறும் சாத்தியங்கள் அதிகாரிக்கும் பொழுது, உற்பத்தி பொருள் கச்சா பொருளாய் மாறும் சாத்தியம் அதிகரிக்கும் பொழுது பயனரும்,உற்பத்தியாளரும் சந்திக்கும் புள்ளிகள் (சந்தை) அதிகரிக்கும்.சந்திப்பின் விதிகளை சந்திப்பவர்கள் கூட்டாக நெறி செய்து கொள்ளும் பொழுது 
சந்திக்கும் புள்ளிகள் நேர் பட இயங்க இயலும். 

Wednesday, November 21, 2012

ஒரு கதை

கதவடைத்து ஆண்டு பல ஆகி விட்டது.
இது ஒரு மிக பெரிய கூட்டு குடும்பம்
யாருக்கும் யாரையும் பிடிப்பதில்லை.
சொத்து பிரித்தால் ஓராணாவுக்கு மேல் யாருக்கும்
தேற போவதில்லை.
எனவே யாரும் எங்கும் போகபோவதில்லை.

பக்கத்து வீட்டு பங்காளி செங்கல் செங்கல்லாய்
வீட்டினை சரித்து மாற்ற சொன்னான்.
அவனை பொறுத்த வரை செங்கல் தான் உண்மை
வீடென்பது ஒரு பொய்.
வீடு செங்கல்லின் மீது சிமெண்ட் திணித்த மாயை

ஒப்பு கொண்டு துடிக்கின்றான் ஒன்று விட்ட தம்பி
வீட்டின் நிழலும் கூரையும் , அணைப்பும்
அனுபவிக்கும் ஒரு தருணத்தில்
செங்கல்களின் அடிமை தனம் குறித்து சொன்னான்
பின்னர் வடித்த சோறும் வறுத்த கறியும் தின்று தூங்கினான்
அவனுக்கு மதிய தூக்கம் மிக முக்கியம்
எழுந்த பின் ஒரு எழுபது பக்க உரை உண்டு.
செங்கல்லின் விடுதலை அவனுக்கு மிக பிடிக்கும்
வறுத்த கறியும் மிக பிடிக்கும். 

பங்காளி அவ்வப்போது இல்லத்தின் உறுதி  சோதிக்க
கடப்பாறைகளை அனுப்புவான்.
அவன் தொழிலே கடப்பாரை செய்வது ஆனது
நல்ல வருமானம். நல்ல தொழில்.
மிக்க மகிழ்வு அவனுக்கு.
அவனது ஒட்டின் கூரை அவனுக்கும் சரிய ஆரம்பித்தது .
அவனுக்கு நேரமில்லை சரி செய்ய
ஒட்டிலிலிருது உத்தரம் நோக்கி கறையான் வந்தது
கொல்லாமை என் கடமை
எனவே கறையான் என் நண்பன் என்றான்.

மச்சு வீடு கட்டி மாடி மேலே ஏசி போட்ட
நண்பரே கடப்பாரை தொழில் முதல் போட்டார்.
இரண்டு வீடும் இடிந்து போனால்
வட்டியும் வருமானமும் அவருக்கே.
கொண்டை மேல் இருக்கும் கொம்பினை
சொறிந்து ரத்த சூடு நாக்கினை நீட்டி எச்சில் கூட்டி
இன்பமாய் அவர் உண்டு

ஏதோ சேர்ந்து பிழைக்க சொல்லி ஒரு
பெருசு சொன்னதாய் ஒரு கதை உண்டு
எதுவும் செய்யாமல் பழமொழி சொல்லி
இருக்கும் கிழவி சொன்னது.
அப்பாவும் பங்காளியும் அந்த கோமாளி
கிழவனை அடிக்கவும் உதைக்கவும்
கிழவன்  சொன்ன சொல் திவசமும் செய்ய பட்டது
அப்பா அவ்வப்போது வாழ்க கிழம்  என்பார்.
கிழவன் படத்துக்கு மாலை போடுவார்
தனியே இருக்கும் பொழுது கிழ பைத்தியம் எனபார்.

கண்ணாடியில் பார்த்தேன்.
நாங்கள் புத்திசாலி போல என்றால்
அந்த கிழம் கோமாளி போலதான் இருந்தார்.