Wednesday, November 21, 2012

ஒரு கதை

கதவடைத்து ஆண்டு பல ஆகி விட்டது.
இது ஒரு மிக பெரிய கூட்டு குடும்பம்
யாருக்கும் யாரையும் பிடிப்பதில்லை.
சொத்து பிரித்தால் ஓராணாவுக்கு மேல் யாருக்கும்
தேற போவதில்லை.
எனவே யாரும் எங்கும் போகபோவதில்லை.

பக்கத்து வீட்டு பங்காளி செங்கல் செங்கல்லாய்
வீட்டினை சரித்து மாற்ற சொன்னான்.
அவனை பொறுத்த வரை செங்கல் தான் உண்மை
வீடென்பது ஒரு பொய்.
வீடு செங்கல்லின் மீது சிமெண்ட் திணித்த மாயை

ஒப்பு கொண்டு துடிக்கின்றான் ஒன்று விட்ட தம்பி
வீட்டின் நிழலும் கூரையும் , அணைப்பும்
அனுபவிக்கும் ஒரு தருணத்தில்
செங்கல்களின் அடிமை தனம் குறித்து சொன்னான்
பின்னர் வடித்த சோறும் வறுத்த கறியும் தின்று தூங்கினான்
அவனுக்கு மதிய தூக்கம் மிக முக்கியம்
எழுந்த பின் ஒரு எழுபது பக்க உரை உண்டு.
செங்கல்லின் விடுதலை அவனுக்கு மிக பிடிக்கும்
வறுத்த கறியும் மிக பிடிக்கும். 

பங்காளி அவ்வப்போது இல்லத்தின் உறுதி  சோதிக்க
கடப்பாறைகளை அனுப்புவான்.
அவன் தொழிலே கடப்பாரை செய்வது ஆனது
நல்ல வருமானம். நல்ல தொழில்.
மிக்க மகிழ்வு அவனுக்கு.
அவனது ஒட்டின் கூரை அவனுக்கும் சரிய ஆரம்பித்தது .
அவனுக்கு நேரமில்லை சரி செய்ய
ஒட்டிலிலிருது உத்தரம் நோக்கி கறையான் வந்தது
கொல்லாமை என் கடமை
எனவே கறையான் என் நண்பன் என்றான்.

மச்சு வீடு கட்டி மாடி மேலே ஏசி போட்ட
நண்பரே கடப்பாரை தொழில் முதல் போட்டார்.
இரண்டு வீடும் இடிந்து போனால்
வட்டியும் வருமானமும் அவருக்கே.
கொண்டை மேல் இருக்கும் கொம்பினை
சொறிந்து ரத்த சூடு நாக்கினை நீட்டி எச்சில் கூட்டி
இன்பமாய் அவர் உண்டு

ஏதோ சேர்ந்து பிழைக்க சொல்லி ஒரு
பெருசு சொன்னதாய் ஒரு கதை உண்டு
எதுவும் செய்யாமல் பழமொழி சொல்லி
இருக்கும் கிழவி சொன்னது.
அப்பாவும் பங்காளியும் அந்த கோமாளி
கிழவனை அடிக்கவும் உதைக்கவும்
கிழவன்  சொன்ன சொல் திவசமும் செய்ய பட்டது
அப்பா அவ்வப்போது வாழ்க கிழம்  என்பார்.
கிழவன் படத்துக்கு மாலை போடுவார்
தனியே இருக்கும் பொழுது கிழ பைத்தியம் எனபார்.

கண்ணாடியில் பார்த்தேன்.
நாங்கள் புத்திசாலி போல என்றால்
அந்த கிழம் கோமாளி போலதான் இருந்தார்.



 

 
 
  




No comments: