Friday, August 4, 2006

பயணம்

அசாத்தியமான அமைதியுடன் இருந்த விண்வெளியில் அந்த ஓடம் தன் பாதையை தேடி மெதுவாக திரும்பிக் கொண்டிருந்தது. ஓடத்தின் வெளியிலிருக்கும் அமைதி அதன் உள்ளே இல்லை.ஓடத்தின் மூன்று உறுப்பினர்களும் மிக அவசரத்தில் இருந்தனர்.

"மேஜர் நாம் டைட்டனின் ஆர்பிட்டை விட்டு வெளியே வரும் நேரத்தை குறைக்க வேண்டும். மின்காந்த புயல் நம்மை இன்னும் இரண்டு மணி நேரத்தில் நெருங்கிவிடும். ஓடத்தின் இன்ஜின்களை அதன் முழு வேகத்துக்கு முடுக்குங்கள். பூமியுடன் ஏற்கனவே நாம் தொடர்பை இழந்து விட்டோம். "

"கேப்டன் மின் காந்த புயல் வடக்கில் இருந்து வருகிறது.ஆனால் வேறோரு விசை நம்மை நம் பயண பாதைக்கு நேர் எதிராக கிழக்கு நோக்கி இழுக்கிறது. இஞ்சினை முழு வேகத்திற்க்கு முடுக்கியும் பயனில்லை. கீழ் தளத்திலிருந்து சார்ஜண்ட் இஞ்சின் அதன உச்சக்கட்ட உபயோகத்தில் உள்ளதென கூறுகிறார். இப்போது என்ன செய்யலாம்? "

"சார்ஜண்ட் இஞ்சின் குளிர்பான்களை முழுதுமாக திறவுங்கள். மேஜர் இஞ்சினின் வேகம் மட்டுபடுத்தி கிழக்கு நோக்கி திருப்புங்கள். மின்காந்த புயல் வருவதற்கு முன் நாம் இங்கிருந்து அகல வேண்டும்."

"கேப்டன் பயணபாதையை விட்டு விலகுவதை பூமியில் உள்ள தளம் விரும்பாது.கிழக்கில் என்னவிருக்கும் என யாருக்கும் தெரியாது. அதில் எனக்கு விருப்பமில்லை. தொடர்ந்து இஞ்சினை உச்ச வேகத்தில் வைத்து மேற்க்கு நோக்கி முயற்ச்சிக்கலாமே?"

"காந்த புயல் வீரியம் மிக்கது. நம் ஓடத்தின் கம்பியுட்டர் அதை கண்டு கதறுகிறது. கிழக்கு குறித்து எந்த எச்சரிக்கையும் அது தரவில்லை,இன்னும் சிறிது நேரம் நாம் விவாதித்து கொண்டிருந்தால் நமக்கு மூன்று மலர் வளையங்களே பூமியில் மிஞ்சும்.பாதுகாப்பான தூரம் சென்ற உடன் பூமியை தொடர்பு கொண்டு பாதையை வரையலாம். இப்போது ஓடத்தை திருப்புங்கள்."
ஓடம் கிழக்கு நோக்கி திரும்ப ஆரம்பித்தது. கிழக்கிலிருந்து வரும் அந்த ஈர்ப்பு விசையை கொண்டு டைடனின் ஆர்பிட்டிலிருந்து ஓடம் விலக ஆரம்பித்தது.

மேஜர் ஆதவன்,கேப்டன் ஈஸ்வரி,சார்ஜன்ட் தினேஷ் மூவரும் சனி கிரகத்துக்கான துணைக்கோளான டைடனுக்கு பயணம் தொடங்கி ஓரு வருடம் ஆகிறது. வெற்றிகரமான கள ஆய்வுக்கு பிறகு இன்று பூமி திரும்பும் முதல் நாள். ஓரு மணி நேரத்தில் ஓடம் பாதுகாப்பான தொலைவு சென்றுருந்தது.

"கேப்டன் நாம் பாதுகாப்பான தூரத்தில் இருக்கிறோம். ஆனால் பூமியுடன் தொடர்பு கொள்ளமுடியவிலையே. கிழக்கின் இழுவிசையும் அதிகரிக்கிறது."-ஆதவன்.

"கிழக்கில் என்ன இருக்கிறது. எது நம்மை இழுக்கிறதுவென பார்க்கவேண்டும்.சார்ஜன்ட் கம்பியுடரை எலக்டரானிக் தொலைநோக்கியை கிழக்கில் திருப்ப சொல்லுங்கள்"-ஈஸ்வரி

"கேப்டன் அதற்க்கு அவசியமில்லை என நினைக்கிறேன்.தாங்கள் இருவரும் கீழ் தளம் வாருங்கள். இந்த அதிசயத்தை பாருங்கள்"-தினேஷ்.

"மேஜர் நீங்களும் வாருங்கள், ஓடத்தை கம்பியுட்டரின் கட்டுப்பாட்டில் விட்டு வாருங்கள். "

கீழ் தளம்.மூவரும் தங்கள் கண்களை நம்ப முடியாமல் நின்றிருந்தனர். கரிய வான்வெளியில் பிரகாசமான ஓரு வெள்ளை நிற சுழல் ஓன்று இருந்தது.அது இவர்களை நோக்கி வருவது போல இருந்தது.

"தினேஷ் அது எவ்வளவு தொலைவில் உள்ளது"-ஈஸ்வரி

"பத்தாயிரம் ஓளி வருடத்திற்க்கு அப்பால் உள்ளது. அது மிக வேகமாய் நகருகிறது."-தினேஷ்

"இதனை நம் கம்பியுட்டர் பதிவு செய்கிறதல்லவா.ஆகா அற்புதமாய் இருக்கிறது."-ஆதவன்.

"அதன் பிரகாசம் அதிகமாகிறதே. கேப்டன் நமக்கும்,அதற்க்குமுள்ள இடைவெளி குறைகிறது.
இப்போது எட்டாயிரம் ஓளி வருடமே இடைவெளி உள்ளது. நிமிடத்திற்க்கு ஆயிரம் ஓளி வருடமென்பது நம்ப முடியா வேகம்"-தினேஷ்

"மேஜர் நம்ப முடியாத விஷயங்கள் இங்கு நடக்கின்றன. கம்பியுட்டரை பாருங்கள், நகருவது அந்த சுழல் அல்ல. அது நாம். இந்த ஓடம் இத்தனை வேகத்திற்கு எப்படி எரிந்து போகாமல் உள்ளதென தெரியவில்லை. இந்த ஜீ-போர்ஸை நம் உடம்பு எப்படி தாங்குகிறதென்பதும் தெரியவில்லை. இனி நாம் செய்ய எதுமிருக்காதென நினைக்கிறேன்"-ஈஸ்வரி.

மூவரும் கண்ணிமைக்க முடியாமல் அந்த பிரமாண்டத்தை பார்த்துக் கொண்ருந்தனர். அந்த ஓளி சுழல் அவர்களுக்கு மிக அருகில் வந்து கொண்டிருந்தது. அவர்கள் உடல் லேசாக ஆரம்பித்தது.நினைவு குறைய ஆரம்பித்தது. எங்கும் வெள்ளை நிற ஓளி இருந்தது,உடலுக்கு உள்ளேயும்,வெளியேயும் அது பரவுவது அவர்களுக்கு தெரிந்தது.பனி சூரியனில் உருகுவது போல அவர்களது உடல் உருக ஆரம்பித்தது. ஆனால் வலியில்லா ஓரு நிலையில் இருந்தார்கள்.
நினைவு சுத்தமாக போனது.

ஆதவன் கண் விழித்தான். அந்த வெண்ணிற சுழல் காணாமல் போயிருந்தது. அகண்ட வெளியின் கரு நிறம் எங்குமிருந்தது. கம்பியுட்டர் சீராக இயங்கி கொண்டிருந்தது. அதற்க்கு உயிருட்டும் போட்டா செல்கள் செத்துக் கொண்டிருந்தன.என்ன மாயமோவென அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சுற்றிலும் பார்த்தான் தினேஷை காணவில்லை. ஈஸ்வரி மட்டும் அரை நினைவில் முனகி கொண்டு இருந்தாள். மெல்ல நகர்ந்து அவளின் அருகே சென்றான்.

"கேப்டன் மெல்ல கண் திறங்கள்.இன்னமும் உயிரோடுதான் இருக்கிறோம். "

"எங்கே இருக்கிறோம்?"

"ஆண்டவனுக்கே வெளிச்சம். ஓடம் குற்றுயிரும் குலை உயிருமாய் உள்ளது.தினேஷைதான் காணவில்லை. "

"நமக்கு சிறிது ஓய்வும் உணவும் தேவை. தினேஷ் முதல் தளம்தான் சென்றிருப்பார்.நாம் அனைவரும் அந்த சுழலில் உருகுவதை கண்ணால் பார்த்தேன்.எப்போது இது போல் முழுதானோமென தெரியவில்லை. "

"ஆதவன் வெளியே பாருங்கள். பூமியை போல் ஓரு கிரகம் தெரிகிறது. அதே நீல நிறமாய் நாம் அதனிடமிருந்து மிக அருகிலிருக்கிறோம்."

"கேப்டன் அது என்னவென்று தெரியவில்லை. இது பூமியாக இருந்திருந்தால் நம் ஓடத்தின் கம்யுட்டர் பூமியின் சாட்டிலைட்டுகளும் தொடர்பை ஏற்படுத்தியிருக்க வேண்டுமே. இன்னமும் நமக்கு எந்த தொடர்பும் இல்லையே. "

"இது பூமிதான் இங்கு பாருங்கள்.கம்பியுட்டரின் அளவுக்குறியிடுகளும்,எஞ்சி இருக்கும் போட்டோ செல்களும் சூரியனை தெளிவாக காட்டுகிறன. "

"கேப்டன் போட்டோ செல்கள் மிக குறைவான அளவே உள்ளன. நாம் அவசரகால ஊர்தியைதான் பயன்படுத்த வேண்டும். இன்னும் சிறிது நேரத்தில் கம்பியுட்டர் சாக போகிறது.அதன் பின் இந்த ஓடம் மிக பெரிய சவப்பெட்டியாகதான் பயன்படும். நான் தினேஷை தேடி வருகிறேன்.நீங்கள் அவசர ஊர்தியை தயார் செய்யுங்கள். "

ஈஸவரி அவசர ஊர்திக்கு விரைய, ஆதவன் தினேஷை தேடி முதல் தளம் சென்றான்.அங்கு அவனை காணவில்லை. கம்பியுட்டரும் அவனையும்,ஈஸ்வரியையும் தவிர யாருமில்லை என்று சொல்ல குழப்பமாய் கீழே வந்தான்.

"கேப்டன் தினேஷை காணவில்லை.கம்பியுட்டர் அவர் ஓடத்தில் இல்லை என்கிறது. "

"தேட நேரமில்லை மேஜர்.இன்னும் கொஞ்ச நேரத்தில் ஓடத்தின் போட்டோ செல்கள் தீர போகிறன. உடனே வாருங்கள்"

ஆதவன் விரைவாய் வந்து கலத்தில் ஏறிக்கொண்டான்.

கேப்டன் ஊர்தியை எங்கு செல்ல பணிந்துள்ளிர்கள்.?

இந்து மகா சமுத்திரத்திலுள்ள நமது தளத்திற்க்கு செல்லுமாறு பணித்துள்ளேன். எல்லா தகவல் தொடர்பு சானல்களும் திறந்து வைத்துள்ளேன்.நீங்கள் தயாரா

நான் தயார். நீங்கள் கலத்தை செலுத்தலாம்.

அவசர ஊர்தி ஓடத்தை விட்டு வெளியேறியது. மின்னல் வேகத்தில் வந்த அந்த கலத்தில் அவர்கள் கண்ணை மூடி தினேஷிற்கு அஞ்சலி செலுத்தினர்.

அவசர ஊர்தியின் இஞ்சின்கள் அணைய கதவை திறந்து பார்த்தனர். தண்ணீருக்கு பதில் தரையில் இருந்தனர். அவர்களால் நம்ப முடியவில்லை. ஊர்தியின் குறியிட்டு கருவி அவ்விடத்தை இந்து மகா சமுத்திரவெனவே காட்டியது.

கேப்டன் என்னவிது கடல் காணாமல் போகிவிட்டது.

ஆமாம் ஆதவன்.இது பெருங்காடாக இருக்கிறதே.

வானம் தெளிவாக.காற்று சுகமாக இருக்கிறதே.

தொடர்பு கருவிகள் ஓன்று கூட பணி புரியவில்லை.

சாட்டிலைட்டுகள் எங்கே போயின

ஆதவன் இந்த ஊர்தியின் கணக்குபடி சாட்டிலைட்டுகளே இல்லை.

மக்களை தேடி நடக்க வேண்டியதுதான்.

நீங்கள் அந்த பயணத்திற்க்கு எடுத்து வையுங்கள். நான் அங்கு தெரியும் ஆப்பிள் மரத்திலிருந்து கொஞ்சம் பழங்களை எடுத்து வருகிறேன்.

ஈஸ்வரி போன இடத்தில் ஓரும் பேசும் பாம்பை பார்த்தாள்.

பின் ஆதவனும், ஈஸ்வரியும்,ஆப்பிள் பழத்துடன் ஓரு நெடும்பயணம் தொடங்கினர்.

No comments: