Tuesday, February 20, 2007

பிடித்ததும் பழகியதும்

என்றாவது ஒருநாள்
இரவு முடிந்து பகல்
வந்தால் பண்டிகையென
காத்திருப்பு
நீளும் இரவுகளோடு
நித்திரை அதிகரிப்பு
பகல்தன்னை தேடும்
பரிதவிப்பும் உண்டு
இரவின் நுனியில்
நாட்கள் அமர அமர
பழக ஆரம்பத்தோம்

தூங்காமல் காணாமல்
போயிருந்தவன் வந்து நிற்க
போன இடம் கேட்ட போது
பகலே இதுதான் என்றான்
என்றோ முடிந்த இரவு
இன்னும் தெரியாமல்
பகலுக்கும் இருள் பூசிவிட்டோம்
வந்தவனை துரோகி ஆக்கி
கொன்று புதைப்பு
இருள் அகல இருளுக்குள்
காத்திருத்தலே பிடித்தம்
இருள் அகன்றால் என் செய்வது

No comments: