Friday, February 9, 2007

தோழி

முன்னோரு காலம் எழுதியது.
------------------------
வருடலாய் வரும்
இனிப்பாய் பரவும்
இதமாய் மிதக்கும்
வரையரை பல
வகுத்து கொடுத்திருந்தார்கள்
இதயம் இடிக்க வந்தது
இனிப்பினும் தாண்ட கசந்தது
இருக்கும் பூமி கனத்தது
வரையரை காணா மறைந்தது
எல்லாம் உன்னாலே தோழி

காற்றின் பரவும் காணா வாசம்
கண்மணி நீயாய் இருக்கின்றாய்
இமைக்கு உள்ளும் புறமும்
இயல்பாய் பரவி
கனவாய் காட்சியாய் தெரிகின்றாய்
இழுத்து அணைத்து என்னுள்
சேர்க்க நொடிகள்
எண்ணி இருக்கின்றேன்

No comments: