சிந்தனையை கோர்க்கும் போது அதை வெளிப்படுத்த பல வடிவங்கள் உண்டு. சிலையாய், சித்திரமாய் , பாவனையாய், எழுத்தாய், பேச்சாய் வெளிப்படுத்தலாம். இவற்றில் எல்லா தரப்பையும் கவரக் கூடிய இரு படிமங்கள் எழுத்தும், பேச்சும். பல்லியின் நாக்கில் படியும் பூச்சியை போல எழுத்துகளும், பேச்சுக்களும் எண்ணத்தில் படியும்.
பரிணாமத்தின் துவக்கத்தில் சப்தங்கள் வார்த்தைகளாக மாற ஆரம்பித்தன. வேட்டைக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் ஏற்படுத்தபட்ட குழுவில் ஒரே போல் எழுப்பட்ட சப்தங்கள் வார்த்தைகளாக நிறுவப்பட்டு பகிரப்பட்டது. வார்த்தைகள் அதிகமாக அதை பாதுகாக்க எழுத்து வடிவம் உருவாகி இருக்கலாம.
குழு அமைப்பு உருவாக்கம் ஒரு செல் உயிரி பல செல்லாக மாறுவதிலிருந்தே உண்டு. பல செல் உயிரிகளில் யானைகள், சிங்களின், கழுதை புலிகள் பற்றி குழு அமைப்புகளை அன்றாடம் டிஸ்கவரி சானலில் காணலாம்.
ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் யானையும், ஆசிய கண்டத்தில் இருக்கும் யானையும் ஒரே போல் சப்தம் இடுகின்றன. கிட்டதட்ட ஒரே போல் குழு அமைப்பில் இயங்குகின்றன. மனிதருக்கு ஆறாம் அறிவின் காரணமாய் இருக்கும் நில அமைப்புக்கேற்ற தனது பயம், பயத்தால் உருவான பக்தி, இனப்பெருக்க தேவைகள், வேட்டை தன்மை இவற்றிற்கேற்ப எழுப்பிய சப்தம் குழுவுக்கு குழு மாறியது. துவக்கத்தில் இருந்த சித்திர வடிவ எழுத்துக்கள் பின்பு வடிவம் மாற ஆரம்பித்தன. குழுக்களின் கற்பனைக்கு ஏற்றது போல் அவற்றின் எழுத்து வடிவம் மாறியது.
அலுவலகத்தில் இருக்கையில் வீட்டோடு தமிழில் பேசினால் அருகிலிருக்கும் சீன தோழருக்கு அது சப்தமாகதான் படுகின்றது. சீன தோழர் அவரது மொழியில் உரையாடுகையில் எனக்கும் அது சப்தமாகதான் இருக்கின்றது. முக அதிர்வுகள்,முன்னர் நடந்த உரையாடல்கள் வாயிலாக பொருள் கொள்ள முடிகிறதே தவிர அவர் சொல்வதன் பொருள் புலப்படுவதில்லை. பேச்சில்தானென்று இல்லை எழுத்தும் இதே கதைதான். நம்முடையது அவருக்கு ஜிலேபியாகவும், அவருடையது எனக்கு குச்சி கோபுரமாகவும்தான் படுகின்றது
சப்தம் மொழியானது, எழுத்து மொழிக்கான இலக்கணத்தை உருவாக்கியது. குழுக்கள் பெருகுகையில் அவை பிரிய ஆரம்பித்தன, கிட்டதட்ட உடலில் நடக்கும் செல் பிரிதல் போல் குழு பிரிதலும் ஆரம்பித்தன. குழுவின் வலிமை அதன் உறுப்பினரின் வலிமை கொண்டு மாறியது.
விலங்குகள் குழுவிலும் தலைமையை காணலாம். தலைமைக்கு நடக்கும் போட்டிதனையும் காணலாம். சிந்திக்கும் உரிமையிருந்ததால் மனித குழுக்களில் வலிமை அதிகமானவன் தலைவனாகவும், புத்தி அதிகமுள்ளவன் ஆலோசனை சொல்பவனாகவும் அமைய பெற்றது. புத்தியின் வலிமையை உணர்ந்தவன் புத்தியை பகிர்ந்து குழுக்களை வலிமையாக்குதலில் ஈடுபட்ட அதே தருணத்தில் புத்தியின் உதவியால் தன்னை தற்காத்து கொள்ளவும் ஈடுபட்டான்.
தன்னை மேம்படுத்தி கொள்வது உயிரினத்தின் மரபனுக்களில் உண்டு. தன்னை பாதுகாக்க நினைக்கும் உணர்வின் திரிபே வலிமையானதே வாழும் எனும் கோட்பாடு. தனிமனிதன் குழுவாகதான் இதை சாதிக்க முடியும் என்பதை அறிந்ததால் குழுவை வலிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டான். குழுவை இணைப்பதற்கான பொதுவானதொரு கருவி தேவைபடுகையில் மொழி சுலபமாய் அவ்விடத்தில் பொருந்தியது.அதனால் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் சாதனமாய் உண்டான மொழி உணர்வுகளை இயக்குவதாய் மாற ஆரம்பித்தது. மொழியின் அடிப்படையில் குழுக்களிடையே மோதல்கள் உருவாயின. அறிவியல் பெருகி உலகம் சுருங்க தொடங்கும் இக்காலத்திலும் அது மாறாமல் உண்டு. கணிணி உலகத்திலும் டாட் நெட், ஜாவா மோதல்களாக குழு மோதல்கள் உண்டு.
சித்திரமும், சிலைகளும் காலந்தொட்டு மாறியது போல் எழுத்தும், பேச்சும் பல மாற்றங்களை சந்தித்து வருகின்றது. குழுக்கள் தன் விட்டம் அதிகரிக்க மொழியினை பரப்புதலும் , பிற மொழி அழித்தொழித்தலும் ஒரு வழி என அடையாளம் கண்டதால் அம்முயற்சியிலும் ஈடுபட ஆரம்பித்தனர். சில குழுக்கள் மொழியினால் உண்டான அதிகார அமைப்பினை காக்க மொழியை குறைந்த விட்டத்திற்கு கொண்டு வர அம்மொழிகள் அழிய ஆரம்பித்தன.
பொருளாதாரத்தை உயர்த்தும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளோடு ஒத்திசைந்து அதனை விரைவாய் உள்வாங்கும் தன்மை கொண்ட சிந்தனையாளர் சார்ந்த மொழிகள் விரைவாய் வட்டங்களை விரிவுபடுத்தின. விஞ்ஞான கண்டுபிடிப்புகளை உள்வாங்காமல் நின்ற மொழி கொண்ட குழுக்கள் நாள்போக்கில் அவற்றினை அவசரமாக கற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதால் பிற மொழி வாயிலாக அறிய தொடங்கி அவ்வழி நகர ஆரம்பித்தனர். மொழியால் குழு வளராமல் குழுவால் மொழி வளர வேண்டிய அவசியம் அக்தகைய மொழிகளுக்கு உண்டானது.
Monday, February 12, 2007
Friday, February 9, 2007
தோழி
முன்னோரு காலம் எழுதியது.
------------------------
வருடலாய் வரும்
இனிப்பாய் பரவும்
இதமாய் மிதக்கும்
வரையரை பல
வகுத்து கொடுத்திருந்தார்கள்
இதயம் இடிக்க வந்தது
இனிப்பினும் தாண்ட கசந்தது
இருக்கும் பூமி கனத்தது
வரையரை காணா மறைந்தது
எல்லாம் உன்னாலே தோழி
காற்றின் பரவும் காணா வாசம்
கண்மணி நீயாய் இருக்கின்றாய்
இமைக்கு உள்ளும் புறமும்
இயல்பாய் பரவி
கனவாய் காட்சியாய் தெரிகின்றாய்
இழுத்து அணைத்து என்னுள்
சேர்க்க நொடிகள்
எண்ணி இருக்கின்றேன்
------------------------
வருடலாய் வரும்
இனிப்பாய் பரவும்
இதமாய் மிதக்கும்
வரையரை பல
வகுத்து கொடுத்திருந்தார்கள்
இதயம் இடிக்க வந்தது
இனிப்பினும் தாண்ட கசந்தது
இருக்கும் பூமி கனத்தது
வரையரை காணா மறைந்தது
எல்லாம் உன்னாலே தோழி
காற்றின் பரவும் காணா வாசம்
கண்மணி நீயாய் இருக்கின்றாய்
இமைக்கு உள்ளும் புறமும்
இயல்பாய் பரவி
கனவாய் காட்சியாய் தெரிகின்றாய்
இழுத்து அணைத்து என்னுள்
சேர்க்க நொடிகள்
எண்ணி இருக்கின்றேன்
Wednesday, February 7, 2007
கொந்தளிப்பின் ஊடே
நாசாவின் அஸ்ட்ராநாட் ஆவதற்கு கடுமையான பயிற்சி உண்டு. முக்கிய முடிவுகளை விநாடி நேரத்தில் எடுப்பதற்குண்டான பயிற்சிகளும் உண்டு. நேற்று அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் ஒர்லாண்டோ நகரத்தில் லிசா மேரி நோவாக் எனும் பெண் ஷிப்மென் எனும் இன்னொரு பெண்ணை காரில் தாக்கி அவர் கண்ணில் மிளகு தூளை தூவி அவரை கடத்த முயற்சி செய்ததாக வழக்கு பதிவாகி உள்ளது. இருவருக்கும் இடையேயான பிரச்சனை அவர்களுக்கும் பில் ஒப்லின் என்பவருக்கும் இடையேயான உறவை பற்றியது. இது காதல் சம்பந்தப்பட்ட விஷயம். உரிமை கோரி மோதி கொள்வது பரம்பரை பரம்பரையாக உண்டே என்று தோன்றும் அதே கணம் இவர்களது பின்புலத்தை பார்க்கையில் கொஞ்சம் ஆச்சரியமாக உள்ளது.
லிசா மேரி நோவாக் ஒரு அஸ்ட்ராநாட் சென்ற ஜீலையில் விண்வெளிக்கு சென்று 22 நாட்கள் இருந்து வந்திருக்கின்றார். கடுமையான மனப்பயிற்சிகளை பயின்றவர். ஆனாலும் பின் விளைவுகளை யோசிக்காமல் உணர்வுகளின் கொந்தளிப்பில் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கின்றார். இந்த பிரச்சனையை தீர்க்க பல வன்முறை சாரா வழிகள் இருந்து அந்த வழிகளை பற்றி அவர் யோசிக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு பல்வேறு விதமான தீர்வுகளை யோசித்து அவற்றில் சிறந்ததை தேர்ந்தெடுக்க கொடுக்கப்பட்ட பயிற்சிகளை அவர் அந்த நேரத்தில் யோசிக்கவில்லை.
கர்நாடகத்திற்கும் , தமிழகத்திற்கும் இடையேயான வழக்கு நேற்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த பிரச்சசனையை கையாண்டு யார் வளர்வது என்ற நோக்கில் உணர்ச்சிகளின் கொந்தளிப்பிற்கு மக்களை தயார் செய்வதில்தான் பத்திரிக்கை தலைப்பு செய்திகளும், மக்கள் தலைவர்களாக இன்று அறியப்படுபவர்களும் முன் நிற்கிறார்கள். பேருந்துகள் சேதப்படுத்தப்படுகின்றன. வரிப்பணத்தில் வந்த பொது சொத்துகள் நொறுக்கப்படுகின்றன. அந்த படங்கள் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டு இந்திய இறையாண்மையை நோக்கிய தேவையற்ற கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.
தமிழகத்தில் இருப்பவனும் விவசாயிதான், கர்நாடகாவில் இருப்பவனும் விவசாயிதான். பகிர்ந்து கொண்டால் வளமை இருவருக்குந்தான். சொத்து பிரிப்பதில் இருக்கும் பங்காளி பிரச்சனைதான் ஆனால் அந்த நிலையை முன் வைத்தால் கவர்ச்சி குறைந்து போகிறது.
எவனேனும் முடியை பிடித்துக் கொண்டு சண்டை போட்டால்தான் பார்க்க நன்றாக இருக்கின்றது. ரோம பேரரசின் போது மைதானங்களில் சாகும் வரை சண்டையிட சொல்லி வேடிக்கை பார்த்து கை கொட்டுவார்களாம். அந்த மனநிலை சற்று மருவி இன்று இங்கு வந்திருக்கின்றது.
இந்த முறை உயிர் சேதம் எதுவும் காவிரி பிரச்சனையால் ஏற்படவில்லை. இரு மாநில நிர்வாகத்தையும் இதன் பொருட்டு பாராட்ட வேண்டும். ஏற்பட்டிருந்தால் செய்தியாளர்கள் இரங்கல் வார்த்தைகளை அச்சில் ஏற்றி மனமெங்கும் மகிழ்ச்சியோடு செய்திகளை தண்டோரா அடித்திருப்பார்கள். தங்கள் நோக்கங்களை நோக்கி நிகழ்வுகளை திரிப்பதில் காட்டும் கவனத்தை நிகழ்வுகளை உள்வாங்குவதில் செலுத்தினால் நலம்.
தமிழகத்திலும், கர்நாடகத்திலும் எதிர்கட்சியாய் இருப்பவர்களின் ஒரே அரசியல் நிலை ஆளும் கட்சியை எதிப்பதே. இறையாண்மையும், அமைதியான மாநில சூழ்நிலையும், விவசாயிகளின் உண்மை பிரச்சனையும் அவர்களுக்கு முக்கியமில்லை, அக்கறையுமில்லை. மாநில நலன் என்பதை விட ஒட்டு வங்கியின் அசைவே முக்கியம்.
கொந்தளிக்கும் நிலையில் பயிற்சி அளிக்கப்பட்ட அஸ்ட்ராநாட் நிலையிழக்கிறார், சராசரி மனிதர் எம்மாத்திரம். சிந்திக்கும் நிலை மக்களமைப்பு அரசியலமைப்புகளுக்கு பிரச்சனை. ஆகவே அவர்களை உணர்ச்சிவசப் பட வைக்க என்னென்ன செய்யவேண்டுமோ அதற்கான ஆயத்த வேலைகளை செய்து வருகின்றார்கள். மக்கள் கொந்தளிக்கும் நிலையில் ஆளுங்கட்சியாய் இருப்பவர்களும் கொந்தளிப்பிற்கு ஆமாம் போட வேண்டியிருக்கிறது. கொதிக்கும் தணலுக்கு மற்றுமொரு விசிறி.
லிசா மேரி நோவாக் ஒரு அஸ்ட்ராநாட் சென்ற ஜீலையில் விண்வெளிக்கு சென்று 22 நாட்கள் இருந்து வந்திருக்கின்றார். கடுமையான மனப்பயிற்சிகளை பயின்றவர். ஆனாலும் பின் விளைவுகளை யோசிக்காமல் உணர்வுகளின் கொந்தளிப்பில் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கின்றார். இந்த பிரச்சனையை தீர்க்க பல வன்முறை சாரா வழிகள் இருந்து அந்த வழிகளை பற்றி அவர் யோசிக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு பல்வேறு விதமான தீர்வுகளை யோசித்து அவற்றில் சிறந்ததை தேர்ந்தெடுக்க கொடுக்கப்பட்ட பயிற்சிகளை அவர் அந்த நேரத்தில் யோசிக்கவில்லை.
கர்நாடகத்திற்கும் , தமிழகத்திற்கும் இடையேயான வழக்கு நேற்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த பிரச்சசனையை கையாண்டு யார் வளர்வது என்ற நோக்கில் உணர்ச்சிகளின் கொந்தளிப்பிற்கு மக்களை தயார் செய்வதில்தான் பத்திரிக்கை தலைப்பு செய்திகளும், மக்கள் தலைவர்களாக இன்று அறியப்படுபவர்களும் முன் நிற்கிறார்கள். பேருந்துகள் சேதப்படுத்தப்படுகின்றன. வரிப்பணத்தில் வந்த பொது சொத்துகள் நொறுக்கப்படுகின்றன. அந்த படங்கள் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டு இந்திய இறையாண்மையை நோக்கிய தேவையற்ற கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.
தமிழகத்தில் இருப்பவனும் விவசாயிதான், கர்நாடகாவில் இருப்பவனும் விவசாயிதான். பகிர்ந்து கொண்டால் வளமை இருவருக்குந்தான். சொத்து பிரிப்பதில் இருக்கும் பங்காளி பிரச்சனைதான் ஆனால் அந்த நிலையை முன் வைத்தால் கவர்ச்சி குறைந்து போகிறது.
எவனேனும் முடியை பிடித்துக் கொண்டு சண்டை போட்டால்தான் பார்க்க நன்றாக இருக்கின்றது. ரோம பேரரசின் போது மைதானங்களில் சாகும் வரை சண்டையிட சொல்லி வேடிக்கை பார்த்து கை கொட்டுவார்களாம். அந்த மனநிலை சற்று மருவி இன்று இங்கு வந்திருக்கின்றது.
இந்த முறை உயிர் சேதம் எதுவும் காவிரி பிரச்சனையால் ஏற்படவில்லை. இரு மாநில நிர்வாகத்தையும் இதன் பொருட்டு பாராட்ட வேண்டும். ஏற்பட்டிருந்தால் செய்தியாளர்கள் இரங்கல் வார்த்தைகளை அச்சில் ஏற்றி மனமெங்கும் மகிழ்ச்சியோடு செய்திகளை தண்டோரா அடித்திருப்பார்கள். தங்கள் நோக்கங்களை நோக்கி நிகழ்வுகளை திரிப்பதில் காட்டும் கவனத்தை நிகழ்வுகளை உள்வாங்குவதில் செலுத்தினால் நலம்.
தமிழகத்திலும், கர்நாடகத்திலும் எதிர்கட்சியாய் இருப்பவர்களின் ஒரே அரசியல் நிலை ஆளும் கட்சியை எதிப்பதே. இறையாண்மையும், அமைதியான மாநில சூழ்நிலையும், விவசாயிகளின் உண்மை பிரச்சனையும் அவர்களுக்கு முக்கியமில்லை, அக்கறையுமில்லை. மாநில நலன் என்பதை விட ஒட்டு வங்கியின் அசைவே முக்கியம்.
கொந்தளிக்கும் நிலையில் பயிற்சி அளிக்கப்பட்ட அஸ்ட்ராநாட் நிலையிழக்கிறார், சராசரி மனிதர் எம்மாத்திரம். சிந்திக்கும் நிலை மக்களமைப்பு அரசியலமைப்புகளுக்கு பிரச்சனை. ஆகவே அவர்களை உணர்ச்சிவசப் பட வைக்க என்னென்ன செய்யவேண்டுமோ அதற்கான ஆயத்த வேலைகளை செய்து வருகின்றார்கள். மக்கள் கொந்தளிக்கும் நிலையில் ஆளுங்கட்சியாய் இருப்பவர்களும் கொந்தளிப்பிற்கு ஆமாம் போட வேண்டியிருக்கிறது. கொதிக்கும் தணலுக்கு மற்றுமொரு விசிறி.
Friday, February 2, 2007
மென்பொருள் துறையும் இன்னும் பலவும்
மென்பொருள் துறையால் சம்பளம் அதிகரிக்கின்றது. விலைவாசி ஏறுகின்றது. அதன் பலன் பல தட்டு மக்களிடம் சென்று சேருவதில்லை.விதர்பாவில் ஏழைகள் தற்கொலை செய்து கொள்வது மறக்கப்படுகின்றது போன்ற கருத்துகள் வலைத்தளங்களில் முன்னிறுத்தப்படுகின்றது.
விதர்பாவின் பிரச்சனையை முதலில் எடுத்துக் கொள்வோம். விதர்பா மகாராஷ்டிர மாநிலத்தில் இணைக்கப்பட்ட காலத்திலிருந்தே பிரச்சனைதான். மென்பொருள் துறை வளர்ச்சி அடையாமல் இருந்திருந்தாலும் இப்போது உள்ள குறைபாடுகள் எதுவும் களையப்பட்டிருக்காது. மகாராஷ்டிர மாநில ஆண்டு நிதி அறிக்கையில் எப்போதும் விதர்பா பகுதிக்கு ஒதுக்கப்படும் நிதி அளவு குறைவே. மகாராஷ்டிராவின் மொத்த நீர் வள பெருக்கும், தடையில்லா மின்சாரமும் வேறு பகுதிகளுக்கு திருப்பப்டுகின்றது. இதை பற்றிய பல தகவல்களை வலைதளங்களில் காணலாம். ஆட்சில் இருப்போர் குறிப்பிட்ட பகுதியிலிருந்து வந்து கொண்டு இருப்பதால் அந்த பகுதியின் ஓட்டு வங்கியை காப்பதில்தான் கவனம் செலுத்துகின்றார்கள்.
விதர்பாவின் பாசன வசதிகள் மிக மோசமானவை. அதை மேம்படுத்தும் திட்டம் பற்றிய குரல்கள் எழுவதில்லை. விவசாயியை ஆதரிப்பதாக வரும் குழுமங்கள் கூட அவர்களின் நோக்கமான வெளிநாட்டு நிறுவன எதிர்ப்பு என்ற நிலையில் பிடி காட்டனை கண்டிப்பதில்தான் கவனம் செலுத்துகின்றார்கள். அடிப்படை உரிமையான பாசன வசதி பற்றிய விழிப்புணர்வோ, முக்கியத்துவமோ மறக்கப்படுகின்றது. மரபணு மாற்றப்ட்ட பிடி காட்டனிலும் போலி விதைகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. விற்பனை செய்தவர் யார், தொழில்ரீதியாக இவ்விதைகளை விற்பனை செய்வதற்கு தனிமனிதர் இயலாது, ஒரு கூட்டம் இருக்கவேண்டும். அவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பது பற்றிய தகவல்களை வலைத்தளங்களில் காண இயலவில்லை. விவசாயம் நஷ்டமடைந்து வறுமையில் இருப்பவர்களிடம் செத்தால் இரண்டு லட்சம் என அறிவிக்கும் 'புத்திசாலி' நிர்வாகமே மத்தியிலும், மகாராஷ்டிராவிலும் உண்டு. மகாராஷ்டிரா பருத்தி கொள்முதல் கூட்டுறவு அமைப்பின் ஊழல் மற்றும் நிர்வாக கோளாறுகளை பற்றி தகவல்களை வலைத்தளங்களில் காணலாம். இருப்பே போராட்டமாய் இருக்கும் விதர்பாவின் விவசாயிகளின் கடைசி கோவணத்தையும் உருவும் இவர்களின் கரை படிந்த கரங்களையும் பல வலைத்தளங்கள் கண்டு கொள்வதில்லை. இன்னொரு அதிர்ச்சி அளிக்கும் விஷயம் எனெனவென்றால் இது போன்று ஊழல்களில் ஈடுபடுவோரும் சாமானயரே. குழந்தை, மனைவி பாசம் என்று எல்லா விஷயங்களை அனுபவித்து டிவி சீரியல் பார்த்து கண்ணீர் விடும் மத்திய தர வர்க்கத்தினரே.
வெறும் மென்பொருள் துறையை பிடித்து குறைப்பட்டு கொண்டே இருந்தால் நிகழ்வின் வேறு குறைபாடுகள் புனிதப்படுத்தப்பட்டு மறக்கடிக்க படுகின்றன. மென்பொருள் துறைக்கெதிரான பிரச்சாரத்திற்கே இது பெரிதும் பயன்படுகின்றது.தெலிங்காணா பருத்தி விவசாயிகள் விஷயத்தில் தொடக்கத்தில் கோட்டை விட்டாலும் இழுத்து கட்டி குறை களைந்த ஆந்திர அரசு மென்பொருள் துறையிலும் கவனம் செலுத்து மாநிலம் மேம்படுத்துவதை காணலாம்.
மென்பொருள் துறையில் வேலை செய்வது காற்றில் மிதப்பது போல் சுகமானது என்ற கருத்துகள் பல இடங்களில் உண்டு. இங்கு வேலை நிரந்தரம் இல்லை, வேலைக்கான தகுதிகள் மேல் நோக்கி பிரயாணித்து கொண்டே இருக்கும். எட்டு மணி நேர வேலை, வாரக் கடைசி இளைப்பாறுதல் போன்றவை அவ்வளவு சுலபமாக எல்லா மென்பொருளாளருக்கும் அமைவதில்லை. மன அழுத்தமும், கடின உழைப்பும் தேவைப்படும் துறையாகவே மென்பொருள் துறை உள்ளது.
உருவாக்கப்படும் மென்பொருள்கள் வானில் விண்கலம் செல்லவும், சுலபமாய் புகைவண்டி சீட்டு வாங்கவும், தட்பவெப்பநிலைகளை கணக்கிடவும் மேலும் பல துறைகளிலும் உதவுகின்றது என்பது அவ்வளவாக நினைவில் கொள்ளப்படுவதில்லை.
மென்பொருள் நிறுவன உருவாக்கம் பல வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றது. என்பதுகளில் வேலை என்றால் அரசு வேலைகளே என்றிருந்த நிலை மாறி தனியார் நிறுவன வேலைகளையும் திரும்ப பார்க்க வைக்கின்றது. மென்பொருள் உருவாக்கத்தின் காரணமாய் கட்டடம் கட்டுதல், கட்டட நிர்வாகம், சாலை வசதிகள், புதிய குடியிருப்புகள், மின்சார உற்பத்தி மேம்பாடு, மின் விநியோக மேம்பாடு , விமான போக்குவரத்து, மோட்டார் வாகன தயாரிப்பு மற்றும் அதை சார்ந்த தொழில்கள், வங்கிகளும் அதை சார்ந்த தொழில்களும் என பல உப தொழில்களும் வேறு வழியில்லாமல் மேல் வருகின்றன. மென்பொருளின் பயன்பாட்டை அதிகரித்து அதை முறைபடுத்தி அரசு அலுவலகங்களுக்கு கொண்டு வந்தால் நிர்வாகம் மேம்படும், ஊழல் குறையும் சாத்தியமும் உண்டு.
சர்வீஸ் தொழில் நிறுவனங்களே அதிகம் நம்நாட்டில் வர காரணம் மனிதவளமே. அடிப்படை கட்டுமான பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. நம்நாட்டில் தடையில்லா மின்சாரமும், மேடு பள்ளம் இல்லா சாலைகளும் ஒரு ஆடம்பர பொருளாகவே உள்ளது. இவை அடிப்படையாக மாறும் பொழுதே உற்பத்தி தொழில்களுக்கான முதலீடு அதிகரித்து அந்த வகை தொழில்கள் மேம்படும்.
இப்போது நிகழ்ந்திருக்கும் டாடா- கோரஸ் இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் சாத்தியம் உண்டு. டாடாவிற்கு ஐரோப்பாவின் மிக பெரிய சந்தையின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இரும்பு கோரஸ் வழியாக ஐரோப்பாவை குறைந்த விலையில் அணுகுவது சாத்தியமே. இந்த டாடா-கோரஸ்க்கான நிதி இந்தியாவின் மென்பொருள் நிறுவனமான டிஸிஸ்லிருந்து கிடைத்திருப்பதாக பத்ரியின் பதிவில் படித்தேன். ஒரு துறையின் லாபம் வேறு துறைக்கு முதலீடாக நகருகையில் அந்த துறை மேம்பட்டு பணிவாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
மென்பொருள் துறையின் மேம்பாடு சமான்யரின் பொருளாதார நிலையை உயர்த்த அதில் ஒரு பகுதி இல்லாதவருக்கு சேருதலும் அதிகரித்துள்ளது. இயற்கை சேதங்களின் போதும, கல்வி உதவிகளிலும் மென் பொருள துறை சார்ந்த இளைஞர்கள் கொண்ட தன்னார்வ அமைப்புகள் இயங்குவதை காணலாம்.
திரைப்பட மோகமும், பரபரப்பு செய்திகளுக்கு அலைவதும் நமது அடிப்படை குணம். மென்பொருள் துறை அறவே இல்லாமல் இருந்தாலும் விதர்பா விவசாயின் தற்கொலை முதல் பக்கம் வரப் போவதில்லை. ஐஸ்வர்யா-அபிஷேக்தான் முதல் பக்கம். அவர்களது திருமணமே முதல் கவனம். அது நமது கலாச்சாரம். வேலைவாய்ப்பு அதிகரித்து படிப்பறிவு பட்டறிவாக மாற காலம் பிடிக்கும். பேஸன்சர் ரயிலின் வேகத்தில்தான் கலாச்சார மாற்றங்கள் நிகழும்.
விதர்பாவின் பிரச்சனையை முதலில் எடுத்துக் கொள்வோம். விதர்பா மகாராஷ்டிர மாநிலத்தில் இணைக்கப்பட்ட காலத்திலிருந்தே பிரச்சனைதான். மென்பொருள் துறை வளர்ச்சி அடையாமல் இருந்திருந்தாலும் இப்போது உள்ள குறைபாடுகள் எதுவும் களையப்பட்டிருக்காது. மகாராஷ்டிர மாநில ஆண்டு நிதி அறிக்கையில் எப்போதும் விதர்பா பகுதிக்கு ஒதுக்கப்படும் நிதி அளவு குறைவே. மகாராஷ்டிராவின் மொத்த நீர் வள பெருக்கும், தடையில்லா மின்சாரமும் வேறு பகுதிகளுக்கு திருப்பப்டுகின்றது. இதை பற்றிய பல தகவல்களை வலைதளங்களில் காணலாம். ஆட்சில் இருப்போர் குறிப்பிட்ட பகுதியிலிருந்து வந்து கொண்டு இருப்பதால் அந்த பகுதியின் ஓட்டு வங்கியை காப்பதில்தான் கவனம் செலுத்துகின்றார்கள்.
விதர்பாவின் பாசன வசதிகள் மிக மோசமானவை. அதை மேம்படுத்தும் திட்டம் பற்றிய குரல்கள் எழுவதில்லை. விவசாயியை ஆதரிப்பதாக வரும் குழுமங்கள் கூட அவர்களின் நோக்கமான வெளிநாட்டு நிறுவன எதிர்ப்பு என்ற நிலையில் பிடி காட்டனை கண்டிப்பதில்தான் கவனம் செலுத்துகின்றார்கள். அடிப்படை உரிமையான பாசன வசதி பற்றிய விழிப்புணர்வோ, முக்கியத்துவமோ மறக்கப்படுகின்றது. மரபணு மாற்றப்ட்ட பிடி காட்டனிலும் போலி விதைகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. விற்பனை செய்தவர் யார், தொழில்ரீதியாக இவ்விதைகளை விற்பனை செய்வதற்கு தனிமனிதர் இயலாது, ஒரு கூட்டம் இருக்கவேண்டும். அவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பது பற்றிய தகவல்களை வலைத்தளங்களில் காண இயலவில்லை. விவசாயம் நஷ்டமடைந்து வறுமையில் இருப்பவர்களிடம் செத்தால் இரண்டு லட்சம் என அறிவிக்கும் 'புத்திசாலி' நிர்வாகமே மத்தியிலும், மகாராஷ்டிராவிலும் உண்டு. மகாராஷ்டிரா பருத்தி கொள்முதல் கூட்டுறவு அமைப்பின் ஊழல் மற்றும் நிர்வாக கோளாறுகளை பற்றி தகவல்களை வலைத்தளங்களில் காணலாம். இருப்பே போராட்டமாய் இருக்கும் விதர்பாவின் விவசாயிகளின் கடைசி கோவணத்தையும் உருவும் இவர்களின் கரை படிந்த கரங்களையும் பல வலைத்தளங்கள் கண்டு கொள்வதில்லை. இன்னொரு அதிர்ச்சி அளிக்கும் விஷயம் எனெனவென்றால் இது போன்று ஊழல்களில் ஈடுபடுவோரும் சாமானயரே. குழந்தை, மனைவி பாசம் என்று எல்லா விஷயங்களை அனுபவித்து டிவி சீரியல் பார்த்து கண்ணீர் விடும் மத்திய தர வர்க்கத்தினரே.
வெறும் மென்பொருள் துறையை பிடித்து குறைப்பட்டு கொண்டே இருந்தால் நிகழ்வின் வேறு குறைபாடுகள் புனிதப்படுத்தப்பட்டு மறக்கடிக்க படுகின்றன. மென்பொருள் துறைக்கெதிரான பிரச்சாரத்திற்கே இது பெரிதும் பயன்படுகின்றது.தெலிங்காணா பருத்தி விவசாயிகள் விஷயத்தில் தொடக்கத்தில் கோட்டை விட்டாலும் இழுத்து கட்டி குறை களைந்த ஆந்திர அரசு மென்பொருள் துறையிலும் கவனம் செலுத்து மாநிலம் மேம்படுத்துவதை காணலாம்.
மென்பொருள் துறையில் வேலை செய்வது காற்றில் மிதப்பது போல் சுகமானது என்ற கருத்துகள் பல இடங்களில் உண்டு. இங்கு வேலை நிரந்தரம் இல்லை, வேலைக்கான தகுதிகள் மேல் நோக்கி பிரயாணித்து கொண்டே இருக்கும். எட்டு மணி நேர வேலை, வாரக் கடைசி இளைப்பாறுதல் போன்றவை அவ்வளவு சுலபமாக எல்லா மென்பொருளாளருக்கும் அமைவதில்லை. மன அழுத்தமும், கடின உழைப்பும் தேவைப்படும் துறையாகவே மென்பொருள் துறை உள்ளது.
உருவாக்கப்படும் மென்பொருள்கள் வானில் விண்கலம் செல்லவும், சுலபமாய் புகைவண்டி சீட்டு வாங்கவும், தட்பவெப்பநிலைகளை கணக்கிடவும் மேலும் பல துறைகளிலும் உதவுகின்றது என்பது அவ்வளவாக நினைவில் கொள்ளப்படுவதில்லை.
மென்பொருள் நிறுவன உருவாக்கம் பல வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றது. என்பதுகளில் வேலை என்றால் அரசு வேலைகளே என்றிருந்த நிலை மாறி தனியார் நிறுவன வேலைகளையும் திரும்ப பார்க்க வைக்கின்றது. மென்பொருள் உருவாக்கத்தின் காரணமாய் கட்டடம் கட்டுதல், கட்டட நிர்வாகம், சாலை வசதிகள், புதிய குடியிருப்புகள், மின்சார உற்பத்தி மேம்பாடு, மின் விநியோக மேம்பாடு , விமான போக்குவரத்து, மோட்டார் வாகன தயாரிப்பு மற்றும் அதை சார்ந்த தொழில்கள், வங்கிகளும் அதை சார்ந்த தொழில்களும் என பல உப தொழில்களும் வேறு வழியில்லாமல் மேல் வருகின்றன. மென்பொருளின் பயன்பாட்டை அதிகரித்து அதை முறைபடுத்தி அரசு அலுவலகங்களுக்கு கொண்டு வந்தால் நிர்வாகம் மேம்படும், ஊழல் குறையும் சாத்தியமும் உண்டு.
சர்வீஸ் தொழில் நிறுவனங்களே அதிகம் நம்நாட்டில் வர காரணம் மனிதவளமே. அடிப்படை கட்டுமான பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. நம்நாட்டில் தடையில்லா மின்சாரமும், மேடு பள்ளம் இல்லா சாலைகளும் ஒரு ஆடம்பர பொருளாகவே உள்ளது. இவை அடிப்படையாக மாறும் பொழுதே உற்பத்தி தொழில்களுக்கான முதலீடு அதிகரித்து அந்த வகை தொழில்கள் மேம்படும்.
இப்போது நிகழ்ந்திருக்கும் டாடா- கோரஸ் இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் சாத்தியம் உண்டு. டாடாவிற்கு ஐரோப்பாவின் மிக பெரிய சந்தையின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இரும்பு கோரஸ் வழியாக ஐரோப்பாவை குறைந்த விலையில் அணுகுவது சாத்தியமே. இந்த டாடா-கோரஸ்க்கான நிதி இந்தியாவின் மென்பொருள் நிறுவனமான டிஸிஸ்லிருந்து கிடைத்திருப்பதாக பத்ரியின் பதிவில் படித்தேன். ஒரு துறையின் லாபம் வேறு துறைக்கு முதலீடாக நகருகையில் அந்த துறை மேம்பட்டு பணிவாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
மென்பொருள் துறையின் மேம்பாடு சமான்யரின் பொருளாதார நிலையை உயர்த்த அதில் ஒரு பகுதி இல்லாதவருக்கு சேருதலும் அதிகரித்துள்ளது. இயற்கை சேதங்களின் போதும, கல்வி உதவிகளிலும் மென் பொருள துறை சார்ந்த இளைஞர்கள் கொண்ட தன்னார்வ அமைப்புகள் இயங்குவதை காணலாம்.
திரைப்பட மோகமும், பரபரப்பு செய்திகளுக்கு அலைவதும் நமது அடிப்படை குணம். மென்பொருள் துறை அறவே இல்லாமல் இருந்தாலும் விதர்பா விவசாயின் தற்கொலை முதல் பக்கம் வரப் போவதில்லை. ஐஸ்வர்யா-அபிஷேக்தான் முதல் பக்கம். அவர்களது திருமணமே முதல் கவனம். அது நமது கலாச்சாரம். வேலைவாய்ப்பு அதிகரித்து படிப்பறிவு பட்டறிவாக மாற காலம் பிடிக்கும். பேஸன்சர் ரயிலின் வேகத்தில்தான் கலாச்சார மாற்றங்கள் நிகழும்.
Wednesday, January 31, 2007
பாடல்கள்
பாடல்கள் உடன் வந்து கொண்டே இருக்கின்றன. கார்களின் ரேடியோவிலும், கணிணியிலும் உடன் இருந்து கொண்டே இருக்கின்றன. சின்ன வயதில் எம்.ஜி. ராமச்சந்திரன் நடித்த திரைப்பட பாடல்கள் மேல் ஏற்பட்ட ப்ரியம் இன்னும் அகலவில்லை. சின்ன பயலே சின்ன பயலே சேதி கேளடா என டி.எம்.சவுந்திராஜன் பாடுவது இன்னும் கேட்க இனிமையாக இருக்கின்றது. மற்றோரு பாடலான உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் பாடல் என் குழந்தைக்கு நான் பாடும் தாலாட்டுகளில் ஒன்றாகவும் தங்கிவிட்டது.
பாடலை எழுதியது யாரென நியாபகம் இல்லை. வாலியோ, கண்ணதாசனோ, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமோ என அடையாளம் பிரிக்க முடியவில்லை. அடிமை பெண் திரைப்படத்தில் வரும் தாயிலாமல் நானில்லை பாடல் உதடுகளுக்குள் முணுமுணுப்பாக வந்து போகின்றது.
கொஞ்சம் வளர்ந்த போது ஒன்றிரண்டு டப்பாங்குத்து பாடல்களிடத்து பார்வை திரும்பியது. எனன படமென்று நியாபகம் இல்லை குன்னக்குடியின் இசையில் வந்த கொட்டாம்பட்டி ரோட்டிலே ஹோ ஹோய் பாடல் பிடித்த பாடல்களில் ஒன்றாய் இருந்தது. பின்பொழுதில் இளையராஜாவின் உருமியில் மனம் லயிக்க ஆரம்பித்தது.
அப்பா முருக பக்தர். அவரது தாக்கத்தினால் சிறுவயதில் முருகபக்தி மனம் நிறைந்திருந்தது. சீர்காழியின் பாடல்கள் வீட்டில் நிறைய இருந்தன. திருச்செந்தூரின் கடலோரத்தில் பாடல் மிகப்பிடித்த பாடலில் ஒன்று. ஊரில் சூலமங்கலம் சகோதரிகளின் கந்த சஷ்டி கவசம் சலிக்காமல் வீட்டில் ஒலிக்கும், அதை சலிக்காமல் கேட்க இயலும். அம்மா பேத்தி பால் சாப்பிட அடம் பிடித்தால் பேத்திக்கு கந்த சஷ்டி கவசம் படித்துக்காட்டுகிறார். சாமி கும்பிடாமல் வளர்க்க கூடாதென்பதில் கவனமாக இருக்கிறார்கள். உம்மாச்சியின் இருப்பை பற்றிய கேள்விகளை வாரிசிடம் வளர்கையில் அறிமுகப்படுத்தலாம் என விட்டாகி விட்டது.
புன்னகை மன்னன் வந்த போது என்ன சப்தம் இந்த நேரம் கேட்க ஆரம்பித்து இன்னமும் நிறுத்தவில்லை. எனக்கு தெரிந்து அந்த பாடல் பிடிக்கவில்லையென யாரும் சொன்னதேயில்லலை.
காதல் அரும்பிய தருணம் ஆனந்தம் படத்தின் என்ன இதுவோ என்ன இதுவோ பாடல் தந்த மோகம் மறக்க இயலாத ஒன்று. ஹார்மோன்கள் உச்சத்தில் இருக்க காருக்குள் பாடல் பரப்பி சாலையில் அவளோடு நிகழ்த்திய உரையாடல் அசைப்போட்டு செல்லுதல் சேமிக்க கூடிய நினைவுகளில் ஒன்று.
கருத்தம்மா வந்த பொழுதில் மலேசியா வாசுதேவன் பாரதிராஜா குரலில் வந்த காடு பொட்டை காடு ்பாடல் கேட்கையில் திருச்சி அருகே ஊர் பக்கம் போகும் பாதையில் உள்ள வெயில் அடிக்கும் பொட்டை காடுகளும் மாடு மேய்க்கும் சிறார்களும் வயதானவர்களும் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. ஆக்ரோஷமாய் காய்ந்த மண்ணிற்கு சொந்தகாரர்கள் பாடும் அந்த பாடல் மிகப் பிடிக்கும்.
கோட்டையை விட்டு வீட்டுக்கு போகும் சுடலைமாட சாமி பாடல் பிடித்தில் ஒன்று. குடந்தை டைமண்ட் தியேட்டரில் பார்த்த படம். பாடலின் முழு வரிகளோ, இல்லை படமோ நியாபகம் இல்லை. பாடலின் முதலிரண்டு வரிகள் மட்டும் நினைவில் உண்டு.
காதல் ஓவியம், முதல் மரியாதை இரண்டு படமும்தான் எல்லாப் பாடல்களும் பிடித்த படங்கள். கேட்க வைத்த ராசாவிற்கு நன்றி. நிலாவதான் நான் கையில புடிச்சேன் என்று கேட்பது கார் ஸ்டியரிங்கிலும் தாளம் போட வைக்கின்றன.
ஆங்கில பாடல்களுக்கு பரிச்சயம் கல்லூரி காலத்தில்தான் பரிச்சயம் கிடைத்தது. ஈகிள் குழுவினரின் வெல்கம் டு தி ஹோட்டல் கலிபோர்னியா பாடல் மிக பிடிக்க ஆரம்பித்தது. வரவேற்று வெளியே அனுப்ப மறுக்கும் அந்த வகை இடம் பிடித்திருந்தது. பின்னோரு நாளில் வேகாஸின் கேசினோ ஒன்றில் கொஞ்சம் ஜேக் ்டானியல்ஸ் மற்றும் மால்பரோ துணையோடு அமர்ந்திருந்த போது பான் ஜோவி குழுவினரின் இட்ஸ் மை லைப் பாடல் கேட்க நேர்ந்தது. அது முதல் தனியே நானும் ஜேக் ்டேனியல்ஸூம் இருக்கையில் அந்த பாடலை துணைக்கு வைத்துக் கொள்ளுதல் மரபாக வைத்துக் கொண்டேன். தற்சமயம் அந்த குறுந்தட்டும் தொலைந்து விட்டது, ஜேக் டேனியல்ஸையும் விட்டாகி விட்டது.
திருமணத்தின் பின் ்துணைவியின் கர்நாடக இசை ஆர்வத்தின் காரணமாய் எம்.எஸின் குறையொன்றுமில்லை பாடலை கேட்க நேர்ந்தது. அதற்கப்புறம் அடிக்கடி அந்த பாடலை கேட்க வேண்டியிருக்கிறது. மீராவில் எம்.எஸ் பாடிய பாடலையும் தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன்.
இன்னும் பல பாடல்கள் உண்டு. தினதந்தியின் கன்னி தீவு முடியும் வரை எழுதலாம்.
பாடலை எழுதியது யாரென நியாபகம் இல்லை. வாலியோ, கண்ணதாசனோ, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமோ என அடையாளம் பிரிக்க முடியவில்லை. அடிமை பெண் திரைப்படத்தில் வரும் தாயிலாமல் நானில்லை பாடல் உதடுகளுக்குள் முணுமுணுப்பாக வந்து போகின்றது.
கொஞ்சம் வளர்ந்த போது ஒன்றிரண்டு டப்பாங்குத்து பாடல்களிடத்து பார்வை திரும்பியது. எனன படமென்று நியாபகம் இல்லை குன்னக்குடியின் இசையில் வந்த கொட்டாம்பட்டி ரோட்டிலே ஹோ ஹோய் பாடல் பிடித்த பாடல்களில் ஒன்றாய் இருந்தது. பின்பொழுதில் இளையராஜாவின் உருமியில் மனம் லயிக்க ஆரம்பித்தது.
அப்பா முருக பக்தர். அவரது தாக்கத்தினால் சிறுவயதில் முருகபக்தி மனம் நிறைந்திருந்தது. சீர்காழியின் பாடல்கள் வீட்டில் நிறைய இருந்தன. திருச்செந்தூரின் கடலோரத்தில் பாடல் மிகப்பிடித்த பாடலில் ஒன்று. ஊரில் சூலமங்கலம் சகோதரிகளின் கந்த சஷ்டி கவசம் சலிக்காமல் வீட்டில் ஒலிக்கும், அதை சலிக்காமல் கேட்க இயலும். அம்மா பேத்தி பால் சாப்பிட அடம் பிடித்தால் பேத்திக்கு கந்த சஷ்டி கவசம் படித்துக்காட்டுகிறார். சாமி கும்பிடாமல் வளர்க்க கூடாதென்பதில் கவனமாக இருக்கிறார்கள். உம்மாச்சியின் இருப்பை பற்றிய கேள்விகளை வாரிசிடம் வளர்கையில் அறிமுகப்படுத்தலாம் என விட்டாகி விட்டது.
புன்னகை மன்னன் வந்த போது என்ன சப்தம் இந்த நேரம் கேட்க ஆரம்பித்து இன்னமும் நிறுத்தவில்லை. எனக்கு தெரிந்து அந்த பாடல் பிடிக்கவில்லையென யாரும் சொன்னதேயில்லலை.
காதல் அரும்பிய தருணம் ஆனந்தம் படத்தின் என்ன இதுவோ என்ன இதுவோ பாடல் தந்த மோகம் மறக்க இயலாத ஒன்று. ஹார்மோன்கள் உச்சத்தில் இருக்க காருக்குள் பாடல் பரப்பி சாலையில் அவளோடு நிகழ்த்திய உரையாடல் அசைப்போட்டு செல்லுதல் சேமிக்க கூடிய நினைவுகளில் ஒன்று.
கருத்தம்மா வந்த பொழுதில் மலேசியா வாசுதேவன் பாரதிராஜா குரலில் வந்த காடு பொட்டை காடு ்பாடல் கேட்கையில் திருச்சி அருகே ஊர் பக்கம் போகும் பாதையில் உள்ள வெயில் அடிக்கும் பொட்டை காடுகளும் மாடு மேய்க்கும் சிறார்களும் வயதானவர்களும் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. ஆக்ரோஷமாய் காய்ந்த மண்ணிற்கு சொந்தகாரர்கள் பாடும் அந்த பாடல் மிகப் பிடிக்கும்.
கோட்டையை விட்டு வீட்டுக்கு போகும் சுடலைமாட சாமி பாடல் பிடித்தில் ஒன்று. குடந்தை டைமண்ட் தியேட்டரில் பார்த்த படம். பாடலின் முழு வரிகளோ, இல்லை படமோ நியாபகம் இல்லை. பாடலின் முதலிரண்டு வரிகள் மட்டும் நினைவில் உண்டு.
காதல் ஓவியம், முதல் மரியாதை இரண்டு படமும்தான் எல்லாப் பாடல்களும் பிடித்த படங்கள். கேட்க வைத்த ராசாவிற்கு நன்றி. நிலாவதான் நான் கையில புடிச்சேன் என்று கேட்பது கார் ஸ்டியரிங்கிலும் தாளம் போட வைக்கின்றன.
ஆங்கில பாடல்களுக்கு பரிச்சயம் கல்லூரி காலத்தில்தான் பரிச்சயம் கிடைத்தது. ஈகிள் குழுவினரின் வெல்கம் டு தி ஹோட்டல் கலிபோர்னியா பாடல் மிக பிடிக்க ஆரம்பித்தது. வரவேற்று வெளியே அனுப்ப மறுக்கும் அந்த வகை இடம் பிடித்திருந்தது. பின்னோரு நாளில் வேகாஸின் கேசினோ ஒன்றில் கொஞ்சம் ஜேக் ்டானியல்ஸ் மற்றும் மால்பரோ துணையோடு அமர்ந்திருந்த போது பான் ஜோவி குழுவினரின் இட்ஸ் மை லைப் பாடல் கேட்க நேர்ந்தது. அது முதல் தனியே நானும் ஜேக் ்டேனியல்ஸூம் இருக்கையில் அந்த பாடலை துணைக்கு வைத்துக் கொள்ளுதல் மரபாக வைத்துக் கொண்டேன். தற்சமயம் அந்த குறுந்தட்டும் தொலைந்து விட்டது, ஜேக் டேனியல்ஸையும் விட்டாகி விட்டது.
திருமணத்தின் பின் ்துணைவியின் கர்நாடக இசை ஆர்வத்தின் காரணமாய் எம்.எஸின் குறையொன்றுமில்லை பாடலை கேட்க நேர்ந்தது. அதற்கப்புறம் அடிக்கடி அந்த பாடலை கேட்க வேண்டியிருக்கிறது. மீராவில் எம்.எஸ் பாடிய பாடலையும் தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன்.
இன்னும் பல பாடல்கள் உண்டு. தினதந்தியின் கன்னி தீவு முடியும் வரை எழுதலாம்.
Subscribe to:
Comments (Atom)