Tuesday, July 10, 2012

தக்ஷிணாமூர்த்தி தருணங்கள்

இரு ஆண்டுகள் முன்பு ஜெயமோகனை சந்தித்தேன்.  அவருடன் உரையாட போதுமான நேரம் இல்லை. மிக குறைவான நேரமே அவருடன் இருக்க முடிந்தது.  அது மறக்க முடியாத துவக்கம். ஆசிரிய பார்வையின் அவசியதினை அறிமுகம் செய்தது.


இந்த வருடம் இரண்டு ஆளுமைகளை சந்தித்தேன். சான்ப்ரான்சிஸ்கோ ராஜனுக்கும், பெட்னா தமிழ் திருவிழாவுக்கும் , கார்திகேயனுக்கும், திருமூர்திக்கும், பாஸ்டன் பாலாவுக்கும் நன்றி பல.

தமிழின் எழுத்து ஆளுமைகளான நாஞ்சில் நாடன், எஸ்,ராமக்ருஷ்ணன் இருவரையும் சந்திக்க முடிந்தது. அவர்களுடன் உரையாட முடிந்தது. இவை எனக்கு  ஒரு தக்ஷிணாமூர்த்தி தரிசன தருணங்கள். புதிய பார்வைகள், புதிய கேள்விகள் , புதிய மொழி அனுபவங்கள் இவர்களால் வாய்த்தது. வணக்கதுக்கு உரிய ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். 


இந்த தருணங்களின் தொடர்ச்சியாய் சில புதிய நண்பர்களை சந்திக்க நேர்ந்தது.  அமெரிக்காவில் தமிழ் கல்வி ஒட்டிய செயல்பாடுகளும், தமிழக அரசியல் செயல்பாடும், பெரும் விழா கொண்டாட்ட மகிழ்வும், அதற்கு நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் நண்பர்களின் தன்னார்வ  உழைப்பும் ஒரு பாடமாய் இருந்தது.

No comments: