Wednesday, May 30, 2012

அங்கீகாரதின் அவசியம்

எதற்காக ஸ்டீவன் ஹாக்கின்ஸ் இந்திய ஞான மரபின் வழி வரும் பிரபஞ்ச கருத்தினை அங்கிகரிக்க வேண்டும். அந்த அங்கீகாரதின் அவசியம் என்ன? எந்த நோக்கில் அந்த அங்கீகாரம் முக்கியம் பெறுகின்றது என கேள்விகள் எழுப்பி பார்க்க வேண்டி இருக்கின்றது. ஒரு கல்வி சார்ந்த அறிவு அமைப்பு பிறந்து தன் செயலூக்கம் மூலம் தன்னை பொது தளத்தில் முன் வைத்து , விவாத படுத்தி, தான் வளர்ந்து அதன் வளர்ச்சியில் மொத்த சமூகத்தினை உள்ளடக்கி அந்த சமூகத்தின் உற்பத்தி கூறுகளை தனது கல்வி சார் கருவிகளால் தொடர்ந்து மறு ஆக்கம் செய்து நகர்ந்து சென்று இருக்கின்றது. அந்த கல்வி அமைப்பு தன் நிறுவன வடிவதினை பிரதி செய்து பலவாகுகின்றது. தன் கருவிகளின் பலனை உற்பத்தி கூறுகளில் காணும் நேரம் அதனை ஆவணபடுத்தி அளவிடுகின்றது. அந்த அளவுகளை விரிவாக்கும் தளத்தில் தன் செயல் கூறுகளை மறு வடிவம் செய்கின்றது. விரிவு காணும் பொழுது தன் அமைப்பினை துறை சார்ந்து பிரித்து கொள்கின்றது. இந்த பிரித்து விரிதல் தொடர் செயல் ஆகும்பொழுது இந்த வகை கல்வி அமைப்பு அதிக அளவு சமூக பங்கெடுபினை கோருகின்றது. புதிய உற்பத்தி கூறுகள் கல்வியிடம் இருந்து முளைத்தது போல , புதிய உற்பத்தி கூறுகள் தங்களுக்கு வேண்டிய கல்வியையும் ஒரு உற்பத்தி பொருளாக்குகின்றனர். இந்த உற்பத்தி சாதனங்கள் அதற்கான முதலீட்டினை சார்ந்து உள்ளன. கல்விக்கான முதலீடு பெருகுவது கல்வி செயல் பாட்டார்களினை விட குறையும் பொழுது முதலீட்டு சார்ந்த ஒரு போட்டி உண்டாகுகின்றது. ஆவனபடுத்தபட்ட அளவீடு கருவிகள் முதலீட்டினை உற்பத்தி பெருக்கும் அமைபுக்கே செலுத்தும் செயல் ஏற்படுகின்றது. ஸ்டீவன் ஹாக்கின்ஸ் இந்த வகை  கல்வி சார் அமைப்பின் ஒரு செயல்பாட்டாளர். அவரது கல்வி அமைப்பு ஒரு மாபெரும் மானுட மாற்றதினை உண்டு செய்து உள்ளது, அதுவே அவரது அங்கீகாரம். அந்த மாபெரும் மாற்றம் எந்த வகை அற செயல் பாட்டினை மானுட மனதில் உண்டு செய்தது என்பது வேறு ஒரு தளம் சார்ந்த கேள்வி.

இதன் மாற்றான கல்வி அமைப்பு ஒன்று இருந்து இருக்கின்றது. அது பிறந்தது. வளர்ந்தது. பின்னர் சுவீகாரம் செய்ய பட்டது. இந்த வகை கல்வி அமைப்பு உற்பத்தி கூறுகளை பாதிக்காத தளத்தில் செயல் ஊக்கம் கொண்டிருந்தது. எனவே கல்வி, விவாதம் போன்றவற்றை நிகழ்த்திய தளம் பெருமளவு சமூக பங்கெடுப்பு தேவை இல்லாத இடமாக இருந்தது.  உற்பத்தி கூறுகளுக்கு வெளியே உள்ள அமைப்பு கல்வியை ஒரு விசேட பொருளாக மாற்றி, கல்வி நூல்களை ஒரு குறியீடாக மாற்றி விட்டது. போதிய ஆவண படுத்தலும், அளவீடு செய்தலும் இல்லாத காரணத்தினால் ஒரு தேக்க நிலையை ஒரு கட்டத்தில் அடைந்தது. பெரும் நிறுவன படுத்த பட்ட கல்வி அமைப்புகள் உண்டாகி நிரூபணம் சார்ந்த விவாத முறைகள் வரவில்லை. இந்த வகை கல்வி அளவீடுக்கு அப்பாற்பட்டது ஆகி, சமூக மன நிலையாய் இல்லாமல் , தனி மனித அனுபவமாகி விட்டது. ஒரு சமூக உறுப்பினன் தன் சுய தேடலால் மட்டுமே இந்த வகை கல்வி அமைப்பின் உள்ளே செல்ல முடியும். சமூக கூட்டு பங்கு தேவை இல்லை. இந்த கல்வி  அமைப்பு மூலதனம் திரட்டும் உற்பத்தி கூறுகள் குறையும் காலத்து மங்கி போகின்றது.
இரண்டாம் வகை கல்வி கூறு தனது உற்பத்தி சார்ந்த இடங்களில் நீண்ட கால செயல்பாட்டின் காரணம் கொண்டு ஒரு அறிவு தொகுப்பினை உண்டாக்கியது. ஆவண படுத்தும் கல்வி அமைப்பு அந்த தளத்தில் பெருமளவு இல்லாததால் அவ்வகை அறிவு தொகுப்பும் அதிக அளவில் இழக்கப்பட்டது.     

இந்த இரண்டு அமைப்புமே சாமான்ய தளம் , விசேட தளம் என இரண்டு அடுக்கு உடையது. ஆனால் முதல் கல்வி அமைப்பு புறம் சார்ந்தது, அது வலு காண்பது அதிக அளவு சமூக பங்கெடுபின் மூலமே. அது அவ்வகை சமூக பங்கேடுபினை கொண்டு வரும் கருவிகளை தொடர்ந்து உண்டு செய்து கொள்கிறது.  இரண்டாம் அமைப்பு புற கூறுகள் மாற்றாதது , அதன் விசேட தளம் மெல்ல இறுகி போன ஒரு அமைப்பாக மாறி போனது, அதன் குறியீடு வகை கல்வி சமூகத்தின்  பல இடங்களில் குறியீடாகவே தங்கி விட்டது. இந்த இரண்டாம் வகை கல்வி சார் ஒரு கருத்து முதல் வகை கல்வி அமைப்பின் பிரதிநிதியின் அங்கீகாரம் காண்பது மிக கடினம்.

இந்த இரண்டாம் வகை கல்வி அமைப்பு தன்னை நிறுவன படுத்தி கொள்வதன் மூலமும், மதம் சார்ந்த வடிவத்தில் இருந்து நகர்ந்து தத்துவ, நவீன கல்வி தளத்தில் நகர்த்தி பல வகை உரையாடல்களை உண்டு செய்வதன் மூலமே தன்னை  வலு செய்து கொள்ளலாம். தன்னை மிக பூடகமாக கருதி , மத அடையாளதில் கரைந்து  பெரும்பாலருக்கு புரியாத ஒரு தளத்தில் இருப்பதே  தன் பெருமை என நினைத்தால் அதன் வளர்ச்சி மிக கடினமே.                        
   
நாம் பெருபாலும் நிற்பது முதல் வகை கல்வி அமைப்பில்தான் அதனால் தான்  ஸ்டீவன் ஹாக்கின்ஸ் இந்திய ஞான மரபின் வழி வரும் பிரபஞ்ச கருத்தினை அங்கிகரிக்க வேண்டும் என நினைக்கிறோம் என படுகின்றது           

அறிவியல் ஒரு ஆழ்மன அக செயல்பாடா?

பண்பாடு , மானுட கூட்டு மனது  எனும் சமூக கூறுகள்  நிகழும்  அரசியல்  ,  பொருளாதார அமைப்புகள் கொண்ட புற அமைப்பானது   தகவல்கள், தரவுகள் என  தொகுக்க பட்ட கல்வி அமைப்பின் மீதே  அமைந்துள்ளது.  எது சமூகம் , எவர் சிந்திக்க  முடியும், எது கருத்து  என்பதும் ,ஒருவரது ஆழ்மனது இயங்கும் விசை, திசை  முதலியவை  அவரது  புற காரணிகளால் அமையும் சமூக இருபிடத்தாலும், சாத்தியதாலுமே  நிகழ்கிறது.   ஆழ்  மனது  சூனியத்தில்  இருந்து  கருத்தினை உருவாக்குவது இல்லை. கருத்தின்பால் வரும்  செயல் சூனியத்தில் நிகழ்வதில்லை.  
மனிதனின் இயல்பான  "ஏன்"  எனும்  வழி திறக்கும், திறந்த கதவுகள் அதிகம். இது ஒரு ஆதி கேள்வி. இது மனிதனை ஐந்தறிவு உயிரிடம் இருந்து வேறு படுத்துவது. ஆனால் இப்படி ஒரு கேள்வி எழும் உயரம் மானுட  புற காரணிகள் கொண்டே அமையும்.  ஏன் எனும் கேள்வி எழுப்பும் எவரும், கேள்வி எழுப்படும் எதுவும் தகவலாகவோ , தரவாகவோ உரு மாறி நிற்பதில்லை. எனவே ஏன் எனும் தருணமே எல்லாவற்றுக்கும் சிறப்பு  என சொல்லி விட முடியாது. ஒரு தொடர் செயல் பாட்டின் வழியே மட்டுமே அது தரவாக, தகவலாக மாற்ற படுகின்றது.  செயல்  பற்றி இல்லாமல் துவக்கதினை மட்டும் சொல்வது மொத்த செயல் பாட்டையும்  குறியீடு மொழியில் மாற்றுவது 
போல் உள்ளது.
இது ஒரு தொடர் கதை.

ஐரோப்பா வழி கல்வி முன் வைக்க பட காரணம்

ஐரோப்பா மட்டும் முன் வர காரணம் அதன் மானுட இணைப்பு சக்தியே. அந்த இணைப்பு  காலனி ஆதிக்கம் வழி நடந்தது. அந்த இணைப்புக்கு தொழிற்புரட்சி நவீன அறிவியல் தொழில்நுட்பம்  முதலியவை கருவிகள்.  ஐரோப்பா இந்த கருவிகளை கையாளும் விதத்தினையும், இந்த கருவிகள் வழி மேலும் புதிய அறிவியல் , தொழிநுட்ப  வளர்ச்சியை  உண்டாக்கும்  விதத்தினை  கண்டு  கொண்டது. அது அதன் சிறப்பு.   
 
மானுடத்தின் புற கருவிகள் கொண்ட சார்பு மிக பெரியது. அவை  மானுட  கூட்டு  சமூகத்தினை மிக பெரிய சலனத்திற்கு ஆட்படுத்தி உள்ளன. இந்த புற கருவிகளே மானுட அறத்தினை காலம் தோறும் வலிமை கொள்ள செய்கிறன. அரசியல்  கோட்பாடுகளை  உருவாக்குகின்றன. இந்த புற கருவிகள்  "ஏன்" எனும் மானுட மனதினை  மேம்படுத்தும்  சாத்தியத்தின் வெளிப்பாடுகள் . வெளிப்பாடுகளை உருவாக்குவதை  மட்டும் ஐரோப்பா செய்ய வில்லை , அதனை பயன்பாடு பொருளாய் நடை முறை படுத்தி மானுட இணைப்பினை  முன் வைத்தது.
 
என்று சக்கரம் தேவை பட்டதோ , என்று நெருப்பின் உருவாக்கம் செயற்கையாக  சாத்திய பட்டதோ அன்றே புற கருவிகள் உருவாகி விட்டன. இன்று இணையம் ,  அதி வேக  விமானங்கள்  என பல வடிவங்களில் அந்த கருவிகள் மானுட இணைப்பினை வலு செய்கிறன.  புதிய அரசியல், பொருளாதார  கோட்பாடுகளினை மானுட இணைப்பு   தளங்களில்  உருவாக்குகின்றன.   குடிமை உணர்வினை உண்டு செய்கிறது.  
 
புற கருவிகள்  மானுட   விழிப்புணர்வினை   உண்டாக்குகின்றன.  உன்னை போலவே உணர்ச்சியும் , உரிமையும் உடையவன் உன் சக மானுடன் என்பதை உணர செய்கின்றன. தகவல் பரிமாற்றமும், தகவல் சேகரிப்பும், பகிர்தலும் புதிய உச்சத்தினை தேடி செல்கிறது. மானுட இருள் மனதை 
பதற செய்யும் அளவிற்கு , அதன் ரகசிய அறைகளை தட்டி தகவலாய் மாற்றுகின்றது. 
 
எல்லா வகை தகவல் சேகரித்து பகிரப்படும் அளவுக்கு   அதனை உள்வாங்கி அறிவாய் மாற்றும் திறம்  இன்னும் மானுட அமைப்புக்கு கூடவில்லை. இந்த வேகம் நிச்சயம் ஒரு பரிணாம  வளர்ச்சியை தூண்டும் என நினைகின்றேன்.  ஐரோப்பா கல்வி /அறிவியல் அமைப்பு இந்த வகை சாத்தியங்களின் ஆரம்பம். 
 
இந்த தகவல் தொகுப்போ, சேகரிப்போ அதன் வாடிக்கையாளர் தகுதி பார்த்தோ ,தரம் பார்த்தோ தன்னை விஷேட படுத்தி கொண்டோ வருவதில்லை. அது தொகுத்து கொள்ள காரணம் அது ஒரு தகவல் என்பதால் மட்டுமே. அது எல்லாருக்கும் சாத்தியம் படும் இடத்தில்தான்  உள்ளது.    
 
இந்த கல்வி அமைப்பு தகவல்களை , தரவுகளை புனித படுத்துவதில்லை. கருவறைக்கு கொண்டு செல்வதில்லை. அதை குறித்த விலக்கம் இல்லாமல் போகின்றது. விவாதம் சாத்தியமாகின்றது.  போட்டு நசுக்கினாலும் மனம் பதட்டம் அடைய வேண்டாம்.
 
இந்த வகை கல்வி அமைப்பில் தகவல்களினால் , தரவுகளினால்  கிடைக்கும்  மெய்ஞான  அனுபவங்கள் இந்த கல்வி அமைப்பின் வெளியே செல்கிறது. அவை  தனியே  தளம்  கொள்கிறன.  இந்த தனி மனித அனுபவங்கள்  கல்வி  தளத்தில் விவாத படுத்தபடுதல் அமையாது. கருத்துகள்  முடங்குதல் அமையும்.  ஒரு தனி மனிதனின் தனி அனுபவம் அவனுக்கே உரித்தானது, ஒரு புத்தகம் , கவிதை, ஓவியம், சிற்பம், கலவி,  தியானம்   உண்டாக்கும்  அனுபவம்  அந்த  மனத்தால்  மட்டுமே  உணர கூடியது. ஓப்பிடு இல்லாதது. அதை வார்த்தை கொண்டு வார்க்கலாம். அதை மற்றொரு மனது அதே தளத்தில், அதே அளவில்  உணர கூடுமோ என்பதை நிரூபிக்க இயலாது.   அதை அளவீட போதுமான தகவலோ , தரவுகளோ கிடையாது. 
 
எனவே தகவல்கள் தரவுகள் கொண்ட கல்வி அமைப்பு , மெய்ஞானம் என கருத படும் அமைப்பின் வெளியே இருப்பது அவசியம். அந்த மெய்ஞான தளத்தில் இருந்து  ஒரு புதிய தகவல் உண்டாக்க படும் போது  அது மெய்ஞான தளத்தில் தேங்குதல் அமையாமல் ,  அவை மீண்டும்   தகவலாக,தரவுகளாக தொகுக்க பட்டு கல்வி அமைப்புக்குள் கொண்டு செல்ல படுகின்றது  அதை ஐரோப்பா புரிந்து கொண்டது.  
 
சீனத்தின் கண்டுபிடிப்பு அங்கிகாரம் மறுக்க படவில்லை. ஆனால் அந்த கண்டுபிடிப்பின் சாத்தியத்தினை விரிவு செய்து நடைமுறை படுத்தி  பெருமளவு பங்கேற்பாளர்களை உள்ளே கொண்டு வந்து வலுவான கல்வி அமைப்பாய்  மாற்றி மானுட  இணைப்பினை செய்தது   ஐரோப்பா.     
 

வணக்கத்துக்கு உரியவர்களும், வணங்க படுவர்களும்

இந்த சமூகத்தில் வணக்கத்துக்குரியவர்கள் உண்டு, வணங்கபடுவர்கள் உண்டு. முதல் நிலை சிறந்தது, ஒருவரை அவரது கருத்து நிலைபாட்டின் படி பார்ப்பது. ஆசிரிய வடிவம் போல் இருப்பதுவணக்கத்துக்குரிய நிலைப்பாடு. அந்த இடத்தில் ஆசிரியரோடு  கல்வி உண்டு, விவாதம் உண்டு. அங்கு கற்று கொடுக்க படுவது சிந்தனையின்  எழுத்துக்கள்.  அந்த எழுத்துகளை தொகுத்து வார்த்தைகளை, வாக்கியங்களை அமைப்பது   நம் செயல். ஆசிரியரே மொத்த சிந்தனை அமைப்பையும் வார்த்து முளைக்குள் திணிப்பது இல்லை. சிந்திக்கும் தவம் நமக்குரியது. ஏதேனும் ஒரு காரணத்தால்  நம் செயல் வழி வரும்  சிந்தனை உடைவதால் நாம் உடைவதில்லை. புதிய சிந்தனை பழைய இடத்தினை நிரப்புகின்றது. முதல் சிந்தனையோடையின்  வழி இரண்டாம் கட்டம் நகர்கின்றோம்.
ஆசிரியரும் தனது சிந்தனை கல்வியை  மாற்றும் செயல் உள்ளவரே. புதிய  பாடங்கள்  உருவாக்கவும் , முன் வைக்கவும், தான்  முதலில்  சொன்னவற்றினை  மறு  பரிசீலனை  செய்யவும்  அவருக்கு உரிமை உண்டு. இந்த செயல்பாடு அவரை  வலிமை  செய்கிறது.  இதனால் கற்று கொடுத்த ஆசிரியர் காலாவதி ஆவதில்லை. அவர் இருகிறார். அவர் வணக்கத்துக்கு உரியவரே. 

மற்றொரு நிலைப்பாடு வணங்கபடுவது. இது ஒரு குறியீடாக மாற்றும் நிலைபாடு.  கேள்விகளை,விவாதங்களை அகற்றும் நிலைபாடு. இது  கோருவது  பக்தியை மட்டுமே. பிரார்த்தனைகள் மட்டுமே சாத்தியம். பிரார்த்தனை கல்வி அல்ல. பிரார்த்தனைகள் வரங்கள் மட்டுமே தர இயலும்.  பிரார்த்திக்கும் ஒன்றினை  கேள்வி கேட்ட இயலாது. பிரார்த்தனை சில நேரம் காதலாய்,கோபமாய் கூட வடிவம் கொள்வதாய் தோன்றும். அந்த வடிவங்கள் வெறும் பாவனையே. பிரார்த்திக்கும் ஒன்றினை தாண்டி செல்ல இயலாது. அதற்கு நம்பிக்கை இடம் கொடுக்காது.          
ஒரு கட்டத்தில் நாம் வணகுவது நமது அகங்கார செயல்பாட்டின் ஒரு வெளிப்பாடாய் மட்டுமே முடியும். நாம் வணங்கும் வடிவம் கேள்விக்கு உள்ளாகும் பொழுது உண்மையில் உடைவது நமது சொந்த அகங்காரமே. எந்த கேள்வியும் இல்லாமல் பக்தி வடிவில் தொகுக்கபட்ட நம்பிக்கை உடைகையில்    உடைவது நாமே. அதை கையாள்வது சுலபம் அல்ல. வணங்குவதை முன் வைத்து உரையாட முடியாது  அவ்வகை உரையாடல்  தனிப்பட்ட தாக்குதலாய் மனம் உணர நிறைய வாய்ப்பு உண்டு. இதை தவிர்க்க  இரு வழி  உண்டு.
முதல் வழி நம்பிக்கையின்  மீதான  பொது  உரையாடலை தவிர்ப்பது. நம்பிகையாளராய்   இருக்கையில் அந்த நம்பிகைக்குள்  மட்டும் உள்ளவரோடு  உரையாடலாம்.
இரண்டாம் வழி வணங்கபடும் கருத்துகளை வணக்கத்துக்கு உரியதாய் மாற்றுவது.

மானுட தர்மம்

மானுட தர்மம்
-----------------------------------------------------------------------
மானுட  தர்மம்  என்பது மானுடன்  செய்யும் தொழில் அல்ல. மானுட தர்மம் என்பது மானுடனின் தேர்வு செய்யும் உரிமையே. பிரபஞ்சத்தில் ஒரு ஜீவாத்மா தன்னை ஒரு ஜீவாத்மா என உணரும் இடம் அந்த தேர்வின் பொழுதே.   அந்த இடத்தில இருந்து ஜீவாத்மா  பரமாத்மா இணைப்பு துவங்குகிறது என வைத்து கொள்ளலாம்.

இந்த தேர்வு செய்யும் உரிமை, அதன் முக்கியம்  ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்  உணரபடவில்லை.  இப்போது அந்த கால கட்டத்தினை தாண்டி செல்கின்றோம்.      



 "நாம் எதைச் செய்தாலும் தாழ்வாக மட்டும் அல்ல, உயர்வாகவும் நினைக்காமல் அது சமுதாயத்திற்காக செய்யப்பட வேண்டும் "  எனும்   சமுதாயம் எனக்கு தெரிந்து அமைந்ததே  இல்லை.அது ஒரு காந்திய கனவு. முற்காலத்தில் ஒரு கணியன் அதே போல ஒரு  கனவு கொண்டிருந்தார்.
 
என்று குடும்பம் உருவானதோ அன்றில் இருந்தே  தேவைக்கு மேல் சாப்பிட்டு, கலவிக்கு விரும்பி,சொத்து  சேர்த்து ,  அதிகாரம் உண்டாக்கிதான் சமூகம்  லௌகீக வாழ்வு வாழ்ந்துதான் வருகின்றது.  என்று லௌகிக வாழ்வு சாத்திய பட்டதோ அன்றில் இருந்து உயர்வு தாழ்வு உண்டு.
  
இங்கு நான் முன் வைப்பது பொருளாதார சம நிலை சமுதாயம் அல்ல. நான் முன் வைப்பது சம நீதி , சம  வாய்ப்பு சமுதாயம் . வேலை என்பது சமுதாய சேவை அல்ல.  வேலை என்பது உருவானதே பொருளாதார கூறோடுதான். சில வேலைகள் கடினமான உடல் உழைப்பினை,
 மிக சிரமமான வேலை சுழலை, குறைந்த கூலியை, அதிக வேலை நேரம்  கொண்டவையாக இருக்கும் . சில வேலைகள் இவை போல் இருக்காது. சில வேலைகள் இவைகளுக்கு நடுவில் இருக்கும். ஒருவர்  இந்த  மூன்று  வகை  பட்ட  வேலைகளில் ஒன்றினை தனது விருப்பின் பேரில் தேர்ந்து எடுக்கும் பொது அதில் சிக்கல் இல்லை. அந்த வேலை அவர்களுக்கு நேர்ந்து விட படும்போதுதான் சிக்கல்.  அவர்களது குல தர்மமாக இருக்கும் போதுதான் சிக்கல்.
 
ஒரு சமூக உறுப்பினன்   தனது விருப்பத்துக்கு ஏற்ப தனது வேலையை தேர்வு செய்யவும், தேர்வுக்கு உண்டான தகுதியை தேடவும் வழி செய்யும் சமுதாயமே சம நீதி சம வாய்ப்பு சமூதாயம்.   சமூக உறுப்பினன்   முயற்சி வெற்றி ஆகலாம் , தோல்வி ஆகலாம். அது முக்கியம் இல்லை. ஆனால் அவ்வகை முயற்சி சாத்திய படல்   வேண்டும். இதைதான் தேர்வு செய்யும் உரிமை மானுட அறம் என்று சொல்லி இருந்தேன்.


 அறிவெனும் குறியீடு 
------------------  
 அறிவை தொழலாம். அறிவின்  முடிவின்மையை வணங்கலாம்.   அந்த முடிவின்மையை   சரஸ்வதி  என  குறியீடாக நினைக்கலாம்.
 அறிவின் தேடல் ஒரு தொடர் ஓட்டம்.அந்த ஓட்டத்தினை குறியீடாக்க கூடாது என்றே எண்ணுகிறேன். அறிவின் ஓட்டத்தில் வரும் ஆசான்கள், ஆவணங்கள்  அனைத்தும் குறியீடாக்கி வணங்கபட்டால்  எஞ்சி நிற்பது எது?.
அறிவின் சாரமாய் வரும் கருத்துகள் தொகுக்கபட்டு , விவாதிக்கபட்டு , உடைக்கபட்டு  முன்  நகர்தலே  மானுட வளர்ச்சி மையம். மானுட  அறம் என நாம் நினைப்பது இந்த அறிவின் வளர்ச்சியினால்தான் கட்டபடுகின்றது.  


எனது புரிதல்

அடுக்கு நிலை சாதிய அமைப்பின் பிரச்சனைகள்  , சாதிய அமைப்பினை நோக்கிய  எதிர்ப்பு  என்பது பலராலும் ஏற்றுக் கொள்ள பட்டது.  சாதிய எதிர்ப்பு என்பது  இரண்டு தளங்களில் நிகழலாம். 

1) இருக்கும் அமைப்பினை நொறுக்கி தள்ள விழைவது.
2) மற்றோன்று இந்த அமைப்பினை உள் நோக்கி  பார்த்து ஒரு அடுக்குகளின் நடுவில் உரையாடலை உண்டாக்குவது, அடுக்குகளின் மனசாட்சியினை நோக்கி தொடர்ந்து பிரச்சார ரீதியில் வைப்பது.
கால கட்டம்
---------------------

இந்த இரண்டினையும் பார்க்கும் பொழுது  இவை நிலவிய கால கட்டம் கணக்கில் கொள்ளபடல் வேண்டும். வர்ணாசிரமம் நிலை சக்திகளால் ஆதியில் முன் எடுக்க பட்டது என உருவகம் செய்ய படுகின்றது. அது முழு உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. நிலை சக்திகளாய் அறியப்படும் சமூக குழுக்கள் அற்ற கிராமிய அமைப்பும் கடுமையான அடக்கு முறை சாதிய முறை உடையதாகவே இருக்கின்றது. இங்கு சாதிய அமைப்பு உற்பத்தி சார்ந்ததாய் உள்ளது. நவீன அறிவியலும் அதை சார்ந்த புதிய உற்பத்தி கூறுகளும் , மாற்று தொழில் அமைப்புகளும் இல்லாத நிலையில் உணவு , உடை , கட்டுமானம சார்ந்த ஒரு எளிய சுய சார்புள்ள அமைப்பானது கிராமமாக உருவெடுக்கின்றது. புதிய உற்பத்தி கருவிகளும் , தொழில்களும் தொடர்ச்சியாக நெடுங்காலம் இல்லாத காரணத்தினால் இந்த எளிய அமைப்பு இறுகி போகின்றது. அது தனது உற்பத்தி கூறுகளில் கருணையை கட்ட மறுக்கின்றது.


உயிரியின் தகவமைப்பு கூறு போல , ஒரு சமூக மன நிலையின் தகவமைப்பு கூறு என்று ஒன்று உள்ளது. உயிரியல் சூழலில் ஏற்படும் மாறுதல்கள் உயிரின மரபணுவோடு மோதி அதில் மாற்றதினை கட்டாயாய படுத்துகின்றன. அது இல்லாத பொழுது அந்த உயிரினம் அதை நிலையில் தங்கி போகிறது. அதே போல ஒரு சமூகம் அதன் பொருளியல் உற்பத்தி கூறுகளில் மாற்றங்கள் இல்லாமல் போகையில் ஒரு எளிமை படுத்த பட்ட அமைப்பில் தங்கி போகிறது. இந்த எளிய அமைப்பானது பின்பு சிறு கிராமம் ,  நகரம் , அரசு என விரிதல் கொண்டு  நகருகின்றது. ஆனாலும் விரிதலிலும் அதன் உற்பத்தி முறைகள் மாறுவதில்லை. ஆகையால் அதிகார அமைப்புகள் தங்களை மேலும் கீழும் அடுக்கில் நகர்த்தும் போதும் அடிப்படையான அடுக்கு முறையினை தளர்த்த முயல்வதில்லை.

இந்த அதிகார அமைப்பின் வெளியே ஒரு நிலையான இடம் தேடி சில சமூகங்கள் நகரும் பொழுது அவை நிலை சக்தி வடிவம் கொள்கிரன. இந்த நிலையான இடம் நிறுவ ஆதி தேடலின் தொடர்ச்சியான கடவுள் வடிவம் பயன் படுத்த பட்டது. கடவுள் கோட்பாடு அதிகார அமைப்பு தாண்டி வலிமையானது. உற்பத்தி கூறுகளோடு தொடர்பு அற்றது. புற கூறுகள் தாண்டி அக நிலைபாட்டினை தொடுவது. அதில் முன்னோடியாக நிறுவிகொள்வதன் மூலம் இந்த அடுக்கின் வெளிபுறம் சென்று விடலாம். அடுக்கின் மேல் கீழ் நகர்வின் விசையை தாண்டி சென்று விடலாம். அடுக்கின் வெளியில் நகர்ந்த குழுக்கள் தங்களை நிறுவனபடுத்தி கொள்ள மடாலயங்கள் , ஆதீனங்கள் என நகர்ந்தன.
நிறுவன படுத்தபட்ட எந்த அமைப்பும் தனது சமூக பொருளாதார் மதிப்பினை நிலை நாட்ட அகல படுத்த பிரச்சார உத்திகளை கையாளும். இந்த வகை பிரசாரங்கள் ஒரு அரசியல் செயல்பாடே. ஆழங்களை அதிகார சக்திகளும் , அகலம் செய்தலை நிலை சக்திகளும் முன் எடுத்தன. விழிப்புணர்வு  கொண்டு இவ்வகை இயங்கு தன்மை கொண்ட அதிகார, நிலை சக்தி அமைப்புகளை வன்மையாக எதிர்த்து கிளம்பும் தனி நபர்கள் நிறுவனமாக்க பட்ட நிலை சக்தி அமைபுகளால் எளிதில் உளவாங்கபடுவர், உற்பத்தி சமூகம் அதன் உற்பத்தியின் கூறுகளை பாதிக்காத எந்த செயலையும் பெரிதாய் எடுக்கும் மன நிலை கொள்வதில்லை.  

           
இப்படி நிலைபாடு கொண்ட ஒரு சூழலில் ஒரு காலனி ஆதிக்கம் இங்கு நுழைகிறது. காலனி ஆதிக்க சக்தி நவீன அறிவியல் துணை  உள்ளது. அந்த அறிவியலின் துணை கொண்டு தன்னை வளப்படுத்தி கொள்ள  சுரண்டல் நிகழ்த்த நில உடமை சமூகத்தின் மீது ஒரு ஒருங்கினைக்கபட்ட நிரவாக அமைப்பை கொண்டு வர முயல்கிறது.  ஆனால் காலனி ஆதிக்கம் இந்த நில உடமை சமூகம் கண்டு ரத்த கண்ணீர் எல்லாம் சிந்தி சீர்த்திருத்தம் செய்யும் நோக்கில் வந்திருக்காது. மூலதனம் திரட்டல், தன்னுடைய உற்பத்தி கூறுகளை விரிவாக்குதல் போன்ற எண்ணங்களே காலனி ஆதிக்கத்தின்  நோக்கமாக இருந்திருக்க முடியும்.

காலனி  ஆதிக்க  வரி வசூல் சமூகத்தின் மேல் பகுதிகளிலே முதலில் நடந்தது, மன்னர் அமைப்பு , சமஸ்தானம் போன்ற நிலைகளை இந்த வகையில் சொல்லலாம். ஆனால் சுரண்டல் வலிமையானது, அதை இன்னமும் வலிவு படுத்த வரி வசூல் அதிகார அடுக்கின் உள்ளே நகருகின்றது. உள்ளே நகரும் இந்த அமைப்பு அடுக்கு நிலை நில உடமை சமுகதினை வரி வசூலுக்காக  அளவிட துவங்கியது, அளவுகளை நிர்வாக அமைப்பின் ஒரு பகுதியாக ஆவண படுத்த ஆரம்பித்தன. காலனி ஆதிக்கம் உருவாக்கிய வரி வசூல் துறை , ரயில்வே , தபால் துறை , குமாஸ்தா கல்வி  ,அதனை சார்ந்த துணை தொழில் அமைப்புகள் போன்றவை அதனுடைய சுரண்டலின் கருவிகளாகவே உள்ளே வந்தன.  இந்த வகை  நிர்வாக அமைப்பு  நாடு முழுவதும் ஏறத்தாழ ஒரே கால .கட்டத்தில் நடைமுறை படுத்த பட்டு கொண்டிருந்தது. 

நிலை சக்திகளும், அதிகார அமைப்புகளும் இந்த மாற்றதினை வழக்கம் போல உள்ளிலுத்து தன்னில் ஒரு பகுதியாய் மாற்ற தங்களுக்கு உரிய வழியில்  பெரிதும் முயன்றன. அடுக்கு அமைப்பின் வெளியில் இருந்த நிலை சமூகம் அதிகார அமைப்பினை விட தன்னை விரைவாக தகவவமைது கொண்டது. ஆனால் புதிய காலனி ஆதிக்க நிர்வாக அமைப்பின் விரிவு மிக வலுவாய் இருந்ததாலும், அதன் விட்டம் மிக பெரியதாக இருந்ததாலும் முழுக்க உள் எடுத்து செரிக்க முடியவில்லை. புதிய காலனி ஆதிக்க  நிர்வாக அமைப்பு மெல்ல நில உடமை அதிகார அமைப்பினை செயல் இழக்க செய்து அதன் மாற்றாய் உருவெடுக்க ஆரம்பித்தது. அதன்  வேர்கள்  அடுக்கின் பல நிலைகளில் பரவலாக சென்றது, ஒரே நேரத்தில் வேறு பட்ட சமூகங்களை  குமாஸ்தாகளாக மாற்றியது.

இந்த கால கட்டத்தில் காலனி ஆதிக்க நிர்வாகத்துக்கு இணையாக ஒரு அரசியல் இயக்கம் வெளியில் தோன்றி இயங்க ஆரம்பித்தது. இந்த அரசியல் இயக்கம் மன்னர்களை , பண்ணையார்களை , ஆசாரவாதிகளை மட்டுமே பங்கேடுக்க கோரவில்லை, அதை தாண்டியும் பங்கெடுப்பு கோரியது. அந்த அரசியல் அமைப்பின் குறியீடாய் இருந்தவர் ஒரு மன்னர் இல்லை , மதவாதி இல்லை , பண்ணையார் இல்லை, அவர் ஒரு வணிக சமூகம் சார்ந்தவர், சாதாரண பின்புலம் கொண்டவராய் இருந்தார. நவீன அறிவியல் காரணமாய் முளைவிட தொடங்கிய அச்சு ஊடகம் , புகைவண்டி தடங்கள், மக்களாட்சி தத்துவங்கள் போன்றவற்றை அவர் தனது  சித்தாந்தம் பரப்பும் கருவிகளாய் பயனபடுத்தினார். அந்த கருவிகள் குறித்த அவரது அறிவு இங்கு குறிப்பிடதக்கது. இந்த கருவிகள் அவராய் நேரடியாக அடுக்கு நிலையின் பல படிகளை நோக்கி  உரையாடலை கொண்டு செல்லவைத்தது. இந்த சூழலில் அந்த தலைமையை ஒத்த சாத்வீக வழி தலைமைகள் தொடர்ந்து முன் வந்தன. லட்சியவாத பார்வை கொண்ட இந்த அரசியல் செயல்பட்டாளர்கள்  தங்களுக்குள்  எதிர்தும், ஆதரித்தும் பல நிலைகளில் இருந்தாலும் மக்கள்  பிரதிநிதித்துவ அரசியல் வழி முறைகளை நம்பினர். புதிதாக வந்த மாற்று பொருளாதார் வழி முறைகளும் , பிரதிநிதித்துவ அரசியல் கோட்பாடும்தான் அடுக்கு நிலை சாதிய அமைப்பினை களைய வேண்டிய கட்டாய சூழ்நிலையை விதையாய் விதைத்தன.     

நொறுக்கி தள்ளுதல் 
---------------------
ஒரு அமைப்பின் வீழ்ச்சியை அதன் உச்சியிலும் ,வெளியிலும் இருப்பவர்கள் அதன் அடியில் இருப்பவர்களை விட விரைவில் உணர முடியும். அவர்களை ஆளவைத்த அரசியல் கண்முன்னே காலாவதியாவதை அதிகார அடுக்கிலும், நிலை சக்தி அமைபினரும்
முதலில் அறிந்தனர். இந்த சமூக கூட்டத்தில் மனசாட்சி விழிக்க பெற்றவர் சாதிய அமைப்பின் வீழ்ச்சியை வேண்டி நின்றனா். அதே நேரம் இந்த அடுக்கு அமைப்பின் உச்ச கட்ட நுகர்வார்களாய் இருந்தவர்கள் புதிய மாற்றங்களை நோக்கிய தங்கள்  எதிர்பின் குரலை 
மிக கடுமையான முறையில் வைத்தனர்.

முதலில் இந்த மாறுதலை ஊகித்த பின்னர் நிலை சக்தி சமூகங்கள்  புதிய அதிகாரதினை தன் நிறுவனங்கள் வாயிலாக எதிர்க்கும் அதே நேரத்தில்  நிலை சக்தி இடத்தில்  இருந்து புதிய அதிகார நிர்வாகத்தினை கைபற்றுதல் நோக்கியும் சென்று இருக்கிறார்கள்.
இது பழைய அதிகாரவாதிகளால் எதிர் கொள்ள படுகின்றது. இந்த அரசியல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக நிலை சக்தியின் ஒரு பிரிவினர் கருத்தியல் வன்முறையில் மதத்தின் ஆச்சாரவாததினை முன் வைத்து இயங்கி இருக்கலாம்.

கருத்தியல் வன்முறை அடுக்கு முறையின் அழிவினை தள்ளி போட தனது கடைசி யுத்ததில் இருந்தது, ஊழி பெருங்காற்றாய் தாக்கியது. அந்த காற்றுக்கு  எதிரான விசையாய் உருவான கோபம் முறையான  சிந்தாந்த வடிவம் கொண்டு பகுத்தறிவு தளத்தில் நகராமல் ஒரு பாவனையாக   மாறி  தங்கி விட்டது.   கருத்தியல் வன்முறையினை ஒட்டி வந்த  மதமும் , மதம் சார்ந்த கடவுளும் வர்ண எதிர்பின் எதிரிகளாய் ஆக்கபட்டு , கடுமையாக எதிர்க்க பட்டன. எப்போதும் வெறுப்பு, கோபம சார்ந்த எதிர்ப்பு நிலை என்பது எளிய சிந்தனை நிலைப்பாடு , அது காரணம் தேடாது, தெளிவு நிலையை அடைய விடாது. தெளிவு இல்லாமை பகுத்தறிவை அடைய விடாது. 

இவ்வகை எதிர்ப்பின் பின்னால் ஒரு நியாயம் இருந்தாலும் ஒரு உணர்ச்சி நிலை செயல்பாடு என்றே நினைக்கிறேன். மதமும், கடவுளும் அகம் சார்ந்தது. ஆதி தேடலின் ஒரு பகுதி. கையறு நிலையில் சாதாரண மனிதனுக்கு கை கொடுப்பது. கடவுள் மற்றும்  
மதங்கள் அற்ற பெருவெளியில் நின்று  எது வரினும் ஊழ் எனும் எண்ணாத   நிலை நுகர்வு நிலையில்  உள்ள  அன்றாட  மனிதருக்கு சாத்தியம் இல்லை என்று நான் நினைக்கின்றேன். நுகர்வின் பிடிகளை தாண்டிய மனிதருக்கே அது சாத்தியம். எனவே இந்த கடவுள்
மற்றும் மத எதிர்ப்பு என திசை மாறிபோன சாதிய  எதிர்ப்பு உண்மையில் சாதியின் தாக்கத்தை உடைத்து எறியவில்லை. மாறாக ஒரு மேல் மட்ட அளவில் சிறிய சலனதை உண்டு பண்ணியது மட்டுமே உண்மை. இந்த கோபமும் ஆவேசமும் முழு  உண்மையாக இருப்பின் நாம் இன்று காணும் மணமகன், மணமகள் தேவை விளம்பரங்களில் சாதியே இருந்திருக்க கூடாது.  ஆனால் அப்படி இல்லாமல் பெரும்பாலான  தொழில் இடங்களான மளிகை கடைகளில், நகை கடைகளில், மருத்துவமனைகளில்  சாதி சார்ந்த தொழிலாளர் மட்டுமே இருப்பதை காண்கிறோம். சாதி சார்ந்த போஸ்டர்கள் கூச்சமின்றி  நகரங்களில் இருந்து சிறு கிராமம் வரை ஓட்டபடுகின்றது , அதை கண்டு மனம் அசூயை கொள்வதிலை. தனி சுடுகாடும் , இரட்டை டம்ளரும் இன்னமும் உண்டு .

முரட்டு எதிர்ப்பு ஜனநாயக சாத்தியங்களை மக்களுக்கு கொண்டு செல்லவில்லை. அவரகளுக்கு குடிமை சமூகம் குறித்த விழிப்பை தரவில்லை. ஒரு அரசியல் கோட்பாட்டினை உருவாகவில்லை.  மீண்டும் பண்ணையார் தனமும், குல வழி பதவி  முறையும் 
முளைக்கும் பொழுது அதை சிந்தனை வாயிலாக எதிர் கொள்ள கருவிகள் தரவில்லை, இயற்கை ஆதாரங்கள், நுகர்வு, நுகர்வின்  எல்லைகள் போன்றவற்றின்  அவசியம் பகுத்தறிவாய் முன் வைக்க படவில்லை. பாவனையான கோபம் மட்டும் மிச்சமாகின்றது. 
இந்த வகை எதிர்ப்பை முன் வைத்த அரசியல் தலைவர்களும் இப்படி இந்த எதிர்ப்பு மனநிலை இப்படி மாறிவிடுமென எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் எனவே நினைக்கின்றேன். அவர்கள் நோக்கமும் ஒரு பெரிய சமத்துவ சமுதாயமாகவே இருந்திருக்கும். தார்மீக கோபம் முன் வைத்து அக வையமான சூழலில் சாதிய அமைபிணை உடைக்க நினைத்து இருக்கலாம். மனிதரின் அகத்தினை கோபத்தின் வழி தீண்டுதல்,அது தார்மீகமான கோபமாக இருந்தாலும் கூட  அத்தனை சுலபம் இல்லை.

உரையாடுதல்  
--------------------
மற்றொரு முறையானது சாதியதுக்கு நிலை சக்தியையோ, அதிகார சக்தியையோ மட்டும் பொறுப்பு என சொல்வதில்லை. அது சாதி அடுக்கினை சமூக பரிணாமதின் ஒரு பகுதியாய் காண்கிறது. அடுக்கு முறைக்கு அனைவருமே பொறுப்பு, இந்த அடுக்கு பல தளங்களினை கொண்டது. ஒரு அடுக்கின் கால் மற்றொரு அடுக்கின் தலை மேல் உள்ளது என உணர்வதன் மூலம் அடுக்கினை கலைக்க சொல்கின்றது. மனித சமத்துவம் வலியுறுத்த படுகின்றது. கூட்டாய் உழைப்பதான் மூலம் , பிரசாரம் செய்வதன் மூலம் இந்த அடுக்கின் மனசாட்சினை எழுப்பி மேலிருந்து கீழ் நிற்பதற்க்கு பதிலாய் கை கோர்த்து சமமாய் நிர்க்கலாம் என சொல்கின்றது. இந்த முறை இரண்டு வகையாய் சமூகதினை பிரிகின்றது. மனசாட்சி விழிப்பு பெற்றோர், விழிப்பு நிலை இல்லாதவர் என இரு நிலை மட்டும் முன் வைக்க படுகின்றது. விழிபடைந்தவர் சமூகத்தின் எந்த அடுக்கிலிருந்தும் வந்திருக்கலாம், அல்லது அடுக்கின் வெளி நிற்க்கும் நிலை சக்தி இடத்திலிருந்தும் வந்திருக்கலாம். அது முக்கியம் இல்லை. நிலை சக்தி என சில சமூகங்கள் இருந்ததை அகற்றி அந்த இடதில் ஒரு கூட்டு மக்கள்  பிரதிநிதித்துவ அமைப்பை வைக்க விழைந்தது அதன் விதிகளாய் அரசியல் அமைப்பும் , அந்த அரசியல் அமைப்பினை சார்ந்த நீதி மற்றும் காவல் அமைப்பும் முக்கியம் என்பதும் வலியுறுத்த பட்டது.
சமூகம் இத்தனை சிக்கலான அமைப்பினை கூட்டாகதான் உருவாக்கி இருக்க முடியும், எனவே கூட்டாய் உழைத்து வெளிவர வேண்டுமென அது கோரியது. விவாதம், உரையாடல் என நடைமுறைக்கு சாத்தியமான வழிகளை முன் வைத்தது. அந்த வழிகளை வலியுறுத்தி சாத்வீக வழி போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டுமென சொன்னது. சமத்துவத்துக்காக போராடுவது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்றது. உழைப்பை சுரண்டல் , உணர்வை சுரண்டல் என இருக்கும்  அடுக்கின் செயல் பட்டினை எதிர்த்தது , தங்கள் தலை மேலிருக்கும் காலினை அகற்றுதல் அடுக்கின் ஒவ்வொரு உறுப்பின் கடமை என குரல் முன் வைக்க பட்டது. இந்த சாத்வீக வழி போராட்டங்களும் ஓரளவு பயன் தருமே. ஆனால் இந்த வகை போராட்டங்கள் லட்சியவாதங்களை சார்ந்தது, அந்த வகை மனிதர்கள் அரிது. லட்சியவாதம் இருப்பினும் மக்கள் நலம் பேணும் போராட்ட குணமுள்ள ஆளுமையாக இருக்க வேண்டும். அது அதனினும் அரிது.  எனவே  இந்த வகை போராட்டங்கள் துரித ரீதியில் பரவாது. இந்த வகை போராட்டங்களுக்கு குறைந்த பட்ச நேர்மை கொண்ட காவலமைப்பும், நீதி துறையும் அவசியம் அல்லது குறைந்த பட்ச மனசாட்சி உடைய மாற்று தரப்பு தேவை,  இந்த முறை தற்போதும் நடை முறையில் உள்ளது.  எடுத்துக்காட்டாய் தற்சமயம் நடந்த  கோவில் நுழைவு , தண்ணீர் சண்டைகள் மற்ற உரிமை போராட்டங்கள் இந்த வகையிலயே சமரச படுத்த படுகின்றன.
           
இந்த சாத்வீக வழி முன் வைத்தவர் நுகர்வினை எதிர்த்தார். கிராம அமைப்பினை ஆதரித்தார். கிராம அமைப்பானது நூற்றாண்டு கால சாதியதின் மீது கட்ட பட்டது. அந்த கிராம அமைப்பினை பேணி அதே நேரம் சாதியம் பயனற்று போக செய்தல் அத்தனை நடைமுறை  இல்லை. சாத்வீக வழி முன் வைத்த தன்னிறைவு பெற்ற கிராமிய பொருளாதார்ம் என்பது லட்சியவாதம் மேல் உள்ளது , நுகர்வின்  மீது இல்லை எனவே கிராமியம் என்பது  மீண்டும் சாதிய அமைப்பாக மாற நிறைய சாத்தியம் உள்ளது என்று நான் நினைக்கிறேன்.

இன்றைய நிலை  
---------------------.----------------------------------
சாதிய அமைப்பு ஒரு உற்பத்தி சார்ந்த பொருளாதார அமைப்பு. புறவய காரணிகளால் தூண்ட பட்டு நீண்ட கால சமூக பயன் பாட்டின் காலமாக  அகவய நிலை அடைந்தது. அதனால் இதனை எதிர்க்கும் போக்கில் முதலில் புறவய காரணிகளை மாற்றுதல் அவசியம். இந்த மாற்றங்கள் நடைமுறையாக்க பட்டு சமூக பழக்கமாக மாற்ற படும் பொழுது அகத்தினை மாற்ற முடியும்.
இட ஒதுக்கீடு, இலவச கல்வி , நவீன குடிமை சமூகம் குறித்த பிரசாரம், நுகர்வு  குறித்த விழிப்பு, நவீன அறிவியல் , அறிவியல் வழி வரும் வேலை வாய்ப்பு, அதன் அடுத்த கட்ட்மான புதிய தொழில் முதலீடுகள் போன்ற கருவிகள் வழி  சாதியத்தின் அடுக்கு முறை அமைப்பினை பயனற்று போக செய்ய முடியும். சாதியின் பெயரால் பிளவுண்டு கிடப்பது லாபமாக இல்லாமல் போகும் பொழுது சமூகம் அதனை தாண்டி செல்லும். சாதி பல நூறு ஆண்டுகளாக சமூக மனதில் கட்ட பட்ட ஒரு பயிற்சி, அதனை பிரிவு, மற்றும் அடக்கு முறை சக்தி எனும் நிலை பாட்டிலிருந்து நகர்த்தி ஒரு பயனற்ற பழைய சமூக செயல் எனும் இடத்துக்கு கொண்டு செல்லலாம்.

நமக்கு கிடைத்த சில லட்சியவாத தலைவர்கள் இந்த நவீன கருவிகளில் சிலவற்றை நடை முறை சாத்தியம் செய்து விட்டு சென்று இருக்கிறார்கள். அந்த நடைமுறை படுத்த பட்ட கருவிகளின் பலன் இப்போது வர தொடங்கி உள்ளது. நுகர்வு மட்டும் மேலோங்கிய மன நிலையில் ஒரு சினிமா அல்லது கிரிக்கெட்  பார்ப்பது போல சமயத்தில் வரலாற்றை காண்கிறோம். ஆரம்பித்து , மட்டையடி அடித்து மிக விரைவில் ஒரு சுகமான முடிவுக்கு வர வேண்டுமென விளைகிறோம். நிஜ வாழ்வில் பெரும்பாலும் சாமான்யர் நடுவே  வில்லன்கள் கிடையாது, போட்டி அணிகள் கிடையாது. மாற்று தரப்பு மட்டுமே உண்டு. அவர்களும் மனிதர்களே. நமக்கு உள்ளது போல உணர்ச்சியும், உரிமையும் அவருக்கும் உண்டு என்பதை உணர வேண்டும். அதை நேரத்தில் அவருக்கு உள்ளது போல நமக்கும் உணர்வும் உரிமையும் உள்ளதென்பதில் தெளிவாய் இருக்க வேண்டும்.மாற்று கருதாளரிடமும்  சமூக பங்கினை கோருவோம். நமது சமூக பங்கினை முன் வைப்போம. சமூக பங்கு என்பது சமூக சேவை என்பது மட்டும் அல்ல, வெறுப்பும், திரிப்பும் மட்டும் அன்றி உரையாடல் , மக்களாட்சி விழுமியங்கள் வழி  குடி மகனாய் இருக்க முயல்வதும் சமூக பங்கேனவே நினைக்கிறேன்.
    
இந்த நவீன கருவிகள் உண்டாக்கும் மாற்றங்கள் மெல்ல  நடந்து கொண்டுதான் இருக்கின்றது. போக்குவரத்து டிக்கெட் வாங்கும் பொழுது  சாதியின் பெயரால் வாங்குவதில்லை , வசதியின் பெயரால் வாங்குகிறோம். உடன் பயனிபவர் சாதி பார்ப்பதில்லை,நமது வசதியை பார்க்கின்றோம் திருப்பதியிலும், பழனியிலும் கூட்டத்தில் முந்தும் பொது முன்னாலும், பின்னாலும் இருப்பது எந்த சாதி என சலனம் கொள்வதில்லை..இவையெல்லாம்  ஒரு சிறிய உதாரணமே. இது போன்ற பல சிறு  செயல்கள்  சாதியை தாண்டி நடந்து கொண்டுதான் இருக்கின்றது. நுகர்வின் கனவுகள் மிக எளிதில் சாதியை தாண்டும் தன்மை கொள்ளும்.ஆனால்  நுகர்வின் பேராசைக்கும் ஒரு கடிவாளம் வேண்டும். அது வேறு பிரச்னை  
      
மானுட இணைப்புக்க்கான சாத்தியங்களை நவீன அறிவியல் மற்றும் நுகர்வு சார்ந்த பொருளாதார சித்தாந்தங்களே நிருவமுடியும் . நுகர்வு வெறி , நுகர்வு விழிப்பு நிலைக்கு மாறும் பொழுது இந்த வகை சித்தாந்தம் சமநிலை படும்.  அந்த இடத்துக்கு செல்வதான பாதை காந்திய வகை சார்ந்த சமரச மற்றும் உரையாடல் சார்ந்தே அமையும் என நினைக்கிறேன்.

சில எண்ணங்கள், சில வினாக்கள்

 வைதீகம்  வேறு இந்து மரபு வேறு என்றே நான் நினைகிறேன். வேதம் குறித்த எந்த எண்ணமும் இல்லாத பல குடும்பங்கள் இந்து வழிபாட்டு முறையில் உள்ளன. அந்த வழிபாட்டு முறையை பேணுகின்றன. குறிப்பிட குல  சடங்குகள் வைத்துள்ளன. அந்த  முறை முழுக்க முழுக்க அந்த குடும்பங்களின் உள்ளுணர்வால் அவர்களின் பழுங்குடி வடிவத்தில் இருந்து முளைத்து வந்ததே என்று  நினைகின்றேன். அவை வேத பின்னணி கொண்டோ, மந்திர பின்னணி கொண்டோ இருப்பதன் அவசியம் இல்லை.அது ஒரு எளிய நம்பிக்கை சார்ந்த அமைப்பு. அதுவே அதன் பலம் , அதுவே அதன் பலவீனம்.
 எளிய நம்பிக்கை சார்ந்த அமைப்பின் பலம் அதற்க்கு எந்த  மூல நூல்  கிடையாது , ஒற்றையான பார்வை கிடையாது.  மாறும் காலகட்டத்தின் மாறும் அறமாய் முளைப்பவை மேல் அது நிற்கின்றது. அதனால் அதன்  வரையறைகள்  மாறி கொண்டே இருப்பது, வளருவது. அது நிற்பது தனது  நம்பிக்கையின் பெயரில், தனது மாற்றின் வீழ்ச்சியில்  அல்ல, அங்கு மாற்று என்ற ஒன்றே இல்லை. இந்த நம்பிக்கை சார்ந்த வழிபாடிற்கு புதிய உறுபினர்களை உள்ளுக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இல்லை. புதிய நம்பிக்கைகள் முளைக்கும் சமயம் அதனை தொட்டு அந்த நம்பிக்கையும் எளிய வடிவில் சுருக்கி உள்ளே கொண்டு வர கூடியது. நிறுவன அமைப்பு இல்லாதது. இந்த பன்முக நம்பிக்கை அமைப்பினை தொகுக்கலாம். ஆனால் தொகுப்பின் உள்ளே தற்சமயமும் தனி தனியே நிற்க கூடியது. மனிதரின் அன்றாட லௌகிக வாழ்வோடு முளைத்து கிளைத்து வேர் விட்டு வளர்ந்து வந்தது. அந்த உள்ளிருந்து முளைக்கும் இயல்பே இந்து வாழ்வு முறையின்  நெகிழ்வின் காரணம். உள்மனம் என்பது புற காரணங்களால் மாறும் பொழுது எளிதில் வழிபாடு நெகிழ்ந்து மாறி கொள்கின்றது.

அதன் பலவீனம் அதன் நம்பிக்கை சார்ந்த பன்மை தன்மையே. மூல நூல்காரர்கள் பெரும் நிறுவன வடிவில்  அரசு. ஆலயம் , நூல் வடிவம் கொண்டு தங்களை நிறுவி  கொண்டு வலுவாய் தங்களை முன் வைத்து பன்மை தன்மையினை புரிந்து கொள்ள தவறும் பொழுது தங்களின் பன்மை தன்மையை பலமாய் முன் வைக்கும் தொகுப்பு நிலைப்பாடு இந்து வாழ்வு முறைக்கு அமையவில்லை. லௌகீகம் சார்ந்த நம்பிக்கை வடிவம் ஆனதால்  உற்பத்தி சாதனங்களோடு மிகுந்த தொடர்புடையவை. உற்பத்தி சாதனங்கள் தேங்கும் பொழுது உருவாகும் உருவாகும் தடுமாற்றத்தினால் எளிய நம்பிக்கை மிக இறுகி போகும் தன்மை உடையது. பன்மைய நம்பிக்கை தன்னை உணர ஒரு விரிவான இணைப்பு வேண்டும், கல்வி அமைப்பு வேண்டும், சமூகங்களுக்கு இணையான தொடர்பு வேண்டும , அது 
இல்லாமல் போனது. பன்மைய அமைப்பு பல சிறு நம்பிக்கைகளை உண்டாக்குவதன் மூலம் பல சிறு குழுக்களை உண்டாக்குகின்றது.இன்னும் விரிவாய் சொல்ல எண்ணுகின்றேன், வார்த்தைகள் அமையவில்லை.  

இந்த பலமும் , பலவீனமும் கொண்ட அமைப்பே அடிப்படை இந்து வாழ்வு முறை என எண்ணுகின்றேன். இதன் உள்ளே தான் பௌத்தமும், ஆசிவகமும், சமணமும் நடமாடி வந்தன. இந்த மதங்கள் இந்த வாழும் முறையினை தொகுக்க நினைக்கவில்லை, இதனூடே தழைத்து வளர்ந்து தத்துவம் உருவாக்கி வந்தன. பள்ளிகள் நிறுவ பட்டன. அறகோட்பாடுகள் கவிதை வடிவில் எழுத பட்டன. ஆனால் இந்த வகை முயற்சிகள் பின் வந்த வழி முறைகளில் காணாமல் போயின. 

கணியன் பூங்குன்றனாரின் அந்த மாபெரும் கவிதை என்னுள் பல கேள்விகளை தருகின்றது. இது ஒற்றை பாடலா அல்லது ஒரு பெரும் அற நூலின் ஒற்றை கவிதையா? யாரிடம் சொல்கிறார்?  அவரது எதிர்பார்பென்ன?  இந்த பாடலில் உருக்கம் இல்லை ,கண்ணீரில்லை, மன்றாடுதல் இல்லை,  கோபம் இல்லை, பக்தி இல்லை ,வழிபாடு இல்லை, தன்னை தாழ்த்தி கொள்ளவில்லை. இது பரமாத்மாக்களை குறித்த பாடல் போல தெரியவில்லை. ஒரு சமூக விழிப்பின் குரலாகவும், ஒரு கல்வி பேராசானின் குரலாகவும் படுகின்றது.  இது  போன்ற குரல்கள் ஒரு பெரும் வரலாற்றின் முதல் எழுத்தாய் கூட இருந்திருக்க வாய்ப்புண்டு.  இவைகள் மந்திரங்களை முன் வைக்கவில்லை, பெரும் தத்துவங்களை குறுக்கி விதையாய் மாற்றவில்லை, சிந்தனையை வெறும் வழிபாடாக மாற்றவில்லை. இந்த வகை சிந்தனைகள்  உற்பத்தி சாதனங்களை மாற்றும் வழி தேடும் சாத்தியமுடையது என படுகின்றது. இவையும் இந்து வாழும் முறையின்  ஒரு பகுதிதான். பின்னர் இது போன்ற சமூக மாற்ற சாத்தியங்கள் தொலைந்து  போயின. 
      
எளிய நம்பிக்கை வடிவான இந்து  வாழ்வின்  மீது பல்வேறு வைதீகம் முதற்கொண்டு  மூல நூல் அமைப்புகள் இயங்குகின்றன. வைதீகம் காலத்தே வெகு முன் தோன்றி  இந்து நம்பிக்கை வழி தொடர்பில் இருந்ததால் , வைதீக மதமும், இந்து வாழ்வு முறையும்  ஒரே போல் ஆயின.  இதில் பக்தி இயக்கத்தின் பங்கு மிக பெரியது. இந்து வாழ்வு முறையின் பன்மை தன்மையை வைதீகமும் முழுதும் உண்டு செரிக்கவில்லை. அதுவும் துவக்கத்தில்  தன்னை செல்வத்தோடும், அதிகாரத்தோடும் தொடபுடைய இடங்களோடு நிறுத்தி கொண்டது.  தற்சமயம் வைதீகம் தன்னை இந்து மதமாய் அறிவித்து கொண்டு வாழ்வு முறையை மதமாய் மாற்றி கொண்டு வருகின்றது என்று நான் நினைக்கின்றேன்.    இந்த இடம் இன்னும் எனக்கு தெளிவாகவில்லை.

வைதீகமே இந்து வாழ்வு முறை எனவும், வேதமே அதன் முழு முதல் நூலெனவும் ஒப்பவில்லை. வைதீகம் மதம், இந்து என்பது ஒரு எளிய நம்பிக்கை சார்ந்த வழிபாடுடைய வாழும் முறை. பெளத்த ,சமண, ஆசிவகம் போல வைதீகம் இந்த வாழும் முறையின் உள்ளே 
தோன்றி மதமாக வளர்ந்திருக்கலாம். இன்று அது ஊடு பயிராக முளைத்து ஒட்டு பயிராக மாறி இருக்கலாம், ஆனால்  அதுவேதான் இந்து மதம் என சொல்ல கூடாதென படுகின்றது.  

 வேதம் என்பது வைதிக மரபின் சுருதி. ஆனால்  வைதிக மதம் அதை சுவீகாரம் செய்து சுருதியாகியது என புரிந்து கொள்ளலாமா? இல்லையென்றால் இரண்டாயிரம் ஆண்டு அறிவு தொகுப்பாக கருதப்படும் வேதம் என்பது ஒரு குறிப்பிட்ட மரபினரால் மட்டுமே உருவாக்க பட்டது என ஆகும். அப்படி என்றால் இரண்டாயிரம்  ஆண்டுகள் இந்த மண்ணில் வேறு எந்த அறிவு வடிவமும் இருக்கவில்லை, மற்ற  எந்த பழங்குடி மரபும்  அறிவை  தொகுக்கவில்லை என கொள்ளலாமா?



ஐரோப்பிய காலனிய ஆதிக்கம மக்களிடையே ஒரு வெளிப்படையான தகவல் தொடர்பினை சாத்திய படுத்தியது. தகவல் மிக முக்கியமானது, வலிமையானது. தகவல்கள் ஒரு தனி மனிதனால் எவ்வாறு உள்வாங்க படுகின்றது, ஒரு சமூகத்தினால் எவ்வாறு உள்வாங்க படுகின்றது என்பது வரலாற்றின்  பக்கங்களை மிக வேகமாக புரட்ட கூடியது. அதை குறைத்து மதிப்பிட கூடாது. 
விழிப்புணர்வின் முதல் புள்ளி தகவலே என எனக்கு படுகின்றது. தகவல் சமூக  மனதினை புரிதல் ,அறிதல் என தளங்களுக்கு  நகர்த்தும் சாத்தியம் உடையது. நான் முன்பு வைத்த எளிய இந்து வாழும் முறையில் இருந்த மக்கள் முதலில் தகவல்களின் காரணமாய் தங்களை ஒரு பெரும் உலகின் பகுதியென உணர்கிறார்கள், தங்களை போன்ற மனிதர்கள் பிற இடங்களில் வாழும் முறையினையும், அவர்களது தொழிலையும்  கற்கிறார்கள். இந்த இடம் புரிதல் இடம் என கொள்ளலாம். 
இவர்களின் இந்த விழிப்புணர்வினை எதிர்த்து குரல் வருகின்றது.  இந்த புள்ளியில் தங்கள் உரிமையினை, தங்களது உணர்ச்சியினை, வலிமையினை உணரும் சமூகம் தனது வழியில் வரும் தடைகளோடு மோதி உடைகின்றது. மோதல் நிகழும்  முறையோ, அதன் ஒழுங்கோ எல்லா வழியிலும இருக்க சாத்தியம்.  
தீண்டாமை ஒழிப்பு யாரால் வெளிப்படையாக எதிர்க்க பட்டது, ஆலய பிரவேசம் யாரால் வெளிப்படையாக எதிர்க்க பட்டது , சதி ஒழிப்பு யாரால் எதிர்க்க பட்டது , இட ஒதுக்கிடு யாரால் எதிர்க்க பட்டது, பகுதி நேர கல்வி/ குல கல்வி யாரால் முன் வைக்க பட்டது என்றுதான் சமுதாயம் பார்த்து இருக்கின்றது. இது நிகழும் நேரம் வரலாறு கல்வியாக பட்டு முறையாக பயில படாத காலம் என்பதை கணக்கில் கொள்ளுதல் வேண்டும், இந்த இடத்தில பல வகை பிரசாரங்களும் , வரலாற்று உருவாக்கங்களும் சாத்தியம். அதுவே நிகழ்ந்தது.  இந்த வழியில் யோசித்து பார்த்து என்னை  தெளிவு படுத்தி கொள்ள முடியும் என நினைகின்றேன். சரியாக இன்னும் விரிவு கிடைக்கவில்லை.

Tuesday, May 29, 2012

பகுத்தறிவு

பகுத்தறிவு என்பது புறவயமான  தர்க்கத்தினை மட்டுமே அடிப்படையாக கொண்ட ஒரு அணுகுமுறை என்று ஒரு வழக்கு உண்டு . இந்த வரையறை பகுத்தறிவின் வெளிபாடினை குறுக்குவதாய் நினைகின்றேன். பகுத்தறிவு என்பது புறவய சுழலில் விழிப்புணர்வினை தேடும் ஒரு பயணம். புறவய சுழலில் விழிப்புணர்வு என்பது ஒரு மனிதன் தனது உரிமையையும் , உணர்வையும் புரிந்து கொண்டு தனது சக மனிதனது  உரிமையையும் ,உணர்வினையும் மதிக்க கற்று கொள்ளல் என்று நினைகின்றேன்.

 இந்த பயணத்தின் பொது தருக்கம் கருவியாக உதவுகின்றது. தருக்கம் ஒரு கருவியே. தருக்கம் விளக்க முடியா இடங்கள் உண்டு. பகுத்தறிவு அந்த இடைவெளிகளிக்கான  தருக்கங்கள் இன்னும் உருவாக்க படவில்லை, ஆனால் அவ்வகை தருக்கங்கள்  சாத்திய படும் என  அந்த தருக்கங்களை அமைக்கும் முறையை பகுத்தறிவு தேடுகின்றது. அறிவின் முடிவின்மை எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்கு அந்த முடிவின்மையை தேடும் தருக்கங்கள் அமைக்க செல்லும் பயணங்களும் உண்மை.  நிருபனவாத  அறிவியலும் ,தொழில்நுட்பமும் அந்த தருக்க அடிப்படை கருவிகளே. இந்த கருவிகள் தொடர் மேம்பாட்டின், சுய உடைப்பின் மீதே அடுத்த தளத்துக்கு செல்கின்றது. தருக்கம் தீர்ந்து போவதால் பகுத்தறிவு தீர்ந்து போவதில்லை, புதிய தருக்கங்களை உருவாக்குவதில்தான் பகுத்தறிவின்  வளர்ச்சி  உள்ளது.
நம்பிக்கை அடிப்படையிலான மதம் தங்களது கருத்துகளை சக மனிதனது உரிமையையும் , உணர்வினையும் ஒடுக்க பயன்படுத்தும் தருணங்களிலே மோதல் வருகின்றது. ஒரு உயர்ந்த குடிமை சமுகமே பகுத்தறிவின்  வழியாய்  இருக்க முடியும். அந்த வழிகள்   புனிதமானவை அல்ல. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. உடைக்க உடையாதவை அல்ல. அதன் பயன்பாட்டாளர்கள் நுண்ணறிவு கொண்ட ஞானிகள் அல்ல. அது இருக்க பட வேண்டிய இடம் ஆலயங்கள் அல்ல.
பகுத்தறிவு அனைவருக்கும் பொது. எனவே அது ஆவணபடுத்துதல்,அளவீடு செய்தல், அனைவர்க்கும் பொதுவான கல்வி அமைப்பினை பரவலாக்குதல் போன்ற செயல்முறைகளை தனது நெடிய பயணத்தில் துணையாய் கொள்கின்றது. இதில் செயல் முறைகளில் குறைபாடுகள் உண்டு , ஓர வஞ்சனை உண்டு ,   ஏன்  என்றால் பகுத்தறிவு சகல மானுடரின் பங்கையும் கோருகின்றது. அனைவரும் ஒரே செயல் திறம், சிந்தனை கொண்டிருபதில்லை. தனி மனித குறைபாடு பகுத்தறிவின் குறைபாடாய் தெரியலாம், ஆனால் இந்த குறைபாடுகளை ஒத்து கொள்ளவவும் பகுத்தறிவு அமைப்பு மறுப்பதில்லை